நாச்சியார் கோவிலின் சிறப்பு தகவல்கள் - Nachiyar-Temple

நாச்சியார் கோவிலின் சிறப்பு தகவல்கள் - Nachiyar-Temple

வேறெந்த திவ்ய தேசத்திலும் காண முடியாதபடி ஆகம சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து இலக்கணங்களுக்கும் பொருந்துமாறு அமையப் பெற்ற அழகான திருக்கோலம்.




                     
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
"Master your Skills " with our Research Head
For Appointment  - Whatsapp - 9841986753

நாச்சியார் கோவில்
கோவிலின் பெயர் : ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில், நாச்சியார் கோவில், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
மூலவர் : ஸ்ரீனிவாசன் (திருநறையூர் நம்பி, வியூக வாசுதேவன், சுகந்தவன நாதன்)
கோலம் : கிழக்குப் பார்த்த நின்ற திருக்கோலம்

 தாயார் : நம்பிக்கை நாச்சியார் (வஜ்ஜுள வல்லி)
உற்சவர் : மூலவருக்குள்ள அதே பெயர்களே
விமானம் : ஹேம விமானம், சீனிவாச விமானம்
தீர்த்தம் : மணிமுத்தா புஷ்கரணி, ஸங்கர்ஷன தீர்த்தம், பிரத்யுமன தீர்த்தம், அநிருத்த தீர்த்தம், ஸாம்ப தீர்த்தம்.
காட்சி கண்டவர்கள் : பிரம்மா, மேதாவி முனிவர்.
பாசுரங்கள் : 110

சிறப்புகள் : பிரம்மாவின் தோஷம் நீங்கிய தலம், சப்த ரிஷிகளும் தவம் செய்த தலம். பெருமாள் இங்கு திருமணக் கோலத்திலேயே எழுந்தருளி உள்ளார். வேறெந்த திவ்ய தேசத்திலும் காண முடியாதபடி ஆகம சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து இலக்கணங்களுக்கும் பொருந்துமாறு அமையப் பெற்ற அழகான திருக்கோலம்.

கல்கருட சேவை மிகவும் விசேஷம். முதலில் 4 பேர்கள் தூக்குவார்கள். வெளியே வரவர கடைசியாக 64 பேர் தூக்கும் அளவிற்கு கருடாழ்வார் எடை கூடி விடுவதாகக் கூறுவார்கள். கருட பகவானுக்கு 7 வாரங்கள் அர்ச்சனை செய்தால் திருமணப் பேறு, குழந்தைப் பேறு உண்டாகும். 108 திவ்யதேசங்களில் உள்ள பெருமாள்களையும் இங்கு விக்கிரக வடிவில் காணலாம்.