Showing posts with label எம பயத்தை போக்கும் எமசம்ஹாரேஸ்வரர். Show all posts
Showing posts with label எம பயத்தை போக்கும் எமசம்ஹாரேஸ்வரர். Show all posts

எம பயத்தை போக்கும் எமசம்ஹாரேஸ்வரர்

எம பயத்தை போக்கும் எமசம்ஹாரேஸ்வரர்..!!!

திருக்கடையூருக்கும், ஸ்ரீவாஞ்சியத்திற்கும் இணையாக விளங்கும் ஆலயம் என்பதால், இத்தல இறைவன் எமசம்ஹாரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

திருக்கடையூரில் உள்ள சிவன் எமபயம் போக்கும் இறைவனாக அருள்பாலிக்கிறார். மார்கண்டேயரை எமனிடம் இருந்து காத்து அருளியவர் இத்தல இறைவன். இதே போல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கூறத்தங்குடியில் உள்ள இறைவனும் எம பயம் போக்கும் இறைவனாக விளங்குகிறார். பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, மனம் குழம்பிய நிலையில் இங்கு வந்து வழிபட்டு தெளிவு பெற்றனர் என்று தல வரலாறு கூறுகிறது.

திருக்கடையூருக்கும், ஸ்ரீவாஞ்சியத்திற்கும் இணையாக விளங்கும் ஆலயம் என்பதால், இத்தல இறைவன் எமசம்ஹாரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். எமனின் சாபத்தை சம்ஹாரம் செய்து, மோட்சம் அளித்த தலம் என்பதால் இப்பெயர் பெற்றதாகவும் சொல்கிறார்கள். இந்த ஆலயம் எமபயம் போக்கும் திருத்தலமாக திகழ்கிறது