Showing posts with label அபிராமி அந்தாதி பாடல் வரிகள். Show all posts
Showing posts with label அபிராமி அந்தாதி பாடல் வரிகள். Show all posts

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்

அபிராமி அந்தாதி பாடல் வரிகள்




கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் 

கபடு வாராத நட்பும் 

கன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும் 

கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்

தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்

தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு

துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய

தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!

ஆதிகட வூரின் வாழ்வே!

அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!

அருள்வாமி! அபிராமியே!


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா

மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே