கண் நோய் நீங்க வெள்ளீஸ்வரர் திருக்கோவில் - Mylapore-Velleeswarar-Temple

கண் நோய் நீங்க  வெள்ளீஸ்வரர் திருக்கோவில் - Mylapore-Velleeswarar-Temple

இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் வெள்ளீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.


கண் நோய் நீங்க  வெள்ளீஸ்வரர் திருக்கோவில் - Mylapore-Velleeswarar-Templeகண் நோய் நீங்க  வெள்ளீஸ்வரர் திருக்கோவில் - Mylapore-Velleeswarar-Temple
கண் நோய் நீங்க  வெள்ளீஸ்வரர் திருக்கோவில் - Mylapore-Velleeswarar-Temple
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

வெள்ளீஸ்வரர் திருக்கோவில்

மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார்.

அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி.

உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு.

இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.

பஞ்சாங்க நமஸ்காரம்- அஷ்டாங்க நமஸ்காரம்-உத்தம நமஸ்காரம்

 பஞ்சாங்க நமஸ்காரம்- அஷ்டாங்க நமஸ்காரம்-உத்தம நமஸ்காரம்

மூன்று வகையான இறை வழிபாடு

கோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.


பஞ்சாங்க நமஸ்காரம்- அஷ்டாங்க நமஸ்காரம்-உத்தம நமஸ்காரம்
பஞ்சாங்க நமஸ்காரம்- அஷ்டாங்க நமஸ்காரம்-உத்தம நமஸ்காரம்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

மூன்று வகையான இறை வழிபாடு

கோவிலுக்குச் சென்று வழிபடும் நம்மவர்கள், இறைவனை தரிசித்து விட்டு, பிரகாரத்தை வலம் வருவார்கள். சிலர் வெளிப்பிரகாரத்தை ஆலயத்தோடு வலம் வந்து வழிபட்டு விட்டு, கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். இந்த வழிபாட்டையும் சேர்த்து மொத்தம் மூன்று வகையான இறை வழிபாடுகள் இருக்கின்றன. அதைப் பற்றி பார்ப்போம்.

பஞ்சாங்க நமஸ்காரம்:- இந்த வகையான வழிபாட்டு முறை பெண்களுக்கு உரித்தானது. இப்படி இறைவனை வணங்கும்போது, பெண்கள் தங்களுடைய பஞ்ச அங்கங்கள் (பஞ்சம்- ஐந்து, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படி விழுந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் தலை, இரண்டு முழங்கால்கள், இரண்டு பாத நுனிகள் பூமியில்படும் படி விழுந்து வணங்க வேண்டும். இப்படி வழிபாடு செய்வதால் இறைவனுடைய பூரண நல்லாசி கிடைக்கும்.

அஷ்டாங்க நமஸ்காரம்:- இந்த வகையில் இறைவனை வணங்குவது ஆண்களுக்கு மட்டுமே உரித்தானது. இந்த வழிபாட்டு முறையில் அஷ்டாங்கமும் (அஷ்டம்-எட்டு, அங்கம்- உடற்பாகம்) தரையில் படும்படியாக விழுந்து, இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து வணங்க வேண்டும். தலை, முகம், இரண்டு தோள்பட்டைகள், உடல், இரண்டு முழங்கால்கள் மற்றும் பாத நுனி ஆகிய எட்டு பகுதிகளும் தரையில் படும்படியாக படுத்துக் கொண்டு இறைவனின் திருப்பாதத்தை சரணடைவதாக நினைத்து வணங்க வேண்டும். இந்த வகை வழிபாட்டால், நம்முடைய வாழ்வில் உண்டான பாவங்கள் நீங்கி நமக்கு நற்கதி கிடைக்கும்.

உத்தம நமஸ்காரம்:- நம்முடைய கரங்களின் ஓடும் கைரேகையில் லட்சுமி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதனை வேத ரேகைகள் என்றும் அழைப்பார்கள். அந்த வேத ரேகைகள், மந்திர உபதேசங்கள் நிறைந்த நமது இரண்டு கரங்களையும் இணைத்து, இதயத்திற்கு அருகில் மார்பின் மையத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மனதில் இறைவனின் மந்திரங்களைக் கூறி வழிபட வேண்டும். மனிதனின் ஆத்ம இருப்பிடமான இதயத்தில் இருந்து வணங்கும்போது, அதை இறைவன் செவிசாய்த்துக் கேட்பான் என்பது ஐதீகம். இந்த முறைக்கு ‘உத்தம நமஸ்காரம்’ என்று பெயர்.

விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகிறது

 விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகிறது


 விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகிறது


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753



 விநாயகருக்கு உகந்த தினங்களில், விநாயகருக்கு உகந்த இலைகளைக் கொண்டு அர்ச்சித்தால் அந்த அந்த இலைக்கு உகந்த பலன்களை பெறலாம்.

மேலும் இந்த இலை வழிபாட்டை விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தியிலும் இந்த

இலை வழிபாட்டை மேற்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்.

* முல்லை இலை கொண்டு வழிபட்டால், அறம் வளர்க்கும்.

* கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்துக்குத் தேவையான பொருட் சேர்க்கை நிகழும்.

* வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால், விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.

* அருகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!

* இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறலாம்.

* ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பெருந்தன்மையான மனம் பெறலாம்!

* வன்னி இலை கொண்டு வழிபட்டால், பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

* நாயுருவி இலையால் வழிபட்டால், முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜசுடன் வாழலாம்!

* கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால், வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.

* அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால், எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

* எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.

* மருதம் இலையால் வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும்.

* விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால், தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

* மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

* தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்