Showing posts with label அபிஷேக திரவியங்கள் தரும் பலன். Show all posts
Showing posts with label அபிஷேக திரவியங்கள் தரும் பலன். Show all posts

அபிஷேக திரவியங்கள் தரும் பலன்

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு உகந்த திரவியங்கள் : பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலியன.


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


அபிஷேகப் பொருட்களின் வரிசைக் கிரமம் : எண்ணெய், பஞ்சகவ்யம், மாவு, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன், கரும்பின் சாறு, (பழங்கள்), பழ ரசங்கள், இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், ஸ்நபனம்

அபிஷேக திரவியங்கள் தரும் பலன் :
****************************************

சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும்,

மணம் உள்ள தைலம் - சுகம் தரும்,

பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும்,

பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும்,

நெய் - மோக்ஷம் அளிக்கும்,

பால் - வாழ்நாள் வளர்ச்சி,

தயிர் - மக்கட் செல்வம் தரும்,

மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும்,

தேன் - சுகம் தரும்,

பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும்,

வாழைப்பழம் - பயிர் செழிக்கும்,

பல்லவம் - உலகை வயப்படுத்தும்,

மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும்,

மாதுளை - கோபத்தை நீக்கும்,

கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும்,

நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,

எலுமிச்சை - மரணபயம் நீக்கும்,

சர்க்கரை - பகை களையும்,

இளநீர் - இன்பங்கள் நல்கும்,

அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும்,

சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

பஞ்சகவ்யம் : கோமயம் (பசுஞ்சாணம்), கோஜலம், நெய், தயிர், பால், இவைகளைக் கலந்து, பஞ்சப் பிரம்மத்தினால் பூஜித்து, பிறகு அபிஷேகத்துக்கு உபயோகிக்க வேண்டும்.

பஞ்சாமிர்தம் இரு வகை :

(1) ரஸ பஞ்சாமிர்தம் - ஏலக்காய் முதலிய வாசனைப் பொருட்கள் சேர்த்த நீருடன் பால், தயிர், நெய், சர்க்கரை, தேன் இவைகளைச் சேர்த்துச் செய்யப்படுவது.

(2) பல (பழ) பஞ்சாமிருதம் - மேற்குறிப்பிட்ட பொருட்களுடன், முக்கனியும் (வாழை, பலா, மா) மற்றுமுள்ள பழங்களையும் கூட்டிச் செய்வது

நாகப்பழம் : மாதுளை, எலுமிச்சை, புளி, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மா, பலா - ஆகிய பழங்கள் பூஜைக்குச் சிறந்தவை.