Why offer Coconut and banana to god

 Why offer Coconut and banana to god

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

Why offer Coconut and banana to god
Why offer Coconut and banana to god
Why offer Coconut and banana to god

 

Navarathri Festival Days and highlights in Tamil

  

Navarathri Festival Days and highlights in Tamil 
Navarathri Festival Days and highlights in Tamil 
















வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas

  வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas

எதையும் சாதிக்கும் வல்லமை தரும் வாராகி காயத்ரி மந்திரம்

 வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas
 வாராகி காயத்ரி மந்திரம் - Varahi-Amman-slokas

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.

வாராகி அம்மன்

ஓம் ச்யாமளாயை விக்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்


இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராகி அம்மனை வழிபடுவது சிறந்தது.

குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham

 குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham

குரு பகவானின் பூரண அருளை பெற உதவும் வியாழக்கிழமை விரதம்

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.


குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham
குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham
குரு பகவானின் வியாழக்கிழமை விரதம் - Guru-Bhagavan-viratham 

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

குரு பகவான்

வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. மாலையில் மஞ்சள் நிற இனிப்புகள், ஆடைகள் போன்றவற்றை வறிய நிலையில் இருப்பவர்களுக்கு தானமளிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.

சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam

  சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam


சிவபெருமானைப் பொறுத்தவரை, அவரது 64 வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக வணங்கப்படுகின்றன. அதோடு சிவபெருமானும் கூட, மகாவிஷ்ணுவைப் போல சில அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.


 சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam
சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam
 சிவபெருமானின் சில அவதாரங்கள் - sivaperuman-avatharam

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

சிவன்

உலக உயிர்களைக் காக்கும் பொருட்டு, இறைவன் பூமியில் தோன்றுவதை ‘அவதாரம்’ என்கிறோம். அந்த வகையில் மகாவிஷ்ணு பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் 10 அவதாரங்கள் பெருமைமிக்கதாக போற்றப்படுகிறது. சிவபெருமானைப் பொறுத்தவரை, அவரது 64 வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக வணங்கப்படுகின்றன. அதோடு சிவபெருமானும் கூட, மகாவிஷ்ணுவைப் போல சில அவதாரங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

நந்தியம்பெருமான்

நந்தியானவர், சிவபெருமானின் வாசல் காப்பாளன். அவரது அனுமதியின்றி எவரும் ஈசனைக் காண இயலாது என்று புராணங்கள் சொல்கின்றன. அதோடு அந்த நந்தியும் கூட, சிவபெருமானின் ஒரு அவதாரமே என்றும் சில புராணங்கள் சொல்கின்றன. பெரிய காளையின் தோற்றத்தில் இருக்கும் நந்திக்கு, சிவாலயங்கள் அனைத்திலும் வழிபாடுகள் இருப்பதை நாம் காண முடியும். பிரதோஷத்தின் போது, இந்த நந்தியே வழிபாடுகளில் முக்கியமானவராக இருப்பார். மந்தைகளின் பாதுகாவலனாக, சிவபெருமானின் இந்த நந்தி அவதாரம் பார்க்கப்படுகிறது.

ரிஷபம்

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து திருப்பாற்கடலைக் கடைந்தனர். இந்த நிகழ்வுக்குப்பிறகு, பாதாள உலகத்திற்குச் சென்று சில காலம் தங்கினார், மகாவிஷ்ணு. அப்போது அங்கிருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்து மயங்கினார். அவர்களுக்கு பல பிள்ளைகள் பிறந்தன. ஆனால் அவர்கள் அனைவருமே அரக்கத்தன்மை கொண்டவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் தொல்லைகளை அளித்து வந்தனர். இதையடுத்து தேவர்கள் அனைவரும் சிவபெருமானை வேண்டி நின்றனர். சிவபெருமானும் ‘தருமம்’ என்னும் ரிஷப வடிவம் கொண்டு, விஷ்ணுவின் பிள்ளைகள் அனைவரையும் அழித்தார். தன் மகன்களை அழித்த, காளையுடன் சண்டையிட வந்தார் விஷ்ணு. ஆனால் அது சிவபெருமானின் அவதாரம் என்பதை அறிந்ததும், அவர் தன் இருப்பிடத்திற்கு திரும்பினார்.

வீரபத்திரர்

தட்சன் நடத்திய யாக சாலையில், தன்னையே மாய்த்துக் கொண்டார் பார்வதி. இதனால் தட்சன் மீது சிவபெருமானுக்கு கடும் கோபம் உண்டானது. அப்போது அவரது உடலில் ஏற்பட்ட உஷ்ணத்தால் வியர்வைத் துளி உண்டானது. அந்த வியர்வையில் இருந்து தோன்றியவர்தான் வீரபத்திரர். இவரும் சிவபெருமான் அவதாரத்தில் ஒருவராகவே கருதப்படுகிறார். சிவபெருமானின் கடுமையான அவதாரமாக, வீரபத்திரர் அவதாரம் பார்க்கப்படுகிறது. மூன்று கடுஞ்சின கண்களோடு, எலும்பு கூடு மாலை அணிந்து பயங்கரமான ஆயுதங்களை கொண்டிருப்பவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். சிவபெருமானின் இந்த அவதாரம், யாகத்தில் தட்சனின் வெட்டுண்ட தலையை கரத்தில் தாங்கியபடி இருக்கும்.

அஸ்வத்தாமன்

அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, முதலில் வெளிவந்தது ஆலகாலம் என்னும் கொடிய விஷம்தான். அந்த விஷத்தை சிவபெருமான் உட்கொண்டார். அது அவர் உடல் முழுவதும் பரவாமல் இருக்க பார்வதி தேவி, ஈசனின் கழுத்தை அழுத்திப் பிடித்தார். அதனால் விஷம் தொண்டையிலேயே நின்று விட்டது. கழுத்தில் நின்ற விஷத்தால் ஈசனுக்கு எரிச்சல் உண்டானது. அந்த எரியும் தன்மை ஒரு உருவம் பெற்று வெளிப்பட்டது. அந்த உருவத்திற்கு ஒரு வரமும் கொடுத்தார் ஈசன். ‘பூமியில் துரோணனின் மகனாகப் பிறந்து அனைத்து சத்திரியர்களையும் கொல்வான்’ என்பதே அந்த வரம். அந்த உருவ அவதாரமே ‘அஸ்வத்தாமன்’ என்கிறார்கள்.

பைரவர்

ஆதி காலத்தில் சிவபெருமானைப் போலவே பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. இதனால் பிரம்மன், தன்னையும் ஈசனுக்கு நிகரானவராக எண்ணி ஆணவம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் எடுத்த அவதாரமே ‘பைரவர்’ அவதாரம். இப்படி பைரவராக தோன்றிய சிவபெருமான், பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை தனது கைகளால் கொய்தார். வேதங்களைக் கற்றறிந்த பிரம்மனின் தலையைக் கொய்ததால், பைரவருக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. இதனால் பிரம்மனின் தலையானது, மண்டை ஓடாக பைரவரின் கைகளைப் பற்றிக்கொண்டது. இதையடுத்து அந்த மண்டை ஓட்டில் பிச்சைஎடுத்து நிரம்பும் வேளை வரை, 12 ஆண்டுகள் பிட்சாடனராக திரிய வேண்டிய நிலை பைரவருக்கு ஏற்பட்டது. பைரவர் வடிவத்தில்தான், அனைத்து சக்தி பீடத்தையும் சிவபெருமான் காத்து வருவதாக நம்பப்படுகிறது.

வேட்டைக்காரன்

ஒரு முறை வனத்திற்குச் சென்ற அர்ச்சுனன், அங்கு கடுமையான தவத்தை மேற்கொண்டான். அந்த நேரத்தில் அவனைக் கொல்வதற்காக, ‘மூக்கா’ என்ற அசுரனை துரியோதனன் வனத்திற்கு அனுப்பினான். காட்டுப்பன்றி உருவமெடுத்த அந்த அசுரன், அர்ச்சுனனைக் கொல்ல விரைந்து வந்தான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த அர்ச்சுனனுக்கு, காட்டுப்பன்றியின் சத்தம் கவனச் சிதறலை உண்டாக்கியது. இதையடுத்து கண்களைத் திறந்து பார்த்த அர்ச்சுனன், தன்னை நோக்கி வரும் காட்டுப்பன்றியை வீழ்த்த அம்பு எய்தினான். அப்போது எங்கிருந்தோ வந்த மற்றொரு அம்பும் அந்தக் காட்டுப்பன்றியின் உடலை துளைத்தது. மற்றொரு அம்பு வந்த திசையை அர்ச்சுனன் நோக்கியபோது, அங்கு ஒரு வேடுவன் வந்து கொண்டிருந்தான். இப்போது ‘யார் முதலில் காட்டுப்பன்றியை வீழ்த்தியது’ என்ற சச்சரவு அவர்களுக்குள் எழுந்தது. ஒரு கட்டத்தில் வேடுவனாக இருந்த சிவபெருமான், தான் யார் என்பதை அர்ச்சுனனுக்கு காட்டினார். அர்ச்சுனன், சிவபெருமானை வணங்கி நின்றான். இதையடுத்து அவனுக்கு பாசுபத அஸ்திரத்தை ஈசன் வழங்கினார்.

யாதிநாத்

ஆகூக் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவனும், அவனது மனைவியும் தீவிரமான சிவ பக்தர்கள். அவர்கள் பக்தியின்பால் ஈர்ப்பு கொண்ட சிவபெருமான், யாதிநாத் என்ற பெயரில் ஒரு அதிதி போல, ஆகூக் குடிசைக்கு சென்றார். அந்த குடிசையில் இருவர் மட்டுமே தங்க முடியும். அதனால் அன்றிரவு கணவனும் மனைவியும் வெளியில் படுத்துக் கொண்டு, அதிதியாக வந்தவரை, வீட்டிற்குள் தங்கியிருக்க அனுமதித்தனர். அன்று இரவு கொடிய வன விலங்கு ஒன்றால் ஆகூக் கொல்லப்பட்டான். இதையடுத்து அவனது மனைவியும் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முன்வந்தாள். அப்போது அவர்கள் இருவருக்கும் முக்தியை அளித்த சிவபெருமான், அவர்களை பின்னாளில் நளன், தமயந்தியாக பிறக்கும்படி வரமளித்தார்.

கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham

 கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham

ஆவணி கிருத்திகை தினமான இன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவதால் கிடைக்கும் மிகச் சிறப்பான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.


கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham
கிருத்திகை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள் - karthigai-viratham

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

முருகன்

முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக ஆவணி கிருத்திகை தினம் இருக்கிறது. இந்த ஆவணி கிருத்திகை பெரும்பாலும் கோகுலாஷ்டமி எனப்படும் கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் வருகின்றது. எனினும் இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது நன்மை தரும்.

முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.

வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

இப்படியான முறைகளில் முருகனை ஆவணி மாத கிருத்திகை தினத்தில் வழிபட்டு உங்கள் வீட்டின் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கேசரி, பஞ்சாமிர்தம் போன்றவற்றை இந்த தினத்தில் பிரசாதமாக வழங்கி நீங்களும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். இந்த ஆவணி மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, கொடிய நோய்கள்,காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம்

  சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம் 

sashtanga-namaskaram-at-temple-kodimaram


 சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம் 

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு அருகில் செய்ய சொல்வதற்கான காரணம்

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு இரண்டு காரணங்களை சொல்வது வழக்கம்.

ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம்.

மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.

ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை

 ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 

Bhairava-viratham.

அவணி மாத வளர்பிறை அஷ்டமி தினத்தில் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.



 ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை
ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி விரத பூஜை 


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753



பைரவர்

பைரவருக்கு பெரும்பாலும் ராகு கால நேரத்தில் தான் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஆனால் வளர்பிறை அஷ்டமி தினத்தில் எந்த நேரத்திலும் பைரவரை வழிபடலாம். இன்றைய தினம் காலை முதல் மாலை வரையில் பைரவருக்கு விரதம் இருந்து, மாலையில் அருகில் உள்ள வைரவர் கோயிலுக்கு அல்லது சந்நிதிக்கு சென்று பைரவருக்கு செவ்வரளி பூ மாலை சாற்றி, செவ்வாழைப்பழம் நைவேத்தியம் வைத்து, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்குரிய மந்திரங்கள் துதிகள் ஜெபித்து பைரவரை தியானிப்பதும்,வணங்குவது சிறப்பாகும்.

மேற்சொன்ன முறைப்படி இன்று பைரவப்பெருமானை வணங்குபவர்களுக்கு நெடுநாட்களாக உங்களுக்கு வந்து சேராமல் இருந்த பணவரவுகள் கூடிய விரைவில் உங்களிடம் வந்து சேரும். உங்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பொருளாதார கஷ்ட நிலை படிப்படியாக நீங்கும். வீண் செலவுகள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும். சோம்பல் தன்மை நீங்கி மனதில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.

பைரவர் வகைகள்

 பைரவர் வகைகள்

சிற்ப நூல்களும் சிவஆகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும் போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இவை நூற்றி எட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன.

 பைரவர் வகைகள்
 பைரவர் வகைகள்

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

அஷ்ட பைரவர்

சிற்ப நூல்களும் சிவஆகமங்களும் பைரவ மூர்த்தத்தை விவரிக்கும் போது அறுபத்து நான்கு பைரவர்களை அறிமுகப்படுத்துகின்றன. இன்னும் சில சிற்ப நூல்களில் இவை நூற்றி எட்டு வடிவங்களாகவும் குறிக்கப்படுகின்றன. இந்த எல்லா வடிவங்களிலும் சிறப்பான எட்டு வடிவங்கள் ‘அஷ்ட பைரவர்’ என்று அழைக்கப்படுகின்றன.

1. அசிதாங்க பைரவர், 2. குரு பைரவர், 3.சண்ட பைரவர், 4. குரோத பைரவர், 5.கபால பைரவர், 6.உன்மத்த பைரவர், 7.பீஷ்ண பைரவர், 8.சம்ஹார பைரவர்.

அஷ்ட பைரவர் ஒவ்வொருவரின் வண்ணம், ஆயுதம், வாகனம் இவைகள் மாறுபட்டுக் காணப்படும்.

சிவபெருமானானவர் வலிமைமிக்க ஞானமூர்த்தியாக ஸ்ரீபைரவரை உற்பத்தி செய்து அவரிடம் உலகினைக் காக்கும் பொறுப்பினை அளித்தார். அவர் உயிர்களுக்கும் அவர்களின் உடைமைகளுக்கும் பாதுகாவலாக இருப்பதுடன் எட்டு திசைகளிலும் அஷ்ட பைரவராக நின்று அவற்றையும் பாதுகாத்து வருகின்றார். அசுரர்களால் இந்த உலகம் துன்பமடையும் பொழுதெல்லாம் சிவபெருமான் தனது அம்சமாக பைரவரை தோற்றுவித்து அசுரர்களை வென்று உயிர்களுக்கு அமைதியளித்தார் என்று பைரவர் உற்பத்தியை புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவமூர்த்தங்களுள் ஒருவராக பைரவரைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர் வீற்றிருப்பது ‘பைரவ புவனம்’ என்று கூறப்படுகிறது. சிவலோகத்திலுள்ள சோதி மயமான இந்த கோட்டையில் எட்டு வாசல்களிலும் மகா பைரவர், உக்கிரபைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர், சாகர பைரவர் என்பவர்கள் காவல் செய்து கொண்டிருப்பதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.

ஸ்ரீபைரவருக்கு சேத்திரபாலக மூர்த்தி என்றும் ஒரு பெயர் வழங்குகிறது. சேத்திரம் என்றால் பூமி. பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய உலகிற்கு ஊழிக்காலத்தில் நேர்ந்த துயரத்தை நீக்கி காத்தருளினமையால் சிவனுக்கு சேத்திரபாலக மூர்த்தி என்னும் பெயர் விளங்குவதாயிற்று என்று புராண வரலாறு தெரிவிக்கிறது.

சேத்திரம் என்றால் கோயில். பாலகர் என்றால் காப்பவர். சேத்திரமாகிய கோவிலைக் காப்பவர் பைரவர் என்றும் சொல்வார்கள்.

Lord Nandhi

Lord Nandhi
 

விநாயகர் சதுர்த்தி பூஜை விதிகள் - Vinayaka Pooja Rules

  விநாயகர் சதுர்த்தி பூஜை விதிகள் - Vinayaka Pooja Rules

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753



விநாயகர்

பக்தர்கள் துயரைப் போக்கும் விநாயகர், சிவபெருமான் மற்றும் தேவி பார்வதியின் மூத்த மகன் ஆவார். அவரை போற்றும் விழாவாக விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் இந்த நாள் இந்த ஆண்டு 22, ஆகஸ்ட் கொண்டாடப்படவுள்ளது.

* விநாயகரை வழிபடவும், அவருக்கான பூஜை சடங்குகளைச் செய்யவும் முதல் கட்டமாக விநாயகர் சிலையை வாங்கி வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வர வேண்டும்.

* வீட்டின் பூஜை அறையில் சிலையை வைக்க வேண்டும்.

* சிலையை இல்லத்தில் வைத்து அதற்கான மந்திரத்தை கூற வேண்டும். பிறகு விநாயகருக்கான பூஜை செய்து, கீர்த்தனைகள் பாடி அடுத்த 10 நாட்கள் விநாயகரை வழிபட வேண்டும்.

* அந்த 10 நாட்களும் தினமும் காலையில் விளக்கேற்றி, பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை அணிவித்து, விநாயகரை வழிபட வேண்டும்.

* பின்னர் அவருக்கு பூக்கள், பழங்கள் , பிரசாதம் ஆகியவற்றை படைக்கலாம். விநாயகரை "மோதகப் பிரியன்" என்று கூறுவார்கள். அதனால் அவருக்கு பிடித்த மோதகத்தை தயாரித்து அவருக்கு பிரசாதமாக வைக்கலாம் . அல்லது உங்களால் முடிந்த எந்த ஒரு பிரசாதத்தையும் அவருக்கு படைக்கலாம்.

* விநாயகர் துதிகளை பாடி அவரை மகிழ்விக்கலாம் .

* பின்னர் ஆரத்தி காண்பித்து அவருடைய ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளலாம் .

* அதன் பிறகு பிரசாதத்தை எடுத்து உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் ஏழை எளியவர்களுக்கு வழங்கலாம். 


கும்பகோணம் அமிர்தகலசநாதர்

  கும்பகோணம் அமிர்தகலசநாதர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753


கும்பகோணம் அமிர்தகலசநாதர்
கும்பகோணம் அமிர்தகலசநாதர்


அமிர்தகலசநாதர்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, சாக்கோட்டை பகுதி. இங்குதான் அமிர்தவல்லி உடனாய அமிர்தகலசநாதர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தைச் சுற்றிலும் கோட்டை ஒன்று இருந்த காரணத்தால் ‘கோட்டைக்கோவில்’ என்றும் இது அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் வேடனாக வந்து அம்பெய்தி கும்பத்தை உடைத்தபோது, கலசம் மட்டும் போய் விழுந்த இடம் இதுவாகும். சோழர் கால சிற்பக்கலையின் மிகச் சிறந்த வேலைப்பாடாக விளங்கும் இத்தல மூலவர், சிவலிங்க ரூபமாக காட்சி தருகிறார்.

எனவே தான் இத்தல இறைவன் ‘அமிர்தகலசநாதர்’ என்று பெயர் பெற்றார். மூலவர் சன்னிதிக்கு வடக்குப் பகுதியில் தென் திசை நோக்கிய சன்னிதியில் அமிர்தவல்லி அம்மன் வீற்றிருக்கிறார். அம்மனுக்கு தவத்தின் பயனை இறைவன் உணர்த்திய தலம் இதுவாகும்.

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

  பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும்.


 பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

பிரச்சினை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

சிவபெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது, பிரதோஷம். இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள், வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து, முடிந்தவரை மவுன விரதம் இருந்து, மாலையில் கோவில் சென்று, சிவதரிசனம் செய்யவேண்டும். அதோடு நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வருதல் வேண்டும். பிரதோஷ விரதம் முடிந்ததும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு தானம் வழங்கி விரதத்தை பூர்த்தி செய்தால் நல்ல பலனைத் தரும்.

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை, காத்தருளிய வேளையே, ‘பிரதோஷ வேளை’யாகும். வளர்பிறை பிரதோஷம், தேய்பிறை பிரதோஷம் என மாதம் இருமுறை பிரதோஷம் வரும். திரியோதசி திதியில் சூரிய மறைவிற்கு முன்னே, மூன்றே முக்கால் நாழிகை, மறைந்ததற்கு பிறகு மூன்றே முக்கால் நாழிகை என மொத்தம் ஏழரை நாழிகைக் காலம் ‘பிரதோஷ காலம்’ எனப்படும். குறிப்பாக, மாலை 4.30 மணி முதல் இரவு 7மணி வரை.

சாதாரண நாட்களில் ஒருவர் ஆலயத்திற்கு வரும்போது, மூன்று முறை வலம் வருவார்கள். அதுவே பிரதோஷ தினத்தில், ‘சோம சூக்தப் பிரதட்சணம்’ முறையில் வலம் வர வேண்டும். திருப்பாற்கடலை கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷம், தேவர்களை முன்னும் பின்னும், வலமும் இடமுமாகத் துரத்தியது. தேவர்கள் அஞ்சி நடுங்கி ஒடுங்கி கயிலை மலைக்கு ஓடினார்கள். இறைவனை வலமாக வந்து உள்ளே சென்று பரமனைச் சரணடையலாம் என்று எண்ணிய தேவர்களை, ஆலகால விஷம் அப்பிரதட்சணமாகச் சென்று எதிர்த்தது. இதைக்கண்டு அஞ்சிய தேவர்கள், வந்த வழியே திரும்பினர். ஆலகால விஷம் அந்த பக்கத்திலும் எதிர்த்துச் சென்று பயமுறுத்தியது. இவ்வாறு தேவர்கள் வலமும் இடமுமாய் வந்த அந்த நிகழ்ச்சிதான் ‘சோமசூக்தப் பிரதட்சணம்’ எனப் பெயர் பெற்றது.

முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிகொண்டு, அப்பிரதட்சணமாகச் சண்டேசுவரர் சன்னிதி வரை சென்று, அவரை வணங்கி கொண்டு, அப்படியே திரும்பி வந்து முன்போல சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்க வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும். அப்படி செய்தால் ‘அசுவமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆலயத்தில் பிரதோஷ வழிபாட்டை முடித்தபின் வீட்டிற்குச் சென்று உணவருந்தல் வேண்டும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் விசேஷமானது. பிரதோஷ வழிபாடு செய்ய, திருமால், பிரம்மன் உள்ளிட்ட தேவர்களும் கூட சிவாலயம் செல்வார்கள். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ நேரமாகும். இது ‘தினப் பிரதோஷம்’ எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரி சனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். தரித்திரம் ஒழியவும், நோய் தீரவும், துயர் நீங்கவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.

நலம் தரும் நந்திகேஸ்வரர்

நந்தி தேவருக்கு ‘ருத்ரன்’ என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள். பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு, நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்வார்கள்.

Naga Vasuki Temple - Prayag

Naga Vasuki Temple - Prayag
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

Naga Vasuki Temple - Prayag

Naga Vasuki Temple - Prayag

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

விநாயகரின் ஆறுபடை வீடும் - வழிபாட்டு பலன்களும்

விநாயகரின் ஆறுபடை வீடும் - வழிபாட்டு பலன்களும்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்களை கீழே பார்க்கலாம்.

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

முதல்படை வீடு - திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

மூன்றாவது படைவீடு- திருக்கடவூர் :

எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம்படை வீடு - மதுரை :

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படை வீடு - பிள்ளையார்பட்டி :

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம்படை வீடு - திருநாரையூர் :

திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

அண்ணாமலையார் வரலாறு - விநாயகரின் முதல் படை வீடு

அண்ணாமலையார் வரலாறு -  விநாயகரின் முதல் படை வீடு
thiruvannamalai-arunachaleswarar-temple-history


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை சக்தி தலமாகவும் புகழ்கிறார்கள்.

தமிழ்க் கடவுள் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாகவும் சொல்கிறார்கள். அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை ஆலயம் திகழ்கிறது.

பொதுவாக முருகப்பெருமானுக்குதான் அறுபடை வீடுகள் இருப்பதை பார்த்துள்ளோம். விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பது சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. விநாயகரின் முதல் படை வீடான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நீங்கள் திரும்பிய திசையெல்லாம் விநாயகர் சிலைகளை பார்க்க முடியும். அந்த அளவுக்கு விநாயகர் திருவண்ணாமலை தலத்தில் நிறைந்துள்ளார்.

திருவண்ணாமலை ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தில் செல்வ கணபதி, கம்பத்து இளையனார் சந்நிதிக்குள் இருக்கும் ஸ்ரீகணபதி, சர்வசக்தி விநாயகர் சன்னதி, கோபுரத்து இளையனார் சன்னதிக்குள் இருக்கும் ஸ்ரீவிநாயகர், கல்யாணசுந்தரேசுவரர் சன்னதிக்குள் இருக்கும் விநாயகர், உச்சிபிள்ளையார், வன்னிமர விநாயகர், தனி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் கும்பாபிஷேக விநாயகர் என 8 விநாயகர்களை காணலாம்.

4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீகணபதி மற்றும் கிளிக்கோபுரம் அருகே யானைதிறைக்கொண்ட விநாயகர் என 2 விநாயகர்கள் உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே பொட்டுகட்டும் விநாயகர், மகிழமரத்தடி விநாயகர், கல்யாண மண்டப விநாயகர், பிடாரிகோவில் விநாயகர், கொடிமரம் அருகே சம்பந்த விநாயகர், கொடிமர மண்டபத்தில் ஸ்ரீஉண்டி விநாயகர் என 6 விநாயகர்கள் உள்ளனர்.

2-ம் பிரகாரத்தில் நாயன்மார்கள் வீற்றிருக்கும் வரிசையில் கணபதி, சேத்திரகணபதி, விநாயகர், விநாயகர் என 4 விநாயகர்கள் இருக்கிறார்கள். கருவறையை சுற்றி முதல் பிரகாரத்தில் கோஷ்டத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். உண்ணாமலை அம்மன் சன்னதி வாசலில் விஜயராகவ விநாயகர் உள்ளார். அடுத்து மண்டபத்தில் விநாயகர், விநாயகர், ஸ்ரீகணபதி, விநாயகர், விநாயகர், விநாயகர், விநாயகர் ஆகிய 7 பேர் உள்ளனர். அம்மன் கருவறை கோஷ்டத்தில் தனங்களுடன் ஸ்ரீகணேவி காணப்படுகிறார்.

இப்படி திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 30 விநாயகர்கள் இருக்கிறார்கள். மிகவும் சிறப்பு பெற்ற செல்வகணபதி, யானை திறைக்கொண்ட விநாயகர், சேத்திர விநாயகர், சம்பந்த விநாயகர் போன்ற விநாயகர்களின் சிறப்புகளை மட்டும் பார்க்கலாம்.

திருவண்ணாமலை கோவிலில் 30 விநாயகர்கள் இருந்தாலும் விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைக்குரிய விநாயகராக கருதப்படுபவர் ராஜகோபுரத்தில் இருக்கும் செல்வகணபதி ஆவார். பொதுவாக ஆலயங்களில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் எந்த சன்னதியும் இருப்பதில்லை. ஆனால் திருவண்ணாமலை ராஜகோபுர நுழைவு வாயிலில் செல்வகணபதி வீற்றிருக்கிறார். இது திருவண்ணாமலை ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று என ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார். ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் போலீசார் பக்தர்களை சோதனை செய்யும் பகுதி உள்ளது. அந்த பகுதியை கடந்ததும் இடது பக்கத்தில் பார்த்தால் செல்வகணபதியை காணலாம். இவர்தான் முதல் படைக்குரிய விநாயகர் ஆவார்.

இந்த விநாயகர் அவ்வையாரால் பாடல்பெற்ற சிறப்புக்குரியவர். இந்த விநாயகர் மீது அவ்வையார் பாடிய பாடல்.....

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துக்குள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

இந்த பாடல் விவேக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் அவ்வையார் ஒரு உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார். நாம் முக்தி பாதைக்கு செல்ல வேண்டுமானால் வினைகளை அகற்ற வேண்டும். அந்த வினைகளை தீர்க்கும் முழு முதற்கடவுளாக செல்வகணபதி திகழ்கிறார். இவரை வழிபட்டால் எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை-தீமை போன்றவற்றால் உருவாகும் வினைகளும் நீங்கும்.

பிறவி எடுக்கக் காரணமாக உள்ள அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் விலகும். சகல வினைகளும் தீர்ந்து போகும். ஞானம் கைமேல் கனியாக வரும் என்று அவ்வையார் கூறியுள்ளார். அதனால்தான் இந்த விநாயகரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடு விநாயகராக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

இவரை வழிபட்டு தான் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆத்ம ஞானம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலைக்கு முக்தியை தேடி வருபவர்களுக்கு அதற்கான பாதையை இந்த விநாயகர் தான் அமைத்து கொடுக்கிறார் என்பது ஐதீகம். எனவே இந்த செல்வ கணபதி மிக மிக முக்கியமானவர். ஆனால் திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் இவரது சிறப்பை அறியாமல் உணராமல் உள்ளது வேதனையாகும்.

நமது முன்னோர்கள் இந்த கணபதியை சிறப்பு செய்து இருந்தாலும் திருவண்ணாமலை ஆலய நிர்வாகம் இந்த விநாயகருக்கு ஏனோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திருவண்ணாமலை தலத்தின் அதிகாரப்பூர்வ பிரதானமான விநாயகர் என்ற அந்தஸ்து சம்பந்த விநாயகருக்கே வழங்கப்பட்டுள்ளது. சம்பந்த விநாயகர், கொடி மரம் அருகே தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

மூலிகை பொருட்களால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் சிவந்த நிறத்தில் இருப்பதாக ஒரு கருத்து உண்டு. 1262-ம் ஆண்டு வீரவல்லாள மன்னன் காலத்து கல்வெட்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சம்பந்தாண்டார் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர் இந்த விநாயகர் சன்னதியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் பெயரால் சம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான். பலரையும் கொடுமை செய்தான்.

இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். அதுபோல திருவண்ணாமலை தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் இந்த சம்பந்த விநாயகரை பூஜித்த பிறகுதான் விழா தொடங்கும்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இரவு 7.30 மணிக்கு விநாயகர் புறப்பாடு இந்த சன்னதியில் இருந்துதான் புறப்படும். இந்த சன்னதி அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி முன்பு நின்றுதான் அந்த கால மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு உள்ளது.

திருவண்ணாமலை யில் அண்ணாமலையார் முன்பு நின்று எந்த அரசரும் பதவி ஏற்றது இல்லை. அதுபோல இந்த தலத்தில் பூரண கும்ப மரியாதையோ, பரிவட்டம் கட்டுவதோ நல்லதல்ல என்ற கருத்து உள்ளது. காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான பயம் இருப்பதால் சம்பந்த விநாயகர் முன்பு வந்து அனைத்தையும் செய்து கொள்வார்கள்.

அந்த காலத்தில் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் சம்பந்த விநாயகர் முன்புதான் சத்தியம் வாங்குவார்களாம். இதனால்தான் இன்றளவும் சம்பந்த விநாயகர் தனித்துவத்துடன் திகழ்கிறார். இவரை போலவே யானைதிறைக் கொண்ட விநாயகருக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. கிளிக்கோபுரம் அருகே சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் இந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.

சிவகங்கை தீர்த்தம் அருகில் உள்ள சர்வசக்தி விநாயகருக்கும் தனி சிறப்பு உள்ளது. இவரை நகரத்தார்கள் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆலயத்தின் 2-ம் பிரகாரத்தில் மேற்கு திசையில் தென்மேற்கு மூலையில் உள்ள சேத்திர விநாயகரும் குறிப்பிடத்தக்கவர். கண்டராதித்த சோழ மன்னனின் மனைவி செம்பியன் மாதேவியால் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டார்.

ஒரு தடவை கும்பாபிஷேகத்தின்போது அண்ணாமலையாருக்கு அடுத்தப்படியாக இந்த விநாயகருக்குதான் முதலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விநாயகர் பலகை கல்லில் செய்யப்பட்டவர் ஆவார். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே உள்ள பொட்டுக்கட்டும் விநாயகரும் வரலாற்று சிறப்புடையவர். அந்த காலத்தில் இவர் முன்னிலையில் தேவதாசிகள் தங்களை கோவில் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொள்வார்கள். இந்த அர்ப்பணிப்புக்கு பொட்டுக்கட்டுதல் என்று பெயர். எனவே இந்த விநாயகருக்கு பொட்டுக்கட்டும் விநாயகர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் மட்டுமின்றி ஊருக்குள்ளேயும், மலை சுற்றும் பாதையிலும் ஏராளமான விநாயகர்கள் உள்ளனர். ஊருக்குள் தேரடி வீதிக்கும் கொசமட தெருவுக்கும் இடையே ரேடியோகிரவுண்டு பகுதியில் முத்தம்மை விநாயகர் உள்ளார். அருணகிரிநாதர் தாயார் முத்தம்மை இந்த விநாயகரை வணங்கியதால் இதற்கு முத்தம்மை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

அதுபோல கிரிவல பாதையில் தலைதிருக தனம் கொடுக்கும் விநாயகர், இடுக்கு பிள்ளையார் என்று நிறைய விநாயகர்கள் இருக்கிறார்கள். இப்படி திருவண்ணாமலை தலத்தின் பிரிக்க முடியாத அம்சமாக விநாயகர் திகழ்கிறார். அவரைப் போன்றே திருவண்ணாமலை முழுக்க லிங்கங்களும் நிறைந்துள்ளன.  

புரட்டாசி மாத விரத வழிபாடு

புரட்டாசி மாத விரத வழிபாடு
purattasi-viratham.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.

ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.


பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.