Naga Vasuki Temple - Prayag

Naga Vasuki Temple - Prayag
                      
One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
For Appointment  - Whatsapp - 9841986753

Naga Vasuki Temple - Prayag

Naga Vasuki Temple - Prayag

Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips 
Register for 2 days Trial  - Whatsapp - 9841986753

விநாயகரின் ஆறுபடை வீடும் - வழிபாட்டு பலன்களும்

விநாயகரின் ஆறுபடை வீடும் - வழிபாட்டு பலன்களும்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளில் வழிபட்டால் கிடைக்கும் பலன்களை கீழே பார்க்கலாம்.

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-

முதல்படை வீடு - திருவண்ணாமலை :

திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே 'அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

மூன்றாவது படைவீடு- திருக்கடவூர் :

எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ள வாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

நான்காம்படை வீடு - மதுரை :

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித்தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படை வீடு - பிள்ளையார்பட்டி :

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர் அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

ஆறாம்படை வீடு - திருநாரையூர் :

திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார். அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்.

அண்ணாமலையார் வரலாறு - விநாயகரின் முதல் படை வீடு

அண்ணாமலையார் வரலாறு -  விநாயகரின் முதல் படை வீடு
thiruvannamalai-arunachaleswarar-temple-history


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம் ஈசனுக்கு மட்டுமின்றி மற்ற கடவுள்களுக்கும் சிறப்பு தரும் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தை சக்தி தலமாகவும் புகழ்கிறார்கள்.

தமிழ்க் கடவுள் முருகனின் அற்புதங்கள் நிகழ்ந்த ஆலயமாகவும் சொல்கிறார்கள். அதுபோல விநாயகப் பெருமானின் முதல் படை வீடாகவும் திருவண்ணாமலை ஆலயம் திகழ்கிறது.

பொதுவாக முருகப்பெருமானுக்குதான் அறுபடை வீடுகள் இருப்பதை பார்த்துள்ளோம். விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருப்பது சமீபகாலமாக மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. விநாயகரின் முதல் படை வீடான திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் நீங்கள் திரும்பிய திசையெல்லாம் விநாயகர் சிலைகளை பார்க்க முடியும். அந்த அளவுக்கு விநாயகர் திருவண்ணாமலை தலத்தில் நிறைந்துள்ளார்.

திருவண்ணாமலை ஆலயம் மொத்தம் 5 பிரகாரங்கள் கொண்டது. ஒவ்வொரு பிரகாரத்திலும் ஆங்காங்கே விநாயகர் வீற்றிருக்கிறார். 5-ம் பிரகாரத்தில் ராஜகோபுரத்தில் செல்வ கணபதி, கம்பத்து இளையனார் சந்நிதிக்குள் இருக்கும் ஸ்ரீகணபதி, சர்வசக்தி விநாயகர் சன்னதி, கோபுரத்து இளையனார் சன்னதிக்குள் இருக்கும் ஸ்ரீவிநாயகர், கல்யாணசுந்தரேசுவரர் சன்னதிக்குள் இருக்கும் விநாயகர், உச்சிபிள்ளையார், வன்னிமர விநாயகர், தனி மரத்தடியில் அமர்ந்து இருக்கும் கும்பாபிஷேக விநாயகர் என 8 விநாயகர்களை காணலாம்.

4-ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அருகே ஸ்ரீகணபதி மற்றும் கிளிக்கோபுரம் அருகே யானைதிறைக்கொண்ட விநாயகர் என 2 விநாயகர்கள் உள்ளனர். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே பொட்டுகட்டும் விநாயகர், மகிழமரத்தடி விநாயகர், கல்யாண மண்டப விநாயகர், பிடாரிகோவில் விநாயகர், கொடிமரம் அருகே சம்பந்த விநாயகர், கொடிமர மண்டபத்தில் ஸ்ரீஉண்டி விநாயகர் என 6 விநாயகர்கள் உள்ளனர்.

2-ம் பிரகாரத்தில் நாயன்மார்கள் வீற்றிருக்கும் வரிசையில் கணபதி, சேத்திரகணபதி, விநாயகர், விநாயகர் என 4 விநாயகர்கள் இருக்கிறார்கள். கருவறையை சுற்றி முதல் பிரகாரத்தில் கோஷ்டத்தில் ஒரு விநாயகர் இருக்கிறார். உண்ணாமலை அம்மன் சன்னதி வாசலில் விஜயராகவ விநாயகர் உள்ளார். அடுத்து மண்டபத்தில் விநாயகர், விநாயகர், ஸ்ரீகணபதி, விநாயகர், விநாயகர், விநாயகர், விநாயகர் ஆகிய 7 பேர் உள்ளனர். அம்மன் கருவறை கோஷ்டத்தில் தனங்களுடன் ஸ்ரீகணேவி காணப்படுகிறார்.

இப்படி திருவண்ணாமலை கோவிலுக்குள் மொத்தம் 30 விநாயகர்கள் இருக்கிறார்கள். மிகவும் சிறப்பு பெற்ற செல்வகணபதி, யானை திறைக்கொண்ட விநாயகர், சேத்திர விநாயகர், சம்பந்த விநாயகர் போன்ற விநாயகர்களின் சிறப்புகளை மட்டும் பார்க்கலாம்.

திருவண்ணாமலை கோவிலில் 30 விநாயகர்கள் இருந்தாலும் விநாயகரின் அறுபடை வீடுகளில் முதல் படைக்குரிய விநாயகராக கருதப்படுபவர் ராஜகோபுரத்தில் இருக்கும் செல்வகணபதி ஆவார். பொதுவாக ஆலயங்களில் ராஜகோபுரம் நுழைவு வாயிலில் எந்த சன்னதியும் இருப்பதில்லை. ஆனால் திருவண்ணாமலை ராஜகோபுர நுழைவு வாயிலில் செல்வகணபதி வீற்றிருக்கிறார். இது திருவண்ணாமலை ஆலயத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்று என ரமேஷ் சிவாச்சாரியார் தெரிவித்தார். ராஜகோபுரத்துக்குள் நுழைந்ததும் போலீசார் பக்தர்களை சோதனை செய்யும் பகுதி உள்ளது. அந்த பகுதியை கடந்ததும் இடது பக்கத்தில் பார்த்தால் செல்வகணபதியை காணலாம். இவர்தான் முதல் படைக்குரிய விநாயகர் ஆவார்.

இந்த விநாயகர் அவ்வையாரால் பாடல்பெற்ற சிறப்புக்குரியவர். இந்த விநாயகர் மீது அவ்வையார் பாடிய பாடல்.....

அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த
தொல்லைபோம்; போகாத் துயரம்போம் நல்ல
குணமதிக மாம்அருணைக் கோபுரத்துக்குள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்.

இந்த பாடல் விவேக சிந்தாமணியில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் மூலம் அவ்வையார் ஒரு உண்மையை நமக்கு உணர்த்தியுள்ளார். நாம் முக்தி பாதைக்கு செல்ல வேண்டுமானால் வினைகளை அகற்ற வேண்டும். அந்த வினைகளை தீர்க்கும் முழு முதற்கடவுளாக செல்வகணபதி திகழ்கிறார். இவரை வழிபட்டால் எல்லாவிதமான தொல்லைகளும் போகும். நன்மை-தீமை போன்றவற்றால் உருவாகும் வினைகளும் நீங்கும்.

பிறவி எடுக்கக் காரணமாக உள்ள அன்னை வயிற்றில் பிறக்கும் தொல்லையும் விலகும். சகல வினைகளும் தீர்ந்து போகும். ஞானம் கைமேல் கனியாக வரும் என்று அவ்வையார் கூறியுள்ளார். அதனால்தான் இந்த விநாயகரை அறுபடை வீடுகளின் முதல் படைவீடு விநாயகராக நமது முன்னோர்கள் வரையறுத்துள்ளனர்.

இவரை வழிபட்டு தான் ஞானிகள், மகான்கள், சித்தர்கள் ஆத்ம ஞானம் பெற்றதாக குறிப்புகள் உள்ளன. திருவண்ணாமலைக்கு முக்தியை தேடி வருபவர்களுக்கு அதற்கான பாதையை இந்த விநாயகர் தான் அமைத்து கொடுக்கிறார் என்பது ஐதீகம். எனவே இந்த செல்வ கணபதி மிக மிக முக்கியமானவர். ஆனால் திருவண்ணாமலை தலத்துக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் இவரது சிறப்பை அறியாமல் உணராமல் உள்ளது வேதனையாகும்.

நமது முன்னோர்கள் இந்த கணபதியை சிறப்பு செய்து இருந்தாலும் திருவண்ணாமலை ஆலய நிர்வாகம் இந்த விநாயகருக்கு ஏனோ அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திருவண்ணாமலை தலத்தின் அதிகாரப்பூர்வ பிரதானமான விநாயகர் என்ற அந்தஸ்து சம்பந்த விநாயகருக்கே வழங்கப்பட்டுள்ளது. சம்பந்த விநாயகர், கொடி மரம் அருகே தனி சன்னதியில் உள்ளார். இந்த விநாயகருக்கு செந்தூர விநாயகர் என்றும் ஒரு பெயர் உண்டு. ஆஞ்சநேயருக்குதான் செந்தூரம் பூசுவார்கள். ஆனால் இத்தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசுகிறார்கள். தமிழ்நாட்டில் வேறு எங்கும் விநாயகருக்கு இப்படி செந்தூரம் பூசப்படுவதில்லை.

மூலிகை பொருட்களால் உருவாக்கப்பட்டதால் இந்த விநாயகர் சிவந்த நிறத்தில் இருப்பதாக ஒரு கருத்து உண்டு. 1262-ம் ஆண்டு வீரவல்லாள மன்னன் காலத்து கல்வெட்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சம்பந்தாண்டார் பற்றிய குறிப்புகள் உள்ளன. அவர் இந்த விநாயகர் சன்னதியை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் பெயரால் சம்பந்த விநாயகர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

இதன் பின்னணியில் ஒரு கதை சொல்லப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

திருவண்ணாமலையில் அருணகிரிநாதர் சுவாமிகள் வசித்து வந்த காலத்தில் சம்மந்தாண்டன் என்பவனும் வசித்து வந்தான். இவன் காளி உபாசகராகத் திகழ்ந்தான். காளி அவனிடம் பணியாள் போல கட்டுப்பட்டுக் கிடந்தாள். இதனால் அவன் செருக்குடன், யாரையும் மதிக்காமல் இருந்தான். பலரையும் கொடுமை செய்தான்.

இதனால் விநாயகர் ஆவேசம் கொண்டு அவனை அழித்தார். அப்போது சம்மந்தாண்டன் உடலில் இருந்து சிதறிய ரத்த துளிகளில் இருந்து அசுரர்கள் தோன்றினார்கள். இதை தடுத்து நிறுத்த சம்மந்தாண்டனின் ரத்தம் முழுவதையும் அள்ளி விநாயகர் தன் உடலில் பூசிக் கொண்டார். இதை பக்தர்களுக்கு உணர்த்தவே திருவண்ணாமலை தலத்தில் விநாயகருக்கு செந்தூரம் பூசப்படுகிறது.

சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில் ஓர் நாள் என வருடத்தில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்தும் வைபவம் நடக்கும். அதுபோல திருவண்ணாமலை தலத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் இந்த சம்பந்த விநாயகரை பூஜித்த பிறகுதான் விழா தொடங்கும்.

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இரவு 7.30 மணிக்கு விநாயகர் புறப்பாடு இந்த சன்னதியில் இருந்துதான் புறப்படும். இந்த சன்னதி அழகான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த சன்னதி முன்பு நின்றுதான் அந்த கால மன்னர்கள் முடிசூட்டிக் கொண்டதாக வரலாறு உள்ளது.

திருவண்ணாமலை யில் அண்ணாமலையார் முன்பு நின்று எந்த அரசரும் பதவி ஏற்றது இல்லை. அதுபோல இந்த தலத்தில் பூரண கும்ப மரியாதையோ, பரிவட்டம் கட்டுவதோ நல்லதல்ல என்ற கருத்து உள்ளது. காலம் காலமாக பக்தர்கள் மத்தியில் இது தொடர்பான பயம் இருப்பதால் சம்பந்த விநாயகர் முன்பு வந்து அனைத்தையும் செய்து கொள்வார்கள்.

அந்த காலத்தில் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் சம்பந்த விநாயகர் முன்புதான் சத்தியம் வாங்குவார்களாம். இதனால்தான் இன்றளவும் சம்பந்த விநாயகர் தனித்துவத்துடன் திகழ்கிறார். இவரை போலவே யானைதிறைக் கொண்ட விநாயகருக்கு தனிச்சிறப்பு உள்ளது. ஒருசமயம் ஆந்திராவைச் சேர்ந்த அரசர் ஒருவர் திருவண்ணாமலையை முற்றுகையிட்டு போரிட்டு கைப்பற்றினார். அன்று இரவு அவர் திருவண்ணாமலையில் தனது படை வீரர்களுடன் தங்கியிருந்தார்.

அப்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. யானை ஒன்று தன்னையும், தனது படைவீரர்களையும் அடித்து விரட்டுவது போல கனவு கண்டார். அதிர்ச்சியுடன் விழித்த அவர் இதுபற்றி விசாரித்தார். அப்போது திருவண்ணாமலை தலத்தில் உள்ள தலவிநாயகர்தான் அவர் கனவில் வந்தது எனத் தெரிய வந்தது. உடனே அந்த அரசர் தனது யானை படை அனைத்தையும் அந்த விநாயகருக்கு காணிக்கை செலுத்தி மன்னிப்பு கேட்டு சென்றார். இதனால் அந்த தலவிநாயகருக்கு யானைதிறைக் கொண்ட விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது. கிளிக்கோபுரம் அருகே சிறுகுகை போன்ற சன்னதியில் நின்ற கோலத்தில் இந்த விநாயகர் அருள்பாலித்து வருகிறார்.

சிவகங்கை தீர்த்தம் அருகில் உள்ள சர்வசக்தி விநாயகருக்கும் தனி சிறப்பு உள்ளது. இவரை நகரத்தார்கள் பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஆலயத்தின் 2-ம் பிரகாரத்தில் மேற்கு திசையில் தென்மேற்கு மூலையில் உள்ள சேத்திர விநாயகரும் குறிப்பிடத்தக்கவர். கண்டராதித்த சோழ மன்னனின் மனைவி செம்பியன் மாதேவியால் இந்த விநாயகர் உருவாக்கப்பட்டார்.

ஒரு தடவை கும்பாபிஷேகத்தின்போது அண்ணாமலையாருக்கு அடுத்தப்படியாக இந்த விநாயகருக்குதான் முதலில் அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த விநாயகர் பலகை கல்லில் செய்யப்பட்டவர் ஆவார். 3-ம் பிரகாரத்தில் மடப்பள்ளி அருகே உள்ள பொட்டுக்கட்டும் விநாயகரும் வரலாற்று சிறப்புடையவர். அந்த காலத்தில் இவர் முன்னிலையில் தேவதாசிகள் தங்களை கோவில் தொண்டுக்கு அர்ப்பணித்துக் கொள்வார்கள். இந்த அர்ப்பணிப்புக்கு பொட்டுக்கட்டுதல் என்று பெயர். எனவே இந்த விநாயகருக்கு பொட்டுக்கட்டும் விநாயகர் என்ற பெயர் நிலைத்து விட்டது.

திருவண்ணாமலை ஆலயத்துக்குள் மட்டுமின்றி ஊருக்குள்ளேயும், மலை சுற்றும் பாதையிலும் ஏராளமான விநாயகர்கள் உள்ளனர். ஊருக்குள் தேரடி வீதிக்கும் கொசமட தெருவுக்கும் இடையே ரேடியோகிரவுண்டு பகுதியில் முத்தம்மை விநாயகர் உள்ளார். அருணகிரிநாதர் தாயார் முத்தம்மை இந்த விநாயகரை வணங்கியதால் இதற்கு முத்தம்மை விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.

அதுபோல கிரிவல பாதையில் தலைதிருக தனம் கொடுக்கும் விநாயகர், இடுக்கு பிள்ளையார் என்று நிறைய விநாயகர்கள் இருக்கிறார்கள். இப்படி திருவண்ணாமலை தலத்தின் பிரிக்க முடியாத அம்சமாக விநாயகர் திகழ்கிறார். அவரைப் போன்றே திருவண்ணாமலை முழுக்க லிங்கங்களும் நிறைந்துள்ளன.  

புரட்டாசி மாத விரத வழிபாடு

புரட்டாசி மாத விரத வழிபாடு
purattasi-viratham.


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும்.

ஜாதகரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும். திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் (அக்டோபர் முதல் வாரம்) கொண்டாடப்படுகிறது.

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் காத்தும், தூய காய்கறி தானிய உணவு வகைகளையே உண்டும், துளசி தீர்த்தம் பருகியும், அவன் புகழ்பாடும் நூல்களைப் படித்தும், பாராயணம் செய்தும் போற்ற வேண்டும். சிலர் புரட்டாசி வரும் எல்லா சனிக்கிழமைகளிலும், அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமையன்றும் படையல் படைத்துச் சிறப்பாக வழிபடுவதுண்டு.


பராசக்திக்குரிய பூஜை மாதமும் இதுவே. நவராத்திரி விரத பூஜை இம்மாதத்தில் நடக்கிறது. அம்பாளை, முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், அதையடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். தைரியம், செல்வம், கல்வி ஆகியவற்றை அம்பாளிடம் வேண்டிப் பெற இந்த பூஜை நடத்தப்படுகிறது.

திருநாங்கூர் கருட சேவை

திருநாங்கூர் கருட சேவை
thirunangur-garuda-sevai


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன.திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு பதினொரு பெருமாள்கள் எழுந்தருள்வார்கள்.

108 வைணவ திவ்யதேசங்களில் சோழநாட்டு திருப்பதிகளுள் திருநாங்கூர் என்னும் ஊரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் உள்ளன. இந்த திருநாங்கூரைச் சுற்றி சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் 5 திவ்யதேசங்கள் உள்ளன. இந்த பதினொன்றையும் சேர்த்து திருநாங்கூர் பதினொரு திவ்யதேசம் என்று வழங்குவர். அவையாவன:-

திருக்காவளம்பாடி

 திருஅரிமேயவிண்ணகரம்
திருவண்புருடோத்தமம்
திருச்செம்பொன்செய்கோவில்
திருமணி மாடக்கோவில்
திருவைகுந்த விண்ணகரம்

- இந்த ஆறுதலங்களும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளன.

திருத்தேவனார்த் தொகை
திருத்தெற்றியம்பலம்
திருமணிக்கூடம்
திருவெள்ளக்குளம்
திருப்பார்த்தன்பள்ளி

ஒவ்வொரு வருடமும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் நடைபெறும் கருடசேவைக்கு இந்தப் பதினொரு பெருமாள்களும் எழுந்தருள்வார்கள். இந்த பதினொரு பெருமாள்களையும் திருமங்கை யாழ்வார் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களா சாசனம் செய்வார். பிறகு திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய் வார். இந்தக் கருட சேவையைக் காண்பதற்கு பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த பெருமாள்களை மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரே இங்கு வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள். திருநாங்கூரைச் சுற்றியுள்ள வயல்வெளிகளில் கருட சேவைக்கு முதல் நாள் நள்ளிரவில் காற்றினால் நெற்பயிர்கள் சலசல என்று சப்தமிடும். இந்த சப்தத்தை கேட்டவுடன் திருமங்கையாழ்வார் ஊருக்குள் பிரவேசித்து விட்ட தாக பக்தர்கள் கூறுவார்கள். திருமங்கையால் மிதிக்கப்பட்ட வயல்வெளிகளில் அதிக நெல்விளையும் என்பதும் இங்குள்ள விவசாயிகளின் நம்பிக்கையாகும்.

மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள் சன்னதியில் இந்தக் கருடசேவை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்தப் பதினொரு பெருமாள்களையும் கருடசேவையில் சேவிப்பது பதினொரு திவ்ய தேசங்களுக்கு சென்று வழிபட்டதற்கு நிகராகும்.

கருட வழிபாட்டு நாள்

கருட வழிபாட்டு நாள்
garuda-worship-date


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருமாலுடன் எப்பொழுதும் உடனிருப்பவர் கருடன். இவரை ‘பெரிய திருவடி’ என்பர். பெருமாளின் அடியார் என்பதால் கருடாழ்வார் என்று சிறப்பிப்பர். பெருமாள் கோவில்களில் கருவறை எதிரே கைகூப்பிய நிலையில் இவரைக் காணலாம். வளர்பிறை பஞ்சமி திதி இவரை வழிபட நல்ல நாள்.

பாம்பு கனவில் வந்தாலோ அல்லது கண்ணில் பட்டாலோ கருடனை வழிபட்டு பரிகாரம் தேடலாம். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றியவர். அநேக கோவில்களில் பெருமாள் எதிரே இருக்கும் கருடாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாள் மற்றும் ஆண்டாளின் அருகில் இருக்கிறார்.

ஆதிமூலமே, என்று அழைத்த கஜேந்திரன் என்னும் யானையின் துன்பத்தைத் தீர்க்க பெருமாள் கருடன் மீது விரைந்து வந்து அருள் செய்தார். பக்தர்களின் துயர் போக்கிட எப்போதும் விரித்த சிறகுகளுடன் கருடாழ்வார் வைகுண்டத்தில் காத்திருக்கிறார் என்பது ஐதீகம்.

சாளக்கிராமம்

சாளக்கிராமம்

      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

சாளக்கிராமம் என்பது வெழுமூன இருக்கும் ஒரு கல். அதற்குள் விஷ்ணு சக்கரம் போல அச்சு இருக்கும். இது உண்மையில் உயிரியல் அறிஞர்கள் சோதனைக் கூடங்களில் சேர்த்து வைக்கும் படிம அச்சுகளாகும் #FOSSILS. அதாவது மில்லியன் அல்லது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உரியினங்களின் #கல் அச்சு.

இந்துக்களுக்கு இந்த படிம அச்சுகள் மிகவும் புனிதமானவை. சங்கு சக்கரம் போலப் பதிவான சித்திரம், விஷ்ணுவின் அடையாளம் என்று இந்துக்கள் கருதுவதால் அதற்கு தினமும் அபிஷேகம் ஆராதனை செய்து பூஜிப்பர்.

இது குறித்து ஆர்தர் மைல்ஸ் எழுதிய விஷயங்களை ஆங்கிலத்தில் அப்படியே காண்போம்:

1.சாளக்ராமம்  தோன்றிய கதை:—

ஒரு நாட்டியம் ஆடும் பெண்மணி பேரழகி. அவளுக்கு ஈடு இணையான

அழகுள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை. ஆகை யால் இமய மலைக்குப் போய்த் தவம் செய்வோம் என்று புறப்பாட்டாள்.

அங்கு #விஷ்ணு வந்தார். அவருடைய பேரழகைக் கண்டவுடன் இந்தப் பெண் தவத்தை எல்லாம் விட்டுவிட்டு அவரிடம் சென்று என்னைத் திருமண ம் செய்து கொள்ளுங்கள் என்றார்.

அவரோ மானுடனாகப் பிறந்த நடன மாதுவைக் கைப்பிடிக்க விரும்பவில்லை. இருந்த போதிலும் இப்படிப்பட்ட பேரழகியை விடக்கூடாதென்று ஒரு வழி கண்டுபிடித்தார்.

பெண்ணே நீ #கண்டகி நதியாகப் (GANDAKI RIVER) பிற ந்து வா. நான் அங்கே கிடக்கும் சாலக்ராமமாக அவதரிக்கிறேன். நீ என்னை எப்போதும் தழுவிச் செல்லலாம் என்றார்.

இந்தக்தையின் #உண்மைப் பொருள்: நேபாள நாட்டிலுள்ள கண்டகி நதியில்தான் அதிகமாக இவ்வகை படிம அச்சுகள் FOSSILS கிடைக்கின்றன. அது விஷ்ணுவின் அம்சம். அதை உணர்த்த இந்தப் புனைக்கதை உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எதையுமே நேரடியாகச் சொல்லாமல் அடையாள க் குறி யீட்டுகளால் (symbolic story) காட்டுவர் அப்படிப்பட்ட ஒரு கதை இது.

#வீடுகளில் வைக்கும் முறை:

பொதுவாக, வீடுகளில் வைத்து வழி படுவதற்குரிய சாளக்கிராம கற்களை, வழிபாட்டுக்கு தகுந்த பெரியோர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதியாகும்.

சாளக்கிராமம் பற்றிய தனித்தன்மைகளை அறிந்தவர்களிடம், அவற்றின் வண்ணம், ரேகைகள், குறிகள் ஆகியவை பற்றி நன்றாக ஆராய்ந்த பிறகு, அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது என்பதே பல நன்மைகளை தரக்கூடியதாகும்.

சாளக்கிராமம் பூஜிக்கப்படும் இடத்தில் சகல இறை #சக்திகளும் நித்திய வாசம் செய்வதாகவும், அங்கே சகல #செல்வங்களும் விருத்தியாவதாகவும் ஐதீகம்.

சாளக்கிராம பூஜை செய்வது எளிதானது. குளித்து முடித்து, #தூய ஆடை அணிந்து பக்தியுடன் மரப்பெட்டியில் வைக்கப்பட்ட சாளக்கிராமத்தை எடுத்து, சிறிய அளவில் அபிஷேகம் செய்து, ஊதுபத்தி காட்டி, இனிப்பை நைவேத்தியமாக படைத்து, நமக்கு தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வழிபடலாம்.

#துளசி இலை சமர்ப்பிக்கலாம்.

வெளியூர் செல்ல வேண்டிய சமயங்களில் பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி, அதன்மீது சாளக்கிராமத்தை வைத்து விட்டு செல்வது வழக்கம்.

சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பொதுவாக விக்கிரகங்கள் சேதம் அடைந்து விட்டால், அதை நீர் நிலைகளில் சேர்த்து விடுவார்கள்.

அதற்கு பதிலாக வேறு விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவது நியதி. ஆனால், சாளக் கிராம கற்கள் பின்னப்பட்டிருந்தாலோ, அல்லது விரிசல்கள் இருந்தாலோ அதை செப்பு, வெள்ளி கம்பிகள் வைத்து கட்டி, பூஜைக்கு பயன்படுத்தலாம்.

அபிஷேகமும், ஆராதனைகளும் செய்யலாம். வீட்டில் ஆண்களும், பெண்களும் தினமும் சாளக்கிராமத்தை பூஜிக்க வேண்டும்.

லட்சுமி நாராயண #சாளக்கிராமம்: ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது

லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்: நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது

ரகுநாத சாளக்கிராமம்: இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது

வாமன சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது

ஸ்ரீதர சாளக்கிராமம்: வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது

தாமோதர சாளக்கிராமம்: விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது

ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்: மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது

ரணராக சாளக்கிராமம்: விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது

ஆதிசேட சாளக்கிராமம்: பதினான்கு சக்கரங்களும் கொண்டது

மதுசூதன சாளக்கிராமம்: சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம்

சுதர்சன சாளக்கிராமம்: ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது

ஹயக்ரீவ சாளக்கிராமம்: மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது

வாசுதேவ சாளக்கிராமம்: இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது

பிர்த்யும்ன சாளக்கிராமம்: சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது

அநிருத்த சாளக்கிராமம்: விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது

சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் .

தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள்.

தர்ப்பணம் செய்வதின் அறிவியல் காரணங்கள்.


      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

7 தலைமுறைகள் !

ஜீன்களை ' சுக்ல தாது ' என்பார்கள் .

சுக்ல தாதுவில் 84 அம்சங்கள் இருக்கின்றன .

அவற்றுள் 28 அம்சங்கள் தந்தை, தாய் ஆகியோர் உட்கொள்ளும் உணவால் உருவாகக் கூடியவை . மற்ற 56 அம்சங்கள் முன்னோர்களால் கிடைக்கக் கூடியது .

தந்தையிடமிருந்து 21 அம்சங்கள்;

பாட்டனிடமிருந்து 15 அம்சங்கள்;

முப்பாட்டனிடமிருந்து 10 அம்சங்கள் --

ஆக 46 அம்சங்கள் கிடைக்கின்றன . பாக்கி உள்ள பத்து அம்சங்கள் முன்னோர்களிடமிருந்து கிடைப்பவை .

நான்காவது மூதாதையிடமிருந்து 6 அம்சங்களும்;

ஐந்தாவது மூதாதையிடமிருந்து 3 அம்சங்களும்;

ஆறாவது மூதாதையிடமிருந்து ஒரு அம்சம் ஆக 10 அம்சங்கள் கிடைக்கின்றன .

எனவே, ஒரு குழந்தையிடம் அதன் தந்தையுடன் சேர்த்து ஏழு தலைமுறையினரின் சுக்ல தாதுக்களின் பங்குகள் இடம்பெருகின்றன .

எனவே தான் தலைமுறை ஏழு என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது .

நெருங்கிய தொடர்பு கொண்ட தந்தை , பாட்டன் , முப்பாட்டன் --

இவர்கள் மூவருக்கும் திவசத்தில் தில தர்ப்பணம் கொடுப்பதற்கு இதுவே காரணம்.

1500 Year old Lord Murugan found in Combodia

1500 Year old Lord Murugan found in Combodia


1500 Year old Lord Murugan found in Combodia

Lord Ayyapan

"Lord Iyyapan" "Lord Ayyapan" "Lord Ayyapan1" "Lord Ayyapan3" 
"Lord Iyyapan" "Lord Ayyapan" "Lord Ayyapan1" "Lord Ayyapan3" 



Lord Ayyapan

Rare Pictures of Temple God

"Aadhi Kubeshwarar" "Kanchi Kamatchi" "Kumbakonam" "Kundrakudi" "Kuttralam" "Madurai Kalazhagar" "Seerkazhi Sattanathar" "Suriyanaar Koil" "Thillai Natarajar" "Thiru Kadaiyur" "Thirukuvalai Thiyagarajar" "Thirumanacheri kokilammbal" "Thirunelveli" "Thiruverkaadu temple" "Thiruverkaadu" "Uttra kosa mangai Maragatha Natarajar" "Vedaranyam" 


















குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

குமரகுருபர சுவாமிகள் அருளிய இந்த சகலகலாவல்லிமாலையை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

                       குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

சகலகலாவல்லி மாலை
1.​
வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,

உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.
நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.
அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.
தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.
பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.
பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.
சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.
சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.
மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன் - Nandi-shiva-worship-tips

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன் - Nandi-shiva-worship-tips

சிவன் கோவிலில் நந்திதேவர் சிவனை நோக்கி இருப்பார். பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. அதற்கான காரணத்ததை அறிந்து கொள்ளலாம்.

நந்தியின் குறுக்கே செல்லக்கூடாது என்பது ஏன் - Nandi-shiva-worship-tips

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753

நந்தி வழிபாடு
சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர். இதற்கு காரணம் உண்டு. நந்தி கர்ப்பக் கிரகத்திலுள்ள சிவனைப் பார்த்தவாறு இருக்கும். இது சிவனின் வாகனம்.

வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார். ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும். சன்னதியை மறைத்து நிற்காதீர்கள் என சொல்வதும் இதனால் தான். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். . அது மட்டுமல்ல, இறைவனின் முதல்வன் விநாயகர். கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரர். எனவே தான் விநாயகருக்குரிய அருகம்புல் மாலை நந்தீஸ்வரருக்கும் அணிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா - Nail-cut-on-friday

வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா - Nail-cut-on-friday

வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்றவுடன் ஏன் அன்று வெட்டினால் வெட்ட முடியாதா? நகம் தான் வெட்டுப்படாதா? என்று கேட்பார்கள். இவர்களுக்கு பதில் கூறுவதற்கு நாலுமுறை பிறந்து வரவேண்டும் அவ்வளவு சிரமம்.

வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா - Nail-cut-on-friday

One to One Share Market Training - 9841986753
    A Complete Share Market Course
Free Currency Tips|Stock and Nifty Options Tips| Commodity Tips |Intraday Tips
தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
For Appointment  - Whatsapp - 9841986753



வெள்ளிக்கிழமை நகம் வெட்டலாமா?
பொதுவாக சனிக்கிழமையை பெருமாளுக்கு உகந்த நாளாகவும், வெள்ளிக் கிழமையை தாயாருக்கு உகந்த நாளாகவும் கருதுவது மரபு மஹாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும். பொருளை இழப்பதே தப்பு என்றால் உடல் உறுப்பை இழப்பது இன்னும் அதிகபடியான தவறு அல்லவா? அதனால் தான் வெள்ளிக்கிழமை நகம் வெட்ட கூடாது என்று கூறுகிறார்கள்.

இப்படி சொன்னவுடன் இதற்கு ஏதாவது சாஸ்திர சான்றுகள் இருக்கிறதா? என்று ஒரு ஆஸ்திக கோஷ்டி கேள்வி எழுப்பலாம் இது நம்பிக்கையின் அடிப்படையில் உருவான பழக்கமே தவிர மனுநீதி போன்ற சாஸ்திரங்களின் அடிப்படையில் தோன்றியது கிடையாது. பிற்கால சாஸ்திர நூல்களில் இந்த விஷயம் சேர்க்கப்பட்டதே தவிர முன்பு உள்ள சங்கதி அல்ல. சாஸ்திரத்தில் சொல்லபடாததை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க கூடாது பெரியவர்கள் சொல்வதும் கூட ஒருவகை சாஸ்திரமே.