Showing posts with label பிரார்த்தனை செய்வோம்……..!!!. Show all posts
Showing posts with label பிரார்த்தனை செய்வோம்……..!!!. Show all posts

பிரார்த்தனை செய்வோம்……..!!!

பிரார்த்தனை செய்வோம்……..!!!

பிரார்த்தனையை எவ்வாறு செய்ய வேண்டும்? யாருக்காகச் செய்ய வேண்டும்? அதற்கான 10 அம்சங்கள்…

* நாள்தோறும் சில நிமிடங்களைப் பிரார்த்தனைக்காக ஒதுக்கி வையுங்கள். அப்போது மனதில் எந்த சலனமும் இல்லாது கடவுளைப் பற்றி மட்டும் நினைத்துப் பழகுங்கள்.

* இயல்பாக சாதாரண வார்த்தைகளில் உங்கள் மனதில் உள்ளதைக் கடவுளிடம் சொல்லுங்கள்.

* பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும், அலுவலகங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் பொழுதும் கடவுள் உங்கள் எதிரே இருப்பதாக நினைத்து ‘குட்டி’ பிரார்த்தனை அடிக்கடி செய்யுங்கள்.

* எப்போதும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்காதீர்கள். கடவுள் ஏற்கெனவே கொடுத்ததற்கு நன்றி செலுத்துங்கள்.

* உங்கள் பிரார்த்தனைகள் உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு கடவுளின் அன்மையும், பாதுகாப்பையும் தரும் என்று நம்புங்கள்.

* பிரார்த்தனையின் போது கசப்புணர்வும், பகைமை உணர்ச்சியும் மனதில் தலைதூக்க இடம் கொடுக்காதீர்கள்.

* கடவுளிடம் கேட்க வேண்டியதைக் கேளுங்கள். ஆனால் அவர் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருங்கள். நீங்கள் கேட்டவைகளை விட அவர் கொடுப்பது சிறந்ததாகவே இருக்கும்.

* ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு இயன்றதைச் செய்யுங்கள். பலன் தருவதும் தராததும் அவர் விருப்பம்.

* உங்களைப் பிடிக்காதவர்களும், உங்களைச் சரியாக நடத்தாதவர்களும், நலம் பல பெற்று வாழப் பிரார்த்தனை செய்யுங்கள்.

* யார் யாருடைய நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வது என்று எண்ணிக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தால், அதைவிட அதிகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும்