குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி?

குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருப்பது எப்படி?


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

குரு பகவானின் அருள் கிடைக்க விரதம் இருந்து ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குரு பகவானின் அருளைப் பெறலாம்.

ஜோதிட ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் பின்வரும் நற்செயல்களை செய்து, குருவின் அருளைப் பெறலாம்.

* வியாழக்கிழமைகளில், பகலில் விரதம் இருந்து, மாலையில் சிவன் கோயிலுக்கு சென்று, தட்சிணா மூர்த்தியை  வழிபடுவதன் மூலம் குருவின் அருளைப் பெறலாம்.

* வியாழக்கிழமைகளில், கொண்டக் கடலை சுண்டல் செய்து, பக்தர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் செய்வதாலும், குரு பகவானின் அருளைப் பெறலாம்.

* ஒரு ஏழைப் பெண்ணின் பிரசவ செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

* ஒரு ஏழைக் குழந்தையின் கல்விச் செலவை ஏற்பதன் மூலமும், குருவின் அருளைப் பெறலாம்.

* தாங்கள் படித்த பள்ளியின்ஆசிரியர் எவரேனும், ஓய்வு பெற்றவர் இருப்பின் அவரைத் தேடிச் சென்று வணங்கி, அவருக்கு ஏதேனும் உதவி தேவைப்படின் செய்து, ஆசி பெறுவதால், குருவின்அருளைப்பெறலாம்.

* வியாழக்கிழமை மாலை வேளைகளில், வீட்டில் தீபத்தின் முன் அமைதியாக உட்கார்ந்து குருவே துணை என்று 108 முறையோ 1008 முறையோ அல்லது அதற்கு மேலோ மனதில் சொல்லி வந்தால் போதும், தங்கள் மனக்குழப்பத்தை தீர்த்து, குடும்பத்தில்அமைதியை நிலவச்செய்வார்.

* சிவனை வழிபடுபவர்கள் எனில் வேதத்தில் சொல்லப்பட்ட பஞ்சாட்சர மந்திரமான “ஓம் நமசிவாய” என்ற மூல மந்திரத்தை மனதில் தியானித்தால் மௌன குருவான சிவனே, உங்களுக்கு வழித்துணையாக வருவார், இது உறுதி !

இதய நோய்களுக்கு பரிகாரத் ஸ்தலம் - மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்

இதய நோய்களுக்கு  பரிகாரத் ஸ்தலம் - மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்



தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது.

திரிபுர சம்ஹாரத்தில் திருமாலுக்கும் பிரம்மனுக்கும் ஏற்பட்ட சாபத்தை நீக்கிய இறைவன் வாழும் ஆலயம், மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கையின் தோஷம் நீக்கிய தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்த, மூவலூர் மார்க்க சகாயேசுவரர் ஆலயம்.

இந்த ஆலயம் இதய நோய்களுக்கு சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கின்றது. இதய நோய் உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் 11 நெய் தீபம் ஏற்றி, சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், பாலாபிஷேகம் செய்தும், அபிஷேக பாலை அருந்தியும் வந்தால் நோய் குணமாவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மூவலூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை - கும்பகோணம் வழித்தடத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே 5 கி.மீ தூரத்தில், மயிலாடுதுறை ஜங்சன் இருக்கிறது. அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில், மூவலூர் அமைந்துள்ளது. மூவலூர் தேரடி பேருந்து நிறுத்தத்திற்கு அருகே ஆலயம் அமைந்துள்ளது. 

வாஸ்து குறிப்புகள்- பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்

வாஸ்து குறிப்புகள்- பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!

வாஸ்து சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் மற்றும் நல்ல உடல் நிலைக்கு தேவையான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற அருமையான வாஸ்து டிப்ஸ் இதோ!

உறங்கும் போது, தலையை தெற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். கபா தோஷங்கள் இருந்தால், இடது பக்கம் திரும்பியும், பிடா தோஷம் இருந்தால், வலது பக்கம் நோக்கி தூங்க வேண்டும்.

வீட்டின் நடுவே படிக்கட்டுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அது முக்கிய உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டின் ஓரமாக படிக்கட்டை அமைக்கலாம். வீட்டின் மத்திய பகுதி காலியாக இருக்க வேண்டும் அல்லது எந்த ஒரு கனமான மரச்சாமான்களையும் வைத்திருக்கக் கூடாது.

தலைக்கு மேல் உள்ள உத்தரங்கள் வீட்டின் மைய பகுதி வழியாக செல்ல கூடாது. ஏனெனில் அவை குழப்பமான மனநிலையை ஏற்படுத்தும். வீட்டின் தென் கிழக்கு பகுதியில் பூமிக்கு அடியில் தண்ணீர் தொட்டி இருக்கக் கூடாது. ஏனெனில் அது உடல்நல பிரச்சனைகள் அதிகம் ஏற்படுத்தும்.

வீட்டின் அக்னி மூலையில், அதாவது வீட்டின் தென் கிழக்கு மூலையில் தினமும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது மிகவும் நல்லது. வீட்டை சுற்றியுள்ள சுவரும் அதன் கதவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். கதவின் இரு பக்கங்களிலும் சிட்ரஸ் பழங்கள் அல்லது செடிகளை வளர்க்கலாம்.

உங்கள் வீட்டில் யாரேனுக்கும் உடல்நலம் சரியில்லை என்றால், அவரின் அறையில் சில வாரங்களுக்கு மெழுகுவர்த்தியை எரிய வைப்பது நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

வீட்டின் தென் திசையை நோக்கி ஆஞ்சநேயர் படத்தை வைத்திருப்பது, வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.

கபால பைரவர் காயத்ரி மந்திரம்

கபால பைரவர் காயத்ரி மந்திரம்


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும்

‘ஓம் கால தண்டாய வித்மஹே
வஜ்ர வீராய தீமஹி
தந்நோஹ்: கபால பைரவ ப்ரசோதயாத்’

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும். இதன் மூலம் சந்திர திசை யோக திசையாக இருந்தால், மேலும் யோகங்கள் அதிகரிக்கும். சந்திர திசை பாதகாதிபதி திசையாக இருந்தால், கஷ்டங்கள் குறையும்.

திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு

திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் உள்ள தொடர்பு


தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு. அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும். இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 5. வல்லாள மகாராஜா கோபுரம், 6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

1. ராஜகோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார். அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார். ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார். 135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால் அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள். அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன. கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. பேய்க்கோபுரம்

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது. கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர். மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

3. திருமஞ்சன கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை. எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள். அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.

4. வல்லாள மகாராஜா கோபுரம்

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு. ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது. அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

5. கிளி கோபுரம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும். 1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று. அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார். கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

6. தெற்கு கட்டை கோபுரம்

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

7. மேற்கு கட்டை கோபுரம்

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

8. வடக்கு கட்டை கோபுரம்

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

9. அம்மணியம்மாள் கோபுரம்

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது. 

ஸ்ரீ சனி பகவான் பற்றிய ஐம்பத்தி மூன்று அறிய தகவல்கள்

ஸ்ரீசனி பகவான் பற்றிய ஐம்பத்தி மூன்று அறிய தகவல்கள்


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

1. சனியானவர் ஜன்ம லக்னத்தில் இருந்தாரானால் அது சொந்த வீடாக இல்லாத பட்சத்தில் ஜாதகரின் வாழ்க்கையில் சங்கடங்கள் சூழக் கூடும். ஜாதகர் வறுமையில் உழல்வார். மட்டமான செயல்களைச் செய்யக்கூடியவர் ஆவார். மந்தமாகப் பேசுவார்.

2. லக்னத்தில் சனி இருக்கப் பெற்று சனிக்கு அது பகைவீடாக இருக்குமானால் நண்பருடன் சண்டை போடுகிற குணம் ஜாதகருக்கு அமையும். ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு. தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும்.

3. மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

4. ரிஷபத்தில் உள்ள சனியானவர் அது ஜன்ம லக்னமானால் சிறப்பான பலன்களைத் தருவார் என்று சில கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.

5. 2-ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2-ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும்.

6. சனியானவர் 2-ஆம் இடத்தில் இருந்தாரானால் தாய்நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று சுகபோகங்களையும், செல்வங்களையும் பெறக்கூடியவராக இருப்பார்.

7. 2-ல் உள்ள சனியால் ஜாதகருக்குத் தாயிடம் பக்தியுண்டாகும். ஆனால், சகோதர பாசம் இராது.

8. 2-ல் உள்ள சனிக்குச் சுபபலம் இருக்குமானால் அதாவது ஆட்சி, உச்சம் போன்ற நிலை இருக்குமானால் குறைகள் குறையவும், நிறைகள் அதிகமாகவும் சந்தர்ப்பமுண்டு.

நன்மைகளை வாரி வழங்கும் ராசிகளில் சனி பிறந்த பலன்கள்

9. 3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். ஆனால், மனோவியாகூலம் அவ்வப்போது உண்டாகும்.

10. சனியானவர் 3-ல் இருந்தால் ஜாதகருக்குத் தரும குணம் இருக்கும். ஆனாலும் செய்யும் காரியங்களில் தரக்குறைவு இருந்து கொண்டிருக்கும். 3-ல் உள்ள சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

11. 3-ஆம் இடத்தில் உள்ள சனி பலவீனமாக இருந்தாரானால் சகோதரர்களுக்கு நாசம் ஏற்படக்கூடும். தாய்நாட்டை விட்டு வெளிநாடு செல்லக்கூடிய நிலை ஜாதகருக்கு உண்டாக கூடும். அந்த நிலை நல்லதாக அமைவதற்கு 3-ல் உள்ள சனிபலம் பெற்றிருக்க வேண்டும்.

12. 4-ல் உள்ள சனி மகிழ்ச்சியைக் கெடுப்பார். அமைதியைக் குலைப்பார். கவலையைக் கொடுப்பார். குடும்பத்திலிருந்து பிரிய வைப்பார்.

13. -ஆம் இடத்தில் உள்ள சனியால், தந்தை வழி நலம் குறையும். சொத்துக்கள் சேர்மானம் இராது. இருதயநோய் ஏற்படக்கூடும். வயிற்றுவலியும் உண்டாகக்கூடும்.

14. 4-ஆம் இடத்தில் உள்ள சனியினால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும்.

15. பலம் பொருந்தியவராக உள்ள சனி 4-ல் இருப்பாரானால் ஜாதகருக்குச் சுபிட்சமும், செல்வமும் வாகனவசதியும் ஏற்படத் தடையிராது.

16. 5-ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.

17. 5-ல் உள்ள சனி ஜாதகருக்குப் புத்தி மந்தத்தை உண்டு பண்ணுவார். பகைவரால் தொல்லையை உண்டாக்க கூடும். மனநலம் திருப்திதராது. நேர்வழியில் சிந்தனை செல்லாது. மனோவியாதி உண்டாக கூடும்.

18. 5-ல் உள்ள சனியின் மூலம் வயிற்றுநோய் உண்டாகலாம். ஆனால் பொதுவாக ஓர் உன்னதமான வாழ்க்கை பெறுவதற்குச் சந்தர்ப்பமுண்டு.

19. 8-ல் உள்ள சனி உச்சமாகவோ, ஆட்சியாகவோ இருந்தாரானால் கெட்ட பலன்கள் பெருமளவுக்கு குறைந்து விடும். நல்ல பலன்கள் இடம்பெறும்.

20. 6-ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார்.

21. 6-ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.

22. பொதுவாக 6-ஆம் இடம் சனிக்கு ஏற்புடைய இடமாகையால் ஜாதகர் கவுரவமாகவும், செல்வ சுகங்களோடும் வாழக்கூடும். ஜீரண சக்தியும் ஜாதகருக்கு இருக்கும்.

23. 6-ஆம் இடத்தில் உள்ள சனியினால் தாய் நலம் பாதிக்கப்படும். வயிற்றுப்புண் ஏற்படக்கூடும். இந்தச் சனி பலமுள்ளவராக இருந்தால் ஜாதகருக்கு நோய் நொடிகள் உண்டாகாமல் ஆரோக்கியம் இருந்து வரும்.

24. 7-ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். செல்வ சுபிட்சம் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.

25. 7-ஆம் இடத்தில் உள்ள சனி, ஆண் ஜாதகருக்குத் தகாத பெண் சேர்க்கையை உண்டாக்கும். கீழ்த்தரமான செயல்களை ஜாதகர் செய்ய நேரும்.

26. 8-ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும்.

27. 8-ல் உள்ள சனி ஜாதகருக்குப் பணத்தைச் சேர்த்துத் தருவாரே தவிர மதிப்பை தர மாட்டார். ஜாதகர் அடிமைவேலை செய்ய வேண்டியிருக்கும். சுயமாக பெரிய காரியங்களை நிர்வகிக்கக்கூடிய ஆற்றல் இல்லாமல் போகும்.

28. 8-ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

29. 9-ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும்.

30. சனி 9-ல் இருக்கப் பிறந்தவர்களுக்கு வேதாந்த மனப்பான்மை ஏற்படும். ஜோதிடம் போன்ற கலைகளில் பாண்டித்யம் உண்டாகும்.

31. 9-ல் உள்ள சனி பலவீனம் பெற்றிருந்தால் ஜாதகருக்கு அதிர்ஷ்டக்குறைவு உண்டாகும். மற்றவர்களுக்கு ஜாதகரால் தொல்லை விளையக்கூடும்.

32. பெரும்பாலும் 9-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.

33. 10-ஆம் இடத்தில் உள்ள சனியானவர் விவசாயம் மற்றும் தானியங்கள், எண்ணெய், உரம் ஆகியவற்றின் மூலம் ஜாதகர் பொருள் திரட்ட சந்தர்ப்பத்தைத் தேடித்தருவார்.

34. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு சாத்திர ஞானத்தை உண்டு பண்ணுவார். சிறந்த கல்வி ஜாதகருக்கு உண்டாகும். தைரியம் புகழும் ஜாதகரை வந்து சேரும்.

35. 10-ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார்.

36. 10-ஆம் இடத்தில் சனி உள்ளவர்கள் சமூகத்திற்குத் தலைமை தாங்க முடியும். பெரிய குழுவுக்கு ஜாதகர் தலைமை தாங்கும் சக்தி ஏற்படக் கூடும்.

37. 10-ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.

38. சனி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார். நிறைய வருமானம் அடையப் பெறுவார்.

39. 11-ஆம் இடத்தில் உள்ள சனி மூலம் ஜாதகர் தைரியசாலியாக வாழ முடியும். சரீர சுகம் அமையும். ஆனால் இளமையில் உடல் உபாதை ஏற்படக் கூடும்.

40. பொதுவாக 11-ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் விற்பன்னராக முடியும். இரும்பு, விவசாயம், எண்ணெய், உலோகங்கள் ஆகிய துறைகளின் மூலம் ஜாதகர் நிறையப் பொருள் திரட்டும் வாய்ப்பு ஏற்படும்.

சனி பகவான் ஸ்தான மற்றும் பார்வை பலன்கள்

41. 11-ஆம் இடத்தில் உள்ள சனி பல நிலைகளிலும் சிறப்பைத் தருவார். என்றாலும், குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.

42. 12-ல் உள்ள சனி ஜாதகருக்கு நல்லொழுக்கத்தை உண்டாக்க மாட்டார். தொழில்களிலும் வீழ்ச்சியை உண்டு பண்ணுவார்.

43. 12-ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும்.

44. 12-ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.

45. நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.

46. ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 வருட வீதம் 32 1/2 என்ற சஞ்சரிக்கும் காலம் 7 சனி காலமாகும்.

47. ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

48. ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை கூட்டி வழங்குவார்.

49. இந்தியாவில் திருநள்ளாறில் தனி ஆலயமாக சனீஸ்வரன் மிகப் பிரசித்தம் பெற்று விளங்குகின்றார். இலங்கையில் திருக்கோணமலையில் மரத்தடியில் சனீஸ்வரனுக்கு தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

50. சனிக்கிரகம் பூமியில் இருந்து 97 கோடியே 90 லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது. இதனைச் சுற்றி 3 வளையங்கள் உள்ளன. இதன் நடுவில் இருள் படலம் உள்ளது. 75000 மைல் விட்டமும் 700 பங்கு கன பரிமானம் உள்ளது. பூமியைப் போல் 100 மடங்கு எடையுள்ளது. இது ராசி மண்டலத்தைச் சுற்றிவர 29 வருடம் ஆகிறது.

51. சங்கடங்கள் தீர்க்கும் சனிபகவானை சனிக்கிழமைகளில் விசேஷமாக புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து எள்ளு எரித்து சனிபகவானின் கெடுபலனிலிருந்து விடுபடுவதால் நற்பலனை பெறலாம்.

52. சனீஸ்வரரின் அருளை வேண்டி வழிபடுபவர்கள் அவசியம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும் வேண்டுதல் செய்வது நல்லது.

53. சனிபகவான் தொல்லை நீங்க வேண்டுமானால் விபூதி அணிய வேண்டும் என்கிறார் ஷீத்வா முனிவர்.

யோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை)

யோகா அல்ல ஓகம் - (OGAM - ஓகக்கலை)
 (OGAM - not Yoga)


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்! தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம்!!

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர்.

தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர்.

அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம்.

மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர்

சில தமிழ் ஆசான்கள்.
தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர்.

ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர்.

அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர்.

இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம்.

இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்:-

1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமசுகாரம் - SALUTE TO THE SUN

2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் - SALUTE THE SUN ON ONE LEG

3. அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE

4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE

5. மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS

6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE

7. எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE

8. பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE

9. நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE

10. மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE

11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE
விலங்கு - CREATURES
நீர் உயிரிகள் - AQUATICS

12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE

13. மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE

14. சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE

15. முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE

16. சங்கு இருக்கை /
உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE

17. ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன - REPTILES

19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE

20. பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE
நடப்பன - VERTEBRATE

21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE

22. ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE

23. பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE

24. ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE

25. நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE

26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE

27. அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE

28. மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA

29. முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE

30. நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE
பறப்பன - AVES & INSECTS

31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE

32. அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI GRASSHOPPER POSTURE

33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE

34. புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE

35. பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE

36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE

37. ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE

38. கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE

39. சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE

40. நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE

41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE

நடனம் - DANCE
42. நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA

43. களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE

44. கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE

45. வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE
1முத்திரை - GESTURE

46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE

47. பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE

48. படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE

49. குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE

50. ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE

கருவிகள் - TOOLS :-

51. நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE

52. அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE

53. சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE

54. அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE

55. வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE

56. காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE

57. படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE

58. முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE

59. பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE

60. கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE

தொழில் - ACTIVITIES :-

61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE

62. வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE

63. நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE

64. அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE

65. காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE

66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE

67. தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.

உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY :-

68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE

69. ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE

70. கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE

71. விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE

72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE

73. மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE

74. கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE

75. குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD

76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE

77. மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE

78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE

79. நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT

80. ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP

81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE

82. முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND

83. பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND

84. மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE

85. பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED

86. தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE

தூய்மை - CLEANSING :-

87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE

88. வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK

89. குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE

90. மூச்சொழுக்கம் - பிராணாயாமம் -
ORDER OF BREATH

91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN

92. துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH

93. சீழ்க்கை - சீத்காரி - WHISTLING

94. நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING

95. குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE

96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION

97. நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE

98. தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING

99. கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING

100. பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED TEETH

101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING

102. வெளி மூச்சு - விலோமம் - EXHALING

103. தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX

நிறைவு நிலை - PACIFICATION :-

104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE

105.. அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE

விலங்குகளும் அவைகளின் சற்குருவும் - ஸ்ரீ வாத்தியார் அருளியது

விலங்குகளும் அவைகளின் சற்குருவும் -  ஸ்ரீ வாத்தியார் அருளியது


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


பாம்பு - ஸ்ரீ அஸ்தீக சித்தர்,
"அஸ்தீகா அபயம் அபயம்" என்று சொல்ல பாம்புகளினால் வரும் ஆபத்து நீங்கும்.

எறும்பு - ஸ்ரீ பிப்பலாத மகரிஷி,
ஸ்ரீ யாழ் அமராந்தகர் என்னும் (காரணப்) பெயரை உடைய மகரிஷி திருஅண்ணாமலையில் நிலம்புரண்டி என்னும் பெயர் கொண்ட அதியற்புத மூலிகை செடியின் நிழலில் எறும்புகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

பல்லி - ஸ்ரீ சுத்தோதக மகரிஷி (வந்தவாசி)

கிளி - ஸ்ரீ சுக பிரம்மரிஷி

கழுதை - ஸ்ரீ ருத்ர பல்குனி சித்தர் (பூவாளூர்)

மீன் - ஸ்ரீ கோடி பஞ்சாட்சர சித்தர் (மீன்சுருட்டி)

புலி - ஸ்ரீ வியாக்ரபாத மகரிஷி (சிதம்பரம்)

கரடி - ஸ்ரீ கரடி சித்தர் (திருவாசி)

சுவாலினன் (எருமை மாடு) - ஸ்ரீ காரடையான் கரட்டை என்னும் தெய்வ தேவதை

சுவானன் (நாய்) - ஸ்ரீ பைரவ மகரிஷி, சித்தர் (பூந்தமல்லி)

காகம் - ஸ்ரீ வைகாசி பூரண மகரிஷி (தில்லையாடி), ஸ்ரீ சனி பரணி சித்தர்

வண்டு - ஸ்ரீ பிருங்கி மகரிஷி

மின்மினி பூச்சி - ஸ்ரீ திரிநாம கண்ட மகரிஷி (கருப்பத்தூர்)

அணில் - ஸ்ரீ அணில் அப்புக்குட்டி சித்தர்.

நமது அன்றாட வாழ்க்கை நலமாய் அமைய மனிதர்கள் மட்டும் அல்லாது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களுமே நமது நலனுக்காகப் பாடுபடுகின்றன. எனவே, நாம் சிற்றுயிர்கள் அனைத்தையுமே வழிபட வேண்டும். அப்போதுதான் நமது வாழ்க்கை பூரணத்துவம் பெறும். சிற்றுயிர்களை வழிபடுவதால் ஏற்படும் உங்களுக்குத் தெரிந்த, தெரியாத பலன்களை இங்கே அளித்துள்ளோம்.

திருக்கோயிலில் உள்ள எறும்புகளுக்கு உணவிடுவதால் கடன் தொல்லைகள் தீரும். திருச்சி திருநெடுங்களம் திருக்கோயிலில் இயற்றப்படும் இத்தகைய வழிபாடு ஒருவருக்கு வர வேண்டிய நியாயமான சொத்தைத் திரும்ப பெற்றுத் தரும்.

நாய்களுக்கு ரொட்டி, பிஸ்கட், கடலை மிட்டாய் போன்றவற்றை உணவாக வழங்குவதால் கால தோஷங்களிலிருந்து நிவாரணம் கிட்டும். நன்றி மறவா நன்னிலையை அடைவோம்.

கழுதைகளுக்கு காரட், பச்சை பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவாக வழங்கி வந்தால் நியாயமான வழியில் செல்வம் பெருகும். கடுமையான தோல் வியாதிகளின் வேகம் குறையும்.

உண்மையைப் பேசு, நல்லதைச் செய் என்று எல்லோரும் எவ்விடத்திலும் சொல்லி வருகிறோம். ஆனால், இதை நடைமுறையில் செயல்படுத்துவது லட்சம், கோடியில் ஒருவரே. உண்மையைப் பேசி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் ஹரிச்சந்திர மகாராஜா. அண்மைக் காலத்தில் நம் மனம் கவர்ந்தவர் அண்ணால் காந்தியடிகள். இவ்வாறு நன்றாகத் தெரிந்த ஒரு நல்ல விஷயத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள உதவுவதே கரடி வழிபாடாகும். குருவை, பெரியோரை, மகான்களை, இறைவனை, நல்ல கொள்கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள விரும்புவோர் திருவாசி திருத்தலத்தில் இயன்றபோதெல்லாம் சிறப்பாக வியாழன் தோறும் வழிபட்டு வந்தால் அத்தலத்தில் தினமும் அரூபமாக வழிபடும் கரடி சித்தர் அருள்புரிவார்.

பல்லிகளுக்கு தலைமை குருவாக இருப்பவர் சுத்தோதக மகரிஷி. இவர் உறையும் வந்தவாசி திருத்தலத்தில் இறைவனை வழிபட்டு வந்தால் வீடுகளில் உலவும் நற்சக்திகளை செய்வினை, ஏவல்கள் மூலம் கட்டி வைத்திருந்தால் அத்தகைய குறைபாடுகள் நீங்கும். வாசிக் கலையில் தேர்ச்சி கிட்டும்.

முதலைகளுக்கு உணவிட்டு வந்தால் நல்ல மழைப் பொழிவு ஏற்படும்.

பசு மாடுகளுக்கு கோதுமை தவிடு, அரிசி கழுநீர், கீரை வகைகளை அளித்து வந்தால் சந்ததிகள் பெருகும்.

எருமை மாடுகளுக்கு மக நட்சத்திரத்தன்று கீரை அளித்து வந்தால் எம பயம் அகலும்.

குரங்குகளுக்கு வேர்க்கடலையை உணவாக அளித்து வந்தால் குருவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை வளரும்.

மயில்களுக்குத் தான்ய உணவுகளை வழங்கி வந்தால் காமக் குற்றங்களிலிருந்து விடுபடலாம்.

மைனாக்களுக்கு நெல் மணிகளை அளித்து வந்தால் குடும்பத்தில் தம்பதிகளுக்கிடையே ஏற்படும் மன வேற்றுமை அகலும்.

அணில்களுக்கு துவாதசி அன்று வாதாங் கொட்டை, முந்திரிப் பருப்பு அளித்து வந்தால் முறையான காதல் வெற்றி பெறும்.
பச்சைக் கிளிகளுக்கு கொவ்வைப் பழங்களை அளித்து வந்தால் தேவதைகள், தெய்வங்களின் தரிசனம் கிட்டும்.

கருடன், பருந்துகளுக்கு உணவிட்டு வந்தால் இறுதிக் காலத்தில் பாயில் கிடந்து நோயில் வாடும் நிலை ஏற்படாது.

பாம்புப் புற்றுகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வணங்கி பால் வார்த்து வந்தால் திருமண தோஷங்களுக்கு பரிகார முறைகள் கிட்டும்.

யானைகளுக்கு கேழ்வரகு களி, கரும்பு, வாழைப் பழம் போன்ற உணவுகளை குறைந்தது இரண்டு டன் அளித்து வழிபடுதலால் சிறப்பான புத்திக் கூர்மை ஏற்படும்.

புறாக்களுக்கு கோதுமை, கம்பு போன்ற தானியங்களை அளித்து வந்தால் அயல் நாடுகளில் வசிக்கும் நமது உறவினர் நலம் பெறுவர்.

ஆஸ்திரேலிய கடலோரப் பகுதிகளில் காணப்படும் பெலிகன் பறவைகளுக்கு மீன்களை ஊட்டி விடுவதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் இவர்களை இழந்ததால் ஏற்படும் துக்கத்திற்கு ஓரளவிற்கு மன ஆறுதல் கிட்டும். கிளி, நாய்களைப் போல மனிதர்களிடம் அன்புடன் பழகும் பறவை இனமே பெலிகன் பறவையாகும்.

வெண்ணிற குதிரைகளுக்கு அவித்த கொள் அளித்து வந்தால் குழந்தைகள் படிப்பில் முன்னேறுவர். மந்த புத்தி அகலும்.

பஞ்சாட்சரம் என்றால் என்ன ?

பஞ்சாட்சரம் என்றால் என்ன ?

ஓம் நமசிவய பஞ்சாக்ஷர ரகசியம்

பஞ்சாட்சரம் என்றால் என்ன ?


 தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

ஐந்து அட்சரம் (எழுத்துக்கள்) என்று பொருள்படும்.

பஞ்ச என்பதும் அட்சரம் என்பதும் சம்ஸ்கிருத சொல்லாகும்.

தமிழர்களாகிய நாம் ஐந்தெழுத்து என்று சொல்கின்றோம்.

மேலும்
வறுமை,
பட்டினி,
நோய்,
விரக்தி,
சாவு
இவை ஐந்தும் ஒன்று  சேர்ந்து ஒரு நாட்டையோ மாநிலத்தையோ ஊரையோ வாட்டும்போது அதனை நாம் பஞ்சம் என்கின்றோம்.

சரி ஐந்தெழுத்து என்பது என்ன ?

*ந நிலம்*

*ம நீர்*

*சி நெருப்பு*

*வ காற்று*

*ய வானம்*

இது ஒரு அற்புதமான சேர்க்கை....

தமிழில் ஓர் அதிசயம் உண்டு

உயிர்மெய் எழுத்துக்களை *வல்லினம் , மெல்லினம் , இடையினம்* என பிரித்து சொல்வார்கள்.

கசடதபற வல்லினம்,

ஙஞணநமன மெல்லினம் ,

யரலவழள இடையினம்.

மேலே நாம் கண்ட ந ம சி வ ய எழுத்துக்கள்.

இதில் *முதல் இரண்டும் மெல்லினம்*

*மத்தியில் ஒரேழுத்து மட்டும் வல்லினம்*

*இறுதி இரண்டு எழுத்தும் இடையினம்.*

வல்லின எழுத்து அக்னியை குறிக்கும் *சி .*

வல்லின மெல்லின இடையின எழுத்துக்களில் உள்ள உயிர்த்தன்மையை கண்டு அதனை கொண்டே

*நமசிவய* எனும் திரு ஐந்தெழுத்து மந்த்ரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தற்செயலாக ஏற்பட்டது அல்ல ,

தேவர்களும்,

ஞானிகளும் ,

ரிஷிகளும்

மகா முனிவர்களும் இறைத்தன்மையை

உணர்ந்து ஏற்படுத்திய உன்னத சொல்.

இயற்கையெனும் இறைவனாரை ஒரே சொல்லில் அழைக்க இந்த திருவைந்தெழுத்து மனிதர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கின்றது

இதனை கருத்தில் கொண்டே இந்த பஞ்சாட்சரம் உருவாக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்து த்யானித்து கவனித்தால் புரியும்.

நிலமும் நீரும் ஒருபுறமும் காற்றும் வெளியும் மறுபுறமும் இருக்க நெருப்பு மத்தியில் உள்ளதாக அமைந்துள்ளது.

*எவ்வளவு அற்புதமான அமைப்பு பாருங்கள்....*

நிலமும் நீரும் எப்போதும் ஒன்றாக இருக்கும்

வானமும் காற்றும் எப்போதும் ஒன்றாக இருக்கும்.

*நெருப்பு தனித்தன்மை* வாய்ந்தது.

அதனால் அது மத்தியில் இரண்டையும் சமநிலையில் கொண்டு அமைந்துள்ளது.

இதனை மனிதனின் உடலில் உள்ள காற்று நீர் வெளி மண் நெருப்போடு இணைக்கும்போது மனிதன் அசாத்திய பலவான் ஆகின்றான்.

காற்று, மண், நீர், வெளி, நெருப்பு இவைகளின் சக்தியை அளவிட முடியாது.

இவைகள் தனித்தனியே இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் வல்லமை கொண்டவை.

ஐந்தும் ஒன்று சேர்ந்தால் அழிவின் விளைவை சொல்லக்கூடுமோ,

ஆகவே ரிஷிகளும், முனிவர்களும், முன்னோர்களும் இதனை பஞ்ச பூதங்கள் என்றனர்.

மனிதர்கள் எல்லோருக்குள்ளும் சரிவிகிதத்தில் பஞ்சபூதம் எனப்படும் இவை இருப்பதில்லை.

ஒன்று கூட்டியும் ஒன்றை குறைத்தும் இறைவனார் படைத்துள்ளார்.

ஆகவேதான் ,

மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குணாதிசயங்கள் இருப்பதில்லை.

சிலர் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள்.

சிலர் கோபத்தின் உச்சியிலேயே இருப்பார்கள்.

சிலர் குணக்குன்றாக இருப்பார்கள்

சிலர் மோசமான சிந்தனையாளராக இருப்பார்கள்.

சிலர் மிக உயர்ந்த ஞானத்தினை இயல்பாக பெற்றிருப்பார்கள்.

காரணம் .....

இந்த பஞ்சபூதங்களின் சேர்க்கை விகிதாசாரம் கூட்டியோ குறைத்தோ சமமாகவோ அமையும் போது மனிதன் அதற்கேற்ப பிறக்கின்றான்.

அது மனிதனின் கர்மாவை பொறுத்தே அமைகின்றது

அதனை வேறு பதிவில் பார்ப்போம்.

நமசிவய எனும் பஞ்சாட்சரம் மனிதனின் மூலக்கூறுகளில் உள்ள குறைவினை நீக்கி அவனை முழு பஞ்சபூத ஆதிக்கத்திற்கு கொண்டுவருகின்றது.

அதாவது மனிதனின் உடலில் பஞ்சபூதங்களில் எதனுடைய சக்தி குறைக்கப்பட்டு எதனுடைய சக்தி கூட்டப்பட்டுள்ளதோ அதனை சமமாக்கி அந்த மனிதனை முழுமையாக்குகின்றது.

காரணம்

அதில் உள்ள *பஞ்சபூத* சக்தியாகும்.

அவ்வாறு முழுமையை காணும் மனிதன் மிக அதிசயமான உணர்வுகளால் தூண்டப்பட்டு மனிதர்களில் மேன்மையை கொண்டவனாக மாற்றம் காணுகின்றான்.

அவனுக்கு உலகின் இயக்கமும்,
அந்த இயக்கத்தின் காரணமும் புரிகின்றது.

தான் யார் என அறிகின்றான் ,

தான் யார் என அறிந்தவன் இறைவனாரை அறிந்தவனாகின்றான்.

இறைவனாரை அறிந்தபின் உலகில் அறிவதற்கு ஏதுமில்லை,

ஆகவே அவன் தான் கண்டதை உலகிற்கு எடுத்து சொல்கின்றான்.

அவர்களைத்தான் சாதாரண மக்களாகிய நாம்

ஞானிகள் என்கின்றோம்,

ரிஷிகள் என்கின்றோம்,

முனிவர்கள் என்கின்றோம்,

சித்தர்கள் என்கின்றோம் , .

புத்தர்கள் என்கின்றோம்.

எதனால் இந்த மாற்றம் ஏற்படுகின்றது?

பஞ்சபூத சம நிலையை கண்டதால் இந்த அசாத்தியமான மாற்றம் நேர்கின்றது.

பஞ்சாட்சரம் சொல்வதால் மனிதனின் அந்தராத்மா தூண்டப்பட்டு

அதுவரை அவன் கண்ட,

கேட்ட,

அனுபவித்த அனைத்தையும்

பொய்யென படம் போட்டு காட்டி

அவனை

அவனது எண்ணங்களை

செயல்களை

கர்மாவை

தூய்மையாக்கி

அந்த  மனிதனை மேம்பட்ட நிலைக்கு கொண்டு செல்கின்றது.

இவ்வாறான பஞ்சாட்சரம் யாருக்காக உருவாக்கப்பட்டது ?

ஏன் உருவாக்கப்பட்டது ?

மனிதன் பேசத்துவங்கிய காலம்தொட்டே இந்த மகாமந்த்ரம் சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகின்றோம்.

எம்பெருமானாராகிய சிவபெருமானை குறிக்கும் சொல்லாக இந்த ஐந்தெழுத்து கருதப்படுகின்றது.

விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து இவை மூன்றும் சிவபெருமானாரை குறிக்கும் கருவிகளாகும்.

கருவிகளா ?

ஆமாம் இவைகள் கருவிகள்தான்.

ஏனெனில் இவை தனித்தும் சேர்ந்தும் செயலாற்றும் வல்லமையை கொண்டவையாகும்.

விபூதியை கொஞ்சம் எடுத்து அதில் சில மந்த்ரங்களை சொல்லி இடும்போது சில தீய சக்திகள் மறைகின்றன.

ருத்ராக்கம் ஒரு மணியை கழுத்தில் அணிந்துகொண்டால் 108 சிவகணங்கள் அணிந்தவரை சுற்றி காவலாகின்றன.

திருவைந்தெழுத்தினை உள்ளார்ந்து ஒதுபவனை உலகஇயக்கம் அறிய செய்கின்றது.

இவ்வாறான செயல்களை விபூதி, ருத்ராக்கம், திருவைந்தெழுத்து செய்வதால் அவைகளை கருவிகள் என்றே சொல்லல் வேண்டும்.

இவ்வாறாக இத்திருவைந்தெழித்தின் மகிமையை உணர்ந்த ஞானப்பெருந்தகையோர் இதில் உள்ள சக்திகளை பலவகையாக பிரித்து பல்வேறு வகைப்படுத்தினார்கள்.

அவை,

ஸ்தூல பஞ்சாட்சரம்

சூக்கும பஞ்சாட்சரம்

அதிசூக்கும பஞ்சாட்சரம்

ஸ்தூல பஞ்சாட்சரம் என்பது நமசிவய இதனை எப்படி வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குருவின் உதவியும் இன்றி சொல்லி வரலாம்.

சூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவயநம இதனை மனதிற்குள் சொல்லவேண்டும் இறைவனாரை ஒளி உருவாக மனதில் சித்தரித்து உள்மனதில் உருவம் கொண்டு சொல்லி வரவேண்டும். இதனையும் குருவின் உதவியும் இன்றி சொல்லி வரலாம்.

அதிசூக்கும பஞ்சாட்சரம் என்பது சிவய சிவசிவ இதனை குருவின் மூலமாகவே அறிய வேண்டும் ,

குருவின் வழிகாட்டுதல்படி சொல்லி வருதல் வேண்டும்.

இன்னும் காரண பஞ்சாட்சரம், அதிகாரண பஞ்சாட்சரம் என்றெல்லாம் உள்ளது.

அவை முறையே சிவசிவ என்றும்,

சி என்றும் சொல்லப்படுவது

இதன் முறைகளையும் உத்தம குருவின் வழிகாட்டுதல் மூலமாகவே சொல்லி பழகுதல் வேண்டும்.

உள்ளத்தில் தூய்மை, செயலில் தர்மம், வாழ்வில் சத்யம் கொண்டவர்கள் மட்டுமே எல்லாவிதமான பஞ்சாட்சரங்களையும் சொல்லவேண்டும்.

எந்த பஞ்சாட்சரமாக இருந்தாலும் அதனை சத்யத்தின் மறுஉருவாகவே பார்க்கவேண்டும்.

மனத்தூய்மை , எண்ணங்களில் தூய்மை தனிமனித ஒழுக்கம் அற்றவர்கள் பஞ்சாட்சரம் சொல்லக்கூடாது.

அது பாபங்களை சேர்க்கும்.

தூயவர்களாக நின்று லோக க்ஷேமம் எண்ணி எல்லோரும் நம் மக்களே எல்லோரும் நலம் பெறவேண்டும் எனக்கருத்தில் கொண்டு,

நமசிவய சொல்லி வாருங்கள்.

உலகம் செழிக்க வாழ்த்துங்கள், வாழுங்கள்.

கும்பகோணம் மற்றும் அதன் அருகில் உள்ள திருக்கோயில்

கும்பகோணம் மற்றும் அதன் அருகில் உள்ள திருக்கோயில்
Kumbakonam temples


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


I. From திருக்கொட்டையூர் to திருவைக்காவூர்

1. திருக்கொட்டையூர் - கோடீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது

2. திருவலஞ்சுழி - கபர்தீஸ்வரசுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருக்கொட்டையூரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

3. சுவாமிமலை - சுவாமிநாதசுவாமி திருக்கோயில்
(முருகரின் நான்காவது படை வீடு)
திருவலஞ்சுழியிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. புள்ளபூதங்குடி – வல்வில்ராமன் திருக்கோயில்
(திவ்ய தேசம்)
சுவாமிமலையிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

5. ஆதனூர் - ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்
(திவ்ய தேசம்)
புள்ளபூதங்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

6. இன்னம்பூர் - எழுத்தறிநாதர் திருக்கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
ஆதனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருப்புறம்பயம் - சாட்சிநாத சுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
இன்னம்பூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருவிசயமங்கை - விஜயநாதர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருப்புறம்பயத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

9. திருவைக்காவூர் - வில்வவனேஸ்வரர் சுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
திருவிசயமங்கையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

II. From திருநாகேஸ்வரம் to திருந்துதேவன்குடி

1. ஒப்பிலியப்பன் கோயில்
(திவ்ய தேசம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
ஒப்பிலியப்பன் கோயிலிருந்து அரை கி.மீ தொலைவில்
உள்ளது.

3. தேப்பெருமாநல்லூர் - விஸ்வநாதசுவாமி திருக்கோயில்
திருநாகேஸ்வரத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருபுவனம் - கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோவில்
(சரபேஸ்வரர் கோயில்)
தேப்பெருமாநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருவிசைநல்லூர் - சிவயோகிநாத சுவாமி கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருபுவனத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருந்துதேவன்குடி - கற்கடேஸ்வரர் திருக்கோயில்
(நண்டாங் கோயில்)
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிசைநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

III. From திருவிடைமருதூர் to திருவாவடுதுறை

1. திருவிடைமருதூர் - மகாலிங்கேசுவரர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது

2. தென்குரங்காடுதுறை - ஆபத்சகாயேஸ்வரர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருவிடைமருதூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. திருமங்கலக்குடி - பிராணநாதேஸ்வரர் கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
தென்குரங்காடுதுறையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. சூரியனார் கோயில் - சிவசூரியப் பெருமான் கோயில்
திருமங்கலக்குடியிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

5. கஞ்சனூர் - அக்னீஸ்வரர் கோயில் (சுக்ர ஸ்தலம்)
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
சூரியனார் கோயிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6. திருக்கோடிகாவல் - திருக்கோடீஸ்வரர் கோவில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கஞ்சனூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திருவாவடுதுறை - மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருக்கோடிகாவலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

IV. From தாராசுரம் to ஊத்துக்காடு

1. தாராசுரம் – ஐராவதீஸ்வரர் திருக்கோயில்
கும்பகோணத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

2. பழையாறை வடதளி (முழையூர்) – சோமேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
தாராசுரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

3. பட்டீஸ்வரம் – தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பழையாறையிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

4. திருசத்திமுத்தம் – சிவக்கொழுந்தீசர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
பட்டீஸ்வரம் கோவிலுக்கு ½ கி.மீ தொலைவில் உள்ளது.

5. ஆவூர் (கோவிந்தகுடி) – பசுபதீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்)
திருசத்திமுத்தம் கோயிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

6. ஊத்துக்காடு - காளிங்கநர்த்தனர் திருக்கோயில்
ஆவூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

V. From திருக்கருகாவூர் to திருக்கொள்ளம்புதூர்

1. திருக்கருகாவூர் – முல்லைவனநாதர் திருக்கோயில் -
(முல்லைவனம்)
விடியற்கால வழிபாட்டிற்குரியது.
தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்
கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.

2. திருஅவளிவநல்லூர் – சாட்சிநாதசுவாமி திருக்கோயில்
(பாதிரி வனம்)
காலை வழிபாட்டிற்குரியது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்
திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

3. ஹரித்துவாரமங்கலம் (அரதைப்பெரும்பாழி)
பாதாளேஸ்வரர் திருக்கோயில் (வன்னிவனம்)
உச்சிக்கால வழிபாட்டிற்கு உகந்தது.
தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. ஆலங்குடி – ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
(திருஇரும்பூளை)
பூளைவனம்
மாலை நேரத்து வழிபாட்டிற்கு உகந்தது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது

5. திருக்கொள்ளம்புதூர் – வில்வவனநாதர் திருக்கோயில்
(வில்வவனம்)
அர்த்தஜாம பூஜை வழிபாட்டிற்குரியது.
தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்.
ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

VI. From சிவபுரம் to நாதன் கோயில்

1. சிவபுரம் - சிவகுருநாதசுவாமி திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

2. சாக்கோட்டை (கலயநல்லூர்) - அமிர்தகலசநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
சிவபுரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

3. கருவளர்ச்சேரி - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத
அகஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்
(குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோயிலில் வழிபடலாம்)
சாக்கோட்டையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

4. மருதநல்லூர் (கருக்குடி) – சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம்)
கருவளர்ச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.

5. கீழக்கொருக்கை – பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில்
(அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் பரிகார ஸ்தலம்)
மருதநல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

6. நாதன் கோயில் (நந்திபுர விண்ணகரம்) - ஜெகந்நாத பெருமாள்
திருக்கோயில்
(திவ்ய தேசம்)
கீழக்கொருக்கையிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

VII. From திருநல்லூர் to திருவையாறு

1. திருநல்லூர் - பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் -
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது

2. பாலைத்துறை - பாலைவனநாதர் திருக்கோயில்
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருநல்லூரிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.

3. பாபநாசம் - ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் -
108 சிவலிங்க கோயில்
பாலைத்துறையிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

4. கபிஸ்தலம் - ஸ்ரீ கஜேந்திர வரதன் திருக்கோயில் -
(திவ்ய தேசம்)
பாபநாசத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

5. திருக்கூடலூர் - ஸ்ரீ ஜெகத்ரட்சக பெருமாள் திருக்கோயில் –
(திவ்ய தேசம்)
கபிஸ்தலத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.

6. வடகுரங்காடுதுறை - தயாநிதீஸ்வரர் திருக்கோயில் -
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருக்கூடலூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.

7. திங்களூர் - கைலாசநாதஸ்வாமி திருக்கோயில் –
(சந்திரன் ஸ்தலம்)
வடகுரங்காடுதுறையிலிருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது.

8. திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் –
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திங்களூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.

9. திருவையாறு - ஐயராப்பன் திருக்கோயில் –
(தேவாரப் பாடல் பெற்ற தலம்)
திருப்பழனத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

* * * * *

VIII. From அழகாபுத்தூர் to குடவாசல்

1. அழகாபுத்தூர் - ஸ்வர்ணபுரீஸ்வரர் (படிக்காசுநாதர்) திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் நாச்சியார் கோயில்
போகும் வழியில் இருக்கிறது. திருநறையூர் என்ற ஊரின் முன்னால்
அழகாபுத்தூர் உள்ளது

2. திருநறையூர் - சித்த நாதேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
அழகாபுத்தூரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருநறையூர்
பேருந்து நிறுத்தத்தில் இருந்து மிக அருகில் கோயில் உள்ளது.

3. நாச்சியார்கோவில் - திருநறையூர் நம்பி திருக்கோயில்
(திவ்யதேசம்)
சித்த நாதேஸ்வரர் கோயிலில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.

4. ஆண்டான் கோயில் – ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
நாச்சியார்கோயிலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது.

5. திருச்சேறை – சாரநாதப்பெருமாள் திருக்கோயில்
(திவ்யதேசம்)
ஆண்டான் கோயிலில் இருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ளது.

6. திருச்சேறை – சாரபரமேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
சாரநாதப்பெருமாள் கோயிலில் இருந்து 1/2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

7. நாலூர் – பலாசவனேஸ்வரர் திருக்கோயில்
சாரபரமேஸ்வரர் கோயிலில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

8. திருநாலூர் மயானம் - ஞானபரமேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
நாலூரிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

9. குடவாசல் - கோணேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருநாலூர் மயானத்திலிருந்து 2 கி.மீ. தூரத்தில் உள்ளது.

* * * * *

IX. From திருநீலக்குடி to திருப்பாம்பரம்

1. திருநீலக்குடி - நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கும்பகோணத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது.

2. திருவைகல் மாடக்கோவில் - வைகல்நாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருநீலக்குடியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது.

3. கோனேரிராஜபுரம் - உமா மஹேஸ்வரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவைகல் மாடக்கோயிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

4. திருவீழிமிழலை - வீழிநாத சுவாமி திருக்கோயில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
கோனேரிராஜபுரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

5. திருப்பாம்பரம் - பாம்பு புரேஸ்வரர் கோவில்
(தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருவீழிமிழலையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம்.

முருகனின் முக்கிய தலங்களை இணைத்தால் வருகிறது ஓம் வடிவம். ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்.


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


தமிழ் கடவுளான முருகனின் 17 முக்கிய திருத்தலங்களை இன்று நாம் கூகிள் மேப் வழியாக ஒன்றிணைத்து ஏரியல் வியூவில் பார்த்தல் அது ஓம் வடிவில் தெரிகிறது. அனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஒரு அதி நவீன தொழில் நுட்பமும் இல்லாமல், காட்டிடக்கலையில் இப்படி ஒரு அறிவியல் புரட்சியை ஆதி தமிழன் எப்படி நிகழ்த்தி காட்டினான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. கர்நாடகாவில் தொடங்கி கேரளாவில் முடியும் இந்த ஓம் வடிவ திருத்தலங்களில் 14 திருத்தலங்கள் தமிழகத்திலும், 2 கர்நாடகாவிலும், 1 கேரளாவிலும் அமைந்துள்ளது. அந்த திருத்தலங்களின் பெயர்கள் இதோ.

1. திருப்பரங்குன்றம்
2. திருச்செந்தூர்
3. பழநி
4. சுவாமிமலை
5. திருத்தணி
6. சோலைமலை (பழமுதிர்ச்சோலை)
7. மருதமலை
8. வடபழனி (சென்னை)
9. வைத்தீஸ்வரன்கோவில்    முத்துக்குமாரசுவாமி
10. நாகப்பட்டினம் சிக்கல்
11. திருச்சி வயலூர்
12. ஈரோடு சென்னிமலை
13. கோபி பச்சமலை
14. கரூர் வெண்ணைமலை
15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா
16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா
17. கேரளா ஹரிப்பாடு ஸ்ரீ சுப்பிரமணிய  சுவாமி

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது.



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

பெருமாள்  கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து

 சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு.

ஒரு குழந்தையை  தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர்.

நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார்.

உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர்.

ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும்.

இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும்.

மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது.

சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை.

ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார்
 தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே  தம்மைச் சேர வந்த அந்த
சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார்.

பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு.

அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது.

சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும்.

சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது.

ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.

எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது.

சடாரி வைக்கும் பொழுது பணிந்து  புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி   குனிந்து  பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்.

பருவத மலையின் சிறப்பம்சம்

பருவத மலையின் சிறப்பம்சம்



      தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்
சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.

இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

சிறப்புகள்:

பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின் குறிப்பு:

மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

போக்குவரத்து வசதி:

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது.அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம்