அமாவாசை வழிபாடு !!!

அமாவாசை வழிபாடு !!!



வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் `பிதுர் காரகன்' என்கிறோம். சந்திரனை `மாதுர் காரகன்' என்கிறோம். எனவே சூரியனும், சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபாடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பனவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர், சந்திரன் எமது மனதுக்கு திருப்தியானவர்.

இதனால் மகிழ்ச்சி தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பனவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரண தினங்களில் வழிபாடு செய்வர். அமாவாசை தினத்தில் அதிகாலை எழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதுர் தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. பிதுர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதுர்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

ஏழைகளுக்கு தானம்.....
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

அந்த ஆடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.

காகத்திற்கு உணவிடுங்கள்......
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

காகம் நாம் வைத்த உணவைத் தீண்டாவிட்டால் இறந்து போன நம் முன்னோருக்கு ஏதோ குறை இருப்பதாக கருதுவதும் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்த பாறையில் தான் பிண்டம் வைத்து வணங்குவர். தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

புண்ணிய நதியில் நீராடல்......
முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களைச் சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும். சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் இவர் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

முன்னோரின் ஆசி.......!!!
திருதயுகம், திரோதாயுங்களில் வருஷ திதி நாளில் முன்னோர்கள் நேரில் வந்து நாம் கொடுக்கும் உணவையும், வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். யுகங்களில் பூவுலகில் தர்மம் தழைத்திருந்ததால் இந் நிலை இருந்தது. ராமன் அயோத்தி திரும்பி பட்டம் கட்டிய நாளில் தசரதர் நேரில் தோன்றி தன் பிள்ளையை ஆசியளித்து மகிழ்ந்ததாக ராமாயணம் கூறுகிறது.

துவாபரயுகம் மற்றும் கலியுகத்தில் பிதுர்கள் நம் கண்ணுக்குத் தெரியாமல் போய் விட்டனர். ஆனால் சூட்சும வடிவில் அவர்கள் நம்மை நேரில் பார்ப்பதாகவும், ஆசியளிப்பதாகவும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவரின் வயிற்றில் பிறந்தால் மட்டும் பிள்ளையாகி விட முடியாது. பிள்ளைக்குரிய முழு தகுதியை ஒருவன் பெற வேண்டுமானால், வாழும் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதோடு, இறப்புக்கு பிறகும் பிதுர் கடனை முறையாகச் செய்ய வேண்டும்.

சிரத்தையுடன் அதாவது அக்கறையுடன் செய்வதற்கு சிரார்த்தம் என்று பெயர். இறந்த பின்னும் நம் வாழ்வு தொடர்கிறது என்ற உண்மையை நமக்கு இக் கடமை நினைவூட்டுகிறது. இறந்த முன்னோர்களின் நற்கதிக்காகவும், அவர்களின் பூரண ஆசி வேண்டியும், சந்ததியினர் இக்கடமையைச் செய்கின்றனர். இச்சடங்கினைத் தீர்த்தக் கரையில் செய்வது வழக்கம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்து முடிப்பர்.சிரார்த்தம் கொடுக்கும் போது சொல்லும் மந்திரத்தின் பொருளைத் தெரிந்து கொண்டு சொல்லும் போது தானே நிச்சயம் பலன் கிடைக்கும். மனிதவாழ்வு இறப்புக்கு பின்னும் தொடர்கிறது என்ற உண்மையை உணர்ந்து செய்யும் போது இச்சடங்கு பொருளுடையதாகும். முன்னோரை வழிபடும் அமாவாசை முக்கியமானது.

தர்ப்பணம் சில சந்தேகங்கள் - பதில்கள் !!!

தர்ப்பணம்   சில சந்தேகங்கள் - பதில்கள் !!!


1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ?

 2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ?

 3.முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ?

 4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?

தர்ப்பணம்

ஒரு அன்பரின் கேள்விகள் இது .....
நம்முடைய சமய நூலில் குறிப்பாக கருட புராணம் என்னும் நூலில் இதை பற்றி தெளிவாக சொல்லபட்டு இருக்கிறது.

விண்ணில் உள்ள சூரியன் பூமியில் உள்ள குளத்து நீரில் தெரியும் ,
இதை போல 3 குவளையில் நீர் ஊற்றி வெளியில் வைத்தால் எல்லா
குவளையிலும் சூரிய ஒளி தென்படும் , இது போல ஒரு ஆண்மகனின் ஆன்மாவில் உண்டான ஒன்று மேற்பட்ட ஆன்மாகளும் தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .
இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும், அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் தரவேண்டும் ......(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும் )

பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் பெண்கள் திதி தரவேண்டும் ,பிறகு வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .

தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும் , அவர் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும் , தந்தை இறந்த பிறகு இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து
பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

தாய்க்கு தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது ,
தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு ,மறுமுறை தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் ,தனியாக படையல் பூசை போடலாம் என்று நூல்கள்
சொல்கிறது .....

திதி வேறு படையல் பூசை வேறு குழப்ப வேண்டாம் ....

திதிகள் கொடுப்பது நம் வம்சத்தினருக்கு ஆரோக்கியம் ,நல்ல வாழ்க்கை ,மேலும் பல பிரச்சனைகளில் நமக்கு விலக்கு அளித்து விடும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்..

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?

கோயிலில் வாங்கிய விபூதி, குங்குமத்தை சிலர் அங்கேயே விட்டுவிடுவது சரியா?



தவறு. கோயிலில் விபூதி, குங்குமம் தருவதே நம்மைச் சார்ந்தவர்களையும் இறைவனது
பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான். இறைவனின் பிரசாதத்தை
அங்கேயே விட்டுவிடுவது என்பது அவனது அருளை வேண்டாம் என்று மறுப்பதற்கு
சமம்.
குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து கோயிலுக்கு வந்திருக்கிறோம்,

எல்லோரும் விபூதி குங்குமப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக்கொண்டாகிவிட்டது

அல்லது வீட்டில் யாருமில்லை என்றால் கூட, அங்கேயே விட்டுவிட்டு வரக்கூடாது.

ஆலயத்தில் நாம் பெறும் விபூதி, குங்குமப் பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்துவந்து

பத்திரப்படுத்தி தினசரி நெற்றியில் இட்டுக் கொள்வதுதான் நல்லது.

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்

20 பிரதோஷ வழிபாடு

20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்



1. தினசரி பிரதோஷம் :தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும்.இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாகஅன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப்பிரதோஷம் :பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆரா
தனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள"திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார்.தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இதுமுருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்துநீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19.நவக்கிரகப் பிரதோஷம் :ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

மாவிலை – வாஸ்து !!!

மாவிலை – வாஸ்து !!!



* விசேஷ நாட்களில் மட்டுமல்லாது அடிக்கடி
தலைவாயிலில் மாவிலை தோரணம் கட்டுவது வாஸ்து குறைபாடுகள் விரைவில் தீர வழிபிறக்கும்.

* லக்ஷ்மி கடாக்ஷம்
* எதிர்மறை அதிர்வுகளை நீக்கும்
* நச்சுக் காற்றை சுத்தப்படுத்தும்.
* தலைவாயிலில் இருக்கும் வாக்தேவதையின் காதில் எதிர்மறை வார்த்தைகள் விழாது தடுக்கும்.
* மாவிலை காய்ந்தாலும் அதன் சக்தி
குறையாது.
* பிளாஸ்டிக் மாவிலைகளை தொங்கவிடுதல்
கூடாது.

அங்கதுடிப்புகளும் பலன்களும்!!!

அங்கதுடிப்புகளும் பலன்களும்!!!



அங்கத் துடிப்புக்கள் உடம்பில் எப்போதும் நிகழ்வதில்லை: எப்போழுதாவது ஒவ்வொரு முறைதான் ஒவ்வொர் உறுப்பில் நிகழும்.அவ்வாறு நிகழும் துடிப்புக்களை கொண்டு அவரவரும் தத்தம் குணநலன்களையும்.வாழ்க்கையின் நேரும்

நிகழ்ச்சிகளையும்,அதிர்ஷ்டங்களையும் அறிந்து கொள்ளலாம் ஒருவருடைய தலையில் உச்சிப்பகுதி துடித்தால் அது நல்ல் பலனைக் குறிப்பதாகும்,நீங்காமல் இருந்து வந்த துன்பமெல்லாம் நீங்கும் இன்பம் பிறக்கும்

1.)உச்சந்தலையின் வலது பாகத்தில் துடிப்பு உண்டானால், யாதேனும் ஒரு காரணத்தால் அச்சம் உண்டாகும்,உச்சந்தலையில் துடித்தால்-துன்பம் நீங்கும்
,2)-உச்சந்தலை இடதுபாகம்-பெருமை உண்டு,
3)-தலை-பெருமை,புகழ்,செல்வம்
4)-நெற்றியின் இடதுபாகம்-நிறைந்தசெல்வ
5)-நெற்றியின் வலது பாகம்-நோய்நீங்கும்
(6)-வலது புருவம்-பெருமை
7)-இரண்டு புருவங்களும் பெருமை
(8)-கண்ணின் பின்பாகம்-பெரும்புகழ்,செல்வம்
(9)-இடது கண்ணின் இமை-செல்வம் சுகவாழ்க்கை
(10)-இடது கண்-மிகுந்த பெருஞ்செல்வம்..
{11}-கழுத்து-துன்பங்கள் அறவே நீங்கும்
(12)-பிடரியின் இடதுபுறம்-சிறப்பு
13)-இடது புயப்புறம்-நல்ல மனைவி
14)வலது புயப்புறம்-வழக்கில் வெற்றி
15)-வலது கண்டக்கை-உடைச் சிறப்பு
16)இடது கண்டக்கை-தோஷம் நீங்கும்,
17) வலது ழுழங்கை-தவப்பயன்
18)-இடது ழுழங்கை-தனச் சேர்க்கை-
19)-வலது முன்கை- பெருக்கமுள பேறு
20)-இடது உள்ளங்கை-இலாபம்(
21)-வலது கை பெருவிரல்-இலாபம்
22)-வலது கை ஆள்காட்டி விரல்-நன்மைசெல்வம்
23)-வலது கை நடுவிரல்-நல்ல காரியம்
24)-வலது கை மோதிரவிரல்-பெருமை
25)-வலது கை அடிபாகம்-சிறந்த காரியத்தால் செல்வம்
26)-இடது கை பெருவிரல்-நிறைவான வாழ்க்கை
(27)-இடது கை பெருவிரல்-இராஜநோக்கம்
(28)-இடது கை மோதிரவிரல்-நன்மை,தனம்
29)-இடது கை சிறுவிரல்-மரணமில்லை
30)-இடது முலை-சுக வாழ்க்கை
(31)-வலது கைப்பட்டை-புதிய ஆடை
(32)-மூக்கின் வலது பாகம்-நற்பாக்கியம்,செல்வம்
(33)-மூக்கின் இடது பாகம்-செல்வம்
,34)-மேல் உதடு-நல்ல செய்தி
35)-கீழ் உதடு-புதிய தின்பண்டம்
36)-இடது விலாவின் வலது பாகம்-பொருள் சேரும் பயணம்
36)-இடது விலாவின் இருபாகங்கள்_நோய்தீரும் இன்பம் உண்டு துன்பம் நீங்கும் வினை தீரும்
37)-இடை வேள்வி புரிதல் மிகப்பேறு,
38)-வலது விதை-யானை குதிரை ஏற்றம்
39)-இடது விதை-நோய்நீங்கும்
40)-இடது தொடை-நல்ல செய்தி
41)-இரு தொடைகள்-செம்பொன் உண்டாகும்
42)-இடது ழுழந்தாள்-உலகை ஆளுதல்
43)-வலது கணைக்கால்-செல்வம் உண்டாகும்
44)-இடது புறவடி-வழக்கில் வெற்றி
45)-இடது உள்ளங்கால்-தேசப் பயணம்
46)- இரண்டு உள்ளங்கால்கள்-பல்லக்கில் ஏறுதல்
47)-கால்விரல்கள் பத்து-நன்மைகள் திருமகள் சேர்க்கை சிறப்புமிக்க வாழ்க்கை
---------------{பயக்கும் தீமை துடிப்புகள்}--------------------
1)-உச்சந்தலையின் வலது பாகம்-அச்சம்
2)-தலையின் பின்பாகம்-பகை
3)-இடது புருவம்-பெரிய பொல்லாங்குப் பேச்சு
4)-வலது கண் இமை மேல் நோக்கி-வழக்கு வந்தே தீரும் 5)-வலதுகண் இமை நோக்கி-கவலை அழுகை
6)-இடது கண் இமை நோக்கி-துணைவனுக்குத் துன்பம்
(7)-வலது கண் ழுழுவதும்-வருத்தம் நோய்
8)-வலது புயப்புறம்-துன்பம் தரும் செய்தி
(9)-இடது புயம்-உறவினர் இறப்பு
10)-இடது முன்கை-பிறரால் துன்பம்
11)-வலது உள்ளங்கை-இழிவு வரும்
12)-வலது புறங்கை-வழக்கு உண்டாகும்
13)-இடது புறங்கை-துன்பம் வ்ரும்
14)-வலது கை சிறுவிரல்-உற்றார் இறப்பு
15)- இடது கை நடுவிரல்-வழக்கு உண்டாகும்
16)-இடது கை-கவலை,இருந்த பதவியை இழத்தல்
17)-நெஞ்சு-துன்பம் வரும்
18)-வலது முலை-இறப்பு
19)-தொப்புள்-மிகுந்த கவலை
20)-வயிறு-நாள் தோறும் நோய்
21)-வலதுபுற முதுகு-நோய் வந்து நீங்கும்
22)-இடது புறமுதுகு-குடியிருந்த மனையை இழத்தல் நெடுந்தொலைவு செல்லுதல்
23)-முதுகு ழுழுவதும்-வருத்தம் தணியாநோய் 24)-இரண்டு கைப்பட்டைகள்-குற்றமுடையது
25)-வலது விலா-வருத்தம் கவலை
26)-இடது விலா-வீட்டை இழத்தல்
27)-ஆண்குறி-தொலைவில் உள்ளவரால் கவலை
28)-இரண்டு விதைகள்-வழக்கு உண்டாகும்
29)-வலது தொடை-முறையற்ற வகையில் வழக்கு,வெற்றி
30)-வலது ழுழந்தாள்-கோபம்
31)-வலது கண்டைக்கால்-அடிமை
32)-இடது கண்டைக்கால்-பெருநோய்,கவலை
33)-இடது கணைக்கால்-இறப்புச் செய்தி
34)-இரண்டு கணைக்கால்கள்-நடுக்கம் ஓட்டம்
35)-வலது புறவடி-நோய்,
37)-வலது உள்ளங்கால்-நோய்

செல்வம் பெருக சில குறிப்புகள் !!!

செல்வம் பெருக சில குறிப்புகள் !!!





1. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்
.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்

4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித

ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும்.

இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை

காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.

7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு

வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு

அதிகரிக்கும்.

9. வெள்ளளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது

குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.

10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால்

பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.

11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர்

கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

12. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும்

.45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு,

பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.

14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம்

வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.

16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக

பணம் வரும்.

17. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள்

அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.

18. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம்
விலகும்.

19. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.

20. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி

ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.பூர்வ புண்ணியம்

இல்லாதவர்

கூட லட்சாதிபதி ஆகலாம்.

21. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு
ஆகாது.

22. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில்

லஷ்மிகடாட்சம் ஏற்படும்.

23. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி

நித்தமும் வாசம்செய்வாள்.

24. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து
உண்டாகும்.

25. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு
அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.

26. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம்
சேர்ந்துகொண்டே இருக்கும்.

27. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை
பெறலாம்.

28. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபடசெல்வம் பெருகும்.

29. தொடர்ந்து 11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை

மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.

30. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை
அணிவித்திடபணம் குவியும்.

31. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம்
குவியும்.

32. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

33. வௌளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.

34. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம்
ஆகர்ஷணம் ஆகும்.

35. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி
தெளித்திடசெல்வம் சேரும்.

36. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

37. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம்
சேரும்.

38. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.

39. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட

லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.

40. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க

ஐஸ்வர்யம் பெருகும்.

41. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.

42. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம்

கிடைக்கும்.

43. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.

44. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில்
முன்னேற்றம்ஏற்படும்.

45. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.

46. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம்
ஏற்படும்.

47. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.

48. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

49. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண
லாபம்கிட்டும்.

50. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி
வளம்பெருகும்.

51. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

52. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து

மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

53. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து

மடங்குநம்மிடம் வந்து சேரும்.

54. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை

தினமும்அணிந்து வர பணம் வரும்.

55. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ்

கொண்டுஅர்சிக்க தனலாபம் கிட்டும்.

56. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம்

ஆகும்.

57. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி

கடாடசம்நிரந்தரமாகும்.

58. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம்

நீங்கிதனலாபம் பெறலாம்.

59. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.

60. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து
வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

61. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.

62. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து

வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

63. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட

ஐஸ்வர்யங்களும்வசமாகும்.

64. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை

வழிபாட்டால்பணம் கிடைக்கும்.

65. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.

66. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.

67. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.

68. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு

33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

69. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.

70. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

71. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.

72. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம்

செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.

73. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.

74. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

75. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.

76. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி

இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.

77. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.

78. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.

79. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.

80. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

81. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்

மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள்



மரம், செடி, கொடிகள் வைப்பதற்கான வாஸ்து முறைகள் உள்ளன. அவற்றை குறித்து பார்க்கலாம்.

இயற்கையின் அருட்கொடைகள் தான் மரங்கள், செடி, கொடிகள். மனிதன் உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் தேவைப்படும் பிராண வாயுவான அதாவது ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்கள் தான் இவைகள்.

ஒரு புல் கூட கரியமில வாயுவை உட்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை. அப்படி இருக்க ஒரு மரம் எந்த அளவு பலன் கொடுக்கும் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இவை ஒவ்வொன்றுமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. மழையை வருவிக்கும் வருணபகவானாக மரங்களும், செடி, கொடிகளும் உள்ளன.

நம்மால் ஒரு காட்டை உருவாக்க முடியாது. குறைந்தது ஒரு மரம் கண்டிப்பாக வளர்க்க முடியும். அப்படி வளர்ப்பதால் நம் வீட்டிற்குத் தேவையான நிழல், குளுமை கிடைப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் நல்லது.

கொஞ்சம் நேசம், கொஞ்சம் மெனக்கெடல், கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் போதும், எல்லோரும் பசுமையைப் பயிரிடலாம். உடலுக்கும் பயிற்சி. அழகுக்கு அழகு. குழந்தைகளுக்கும் தொலைக்காட்சியிலிருந்து விடுதலை.

 வீட்டில் மரம், செடி, கொடிகளை அமைப்பதற்கும் வாஸ்து முறைகள் உள்ளன.

• ஒரு வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்க வேண்டும்.

• ஒரு வீட்டின் தென்மேற்கு பகுதியில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்ப்பது சிறப்பானது.

• ஒரு வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் மரம், செடி, கொடிகள் அமைக்கக்கூடாது.

சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!

சிவபெருமான் கொடுத்த வரத்தால்தான் வாஸ்து உருவானது!


வாஸ்து என்பதற்கு வசிப்பிடம் என்பது பெயர். வாஸ்தி என்ற லத்தீன் சொல்லில் இருந்து பிறந்ததே வாஸ்து என்னும் பெயர்.  வளமான மங்களகரமான இடத்துக்குப் பெயர்தான் வாஸ்து. இந்த வாஸ்து ஒரு வீட்டில் நிலைகொள்ள, அவரது வரலாற்றை அறிந்து, படித்து, முறைப்படி வழிபட்டபின் புது வீடு கட்டத் தொடங்க வேண்டும். அப்போதுதான் வாழும் காலத்தில் நிம்மதியாக  இருக்க முடியும்.

ஒருமுறை, அந்தகன் என்ற அசுரனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் போர் ஏற்பட்டது. அப்போது சிவபெருமானுடைய  வியர்வையில் இருந்து மிகப்பெரிய சக்தி ஒன்று வெளிபட்டது. அது ஒரு அசுரனாக மாறி, சிவபெருமான் உத்தரவுப்படி  அந்தகனை விழுங்கி விட்டது.

பிறகு சிவனிடம் பல அற்புதமான வரங்களைப் பெற்று உலகையே ஆட்டிப் படைத்தது. அதனைக் கண்டு வருந்திய  சிவபெருமான், வீரபத்திரனை ஏவி அசுரனை அடக்கி விட கிழக்காகத் தலையை வைத்து விழும்படி கீழே சாய்க்கச் எய்தார்.

குப்புற விழுந்த அசுரன் மீண்டும் எழுந்து விடாமல் இருக்க, தேவர்களை அவன் மேல் வசிக்கச் செய்தார். பூமி வடிவான  பூசணிக்காயை உணவாகக் கொடுத்தார். தேவர்களது பாதம் பட்டதால், அசுரன் புனிதத் தன்மை அடைந்தான். மேலும்  மனிதர்களால் பூஜை செய்யப்படும் தகுதியைப் பெற்றான். அது மட்டுமின்றி பூமி தொடர்பான எந்த நிகழ்ச்சி ஆனாலும் வாஸ்து  புருஷனாகிய உன்னை பூஜை செய்த பிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவார்கள் என்று இவருக்கு ஈசனால் வரம்  கொடுக்கப்பட்டு விட்டது.

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!

வீடு கட்டும்போது கடைப்பிடிக்கவேண்டிய வாஸ்து முறைகள்!



தெற்கை விட வடக்கிலும், மேற்கை விட கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு வீடு கட்டினால் செல்வம் பெருகும், வியாபாரம்  விருத்தி அடையும், குழந்தைகளால் புகழ் மேலோங்கும்.

வடக்கு, கிழக்கு, வடகிழக்கு போன்ற திசை மாடியில் நீர்த்தொட்டி அமைப்பது உடல் ஆரோக்கியம் பெருக செய்யும்.

வடக்கு, வடமேற்கு பகுதியிலோ அல்லது வீட்டில் அடுத்து வட கிழக்கிலோ தொழுவம் அமைப்பது நல்லது. வடக்கு, கிழக்கு  பகுதியில் விலைக்கு வரும் பூமியை வாங்கலாம். தெற்கு, மேற்கு பகுதியை தவிர்க்கவும்.

தலைவாசலுக்கு குத்தல் வருவது போல் குளியலறை, கழிப்பறை அமைக்கக்கூடாது.

எப்படிப்பட்ட வீடாக இருந்தாலும் நடைப்பாதையில் கழிவறை அமைக்கக்கூடாது.

வீட்டுத் தாழ்வாரம் வீட்டை விட உயரமாக இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் ஒற்றை தாழ்வாரம் அமைத்து, சுற்றிலும் சுவர் வைத்து, வாயில் விடுவது நல்லதல்ல, இதனால் வம்சவளர்ச்சி  குறைபாடு ஏற்படலாம்.

சமையல் அறைக்கு முன்னால் வடக்கு, அல்லது கிழக்கில் கழிப்பறை, குளியலறை அமைப்பதை தவிர்க்கவும். இது  பெண்களுக்கு உடல்நிலை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

தெருவின் மட்டத்திற்கு தாழ்ந்த மனையில் வசிப்பது செல்வதை குறைத்து நோய் ஏற்படுத்தும்.

மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்

மஹாஅவதார் பாபாஜியின் முத்ரா ரகசியம்



மஹாஅவதார் பாபாஜி பிறந்த நட்சத்திரம் ரோஹிணி. இந்த நட்சத்திரத்தில் மட்டுமே சந்திரன் உச்சமடைகிறார். ரோஹிணிக்கு அடுத்து இருக்கும் நட்சத்திர மண்டலம் மிருகசீரிடம். இந்த நட்சத்திரம் வானில் பார்ப்பதற்கு மான் தலை போல தெரியும். மிருகசீரிடம் நட்சத்திரம் ரோஹிணி, அஸ்தம் மற்றும் திருவோணத்திற்கு வளம் / சம்பத்து தரும் நட்சத்திரம் என்பதை அறிக.

நாம் அனைவரும் பாபாஜியின் கையில் இருக்கும் முத்ராவை பற்றி ரஜினிகாந்த் நடித்த பாபாஜி படம் மூலம் அறியலாம். இந்த முத்திரை அபான முத்ரா என அழைக்கப்படுகிறது. உடலில் இருக்கு மந்தவாயு பிரச்சினைகளை சரிசெய்யும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரையானது மிருகசீரிட நட்சத்திர வடிவான மான் தலை வடிவம் கொண்டது. இந்த முத்ராவை பாபாஜி அடிக்கடி பயன்படுத்தி தமது ஆன்மீக வளத்தை பெருக்கி கொண்டார் என்பதை அறியலாம்.

எனவே இந்த முத்திரையை கீழ்க்கண்ட  நட்சத்திரக்காரர்கள் உபயோகத்து பயன்பெறுங்கள்.

ரோஹிணி, திருவோணம், அஸ்தம், திருவாதிரை, சதயம், சுவாதி, சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம்.

இந்த முத்ரா வடிவம் ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு நோய் போக்கும் வல்லமை கொண்டது.

இந்த முத்திரை கொண்ட மஹாஅவதார் பாபாஜியை நமக்கு அறிமுகம் செய்த ரஜினிகாந்த் அவர்கள் திருவோண நட்சத்திரம் கொண்டவர் என்பது குறிப்பிடதக்கது.

வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள்

உங்க வீட்டுல இந்த ஃபோட்டோ இருந்தா உடனே தூக்கி போடுங்க... இங்கு வீட்டு சுவற்றில் தொங்க விடக்கூடாத 8 போட்டோக்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.




 உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

1 நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல

2 கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள்.

3 உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள். நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும்.

4.உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும்.

5. உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள். நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும். உக்கிரமான விலங்குகள் உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும். தாஜ்மஹால் தாஜ்மஹால் தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்

6 உங்களுக்கு ஓவியங்கள் மற்றும் கலைகளின் மேல் அலாதியான பிரியம் இருக்கலாம். இந்த காரணத்தால், வீடு மற்றும் அலுவலகங்களில் பல வித்தியாசமான ஓவியங்களை வைத்திருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட சில ஓவியங்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி, எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வெற்றிக்கு தடையை ஏற்படுத்துவதோடு, பல பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அப்படி எந்த மாதிரியான ஓவியங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை, எந்த மாதிரியான ஃபோட்டோக்களை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருக்கக்கூடாது என்று கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து, அவற்றை உடனே அகற்றுங்கள். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நடராஜர் நடராஜர் நடன கலைஞர்கள் பலரும் நடராஜர் சிலையை தங்கள் வீடுகளில் வைத்திருக்காவிட்டாலும், அதன் ஓவியத்தை அல்லது ஃபோட்டோவை வைத்திருப்பார்கள். இருப்பினும் சிவனின் இந்த நடன நிலை அழிப்பதற்கானது என்பதால், இவற்றை வைத்திருப்பது நல்லதல்ல. கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது கப்பல் மூழ்குவது போன்ற ஓவியத்தை வீடு அல்லது அலுவலகங்களில் வைத்திருந்தால், அது எதிலும் வெற்றியைக் கிடைக்கச் செய்யாது. ஆகவே இந்த ஓவியத்தை உடனே அகற்றுங்கள். நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி நீர் வீழ்ச்சி போன்ற ஓவியங்கள் கண்களைக் கவரும் படி மிகவும் அழகாக இருக்கத் தான் செய்யும். ஆனால் இம்மாதிரியான ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் வறுமையைக் கொண்டு வரும். உக்கிரமான விலங்குகள் உக்கிரமான விலங்குகள் புலியின் ஓவியம் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கலாம். ஆனால் இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், வீட்டில் சண்டைகளும், வாக்குவாதங்களும் தான் அதிகரிக்கும். தாஜ்மஹால் தாஜ்மஹால் தாஜ்மஹால் காதலின் நினைவுச் சின்னமாக இருக்கலாம். இருப்பினும் இது ஒரு கல்லறை என்பதால், இதன் ஓவியத்தை வீட்டில் வைத்தால், எதிர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். மகாபாரதம் மகாபாரதம் மகாபாரத கதாபாத்திரங்கள் கொண்ட ஓவியத்தை வீட்டில் வைத்திருந்தால், அதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு, வீட்டில் சண்டைகளும் அதிகரிக்கும்.

7.குழந்தை அழுவது போன்ற ஓவியம் குழந்தைகள் அழுவது போன்ற ஓவியங்கள் பார்ப்பதற்கு மார்டன் ஆர்ட் போன்று காணப்படலாம். ஆனால் இந்த ஓவியங்களை வீட்டில் வைத்திருந்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் கொண்டு வரும்.

8.போர் அல்லது மாயாஜாலம் வாஸ்து சாஸ்திரத்தின் படி, போர், பில்லி சூனியம் அல்லது பேய் போன்ற ஓவியங்கள், வீட்டில் உள்ளோரின் மனதை பாதிப்பதோடு, வீட்டில் வாக்குவாதத்தை அதிகரிக்கும.



ஹோமங்கள் - பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.

ஹோமங்கள் -  பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.


அர்பணிப்பு உணர்வுடன் மிக சிரத்தையுடன் நீங்கள் மேற்க்கொள்ளும் ஹோமத்திற்க்கு அளவில்லா பெரும் பலன் கிட்டுவது நிச்சயம்.

நம் வேதங்களில் அக்னிபகவான் வழிபாடு மிக சிறந்த முறையில் நடந்து வந்ததை தெரிவிக்கின்றன. அக்னிக்கு அர்பணிக்கப்படும் அனைத்தும் சூரியபகவான் உதவியுடன் இறைவனை மற்றும் எவர் குறித்து ஹோமம் நடத்தப்படுகிறதோ அவரை சென்றடைகிறது. அதே போல் சூரியபகவான் மூலமாகவே அதற்குறிய பலனும் நம்மை அடைகிறது.

நம் தேவைக்கு ஏற்றவாறும், பிரச்சினைக்கு உறிய முறையில் தீர்வு காணவும் ஹோமங்கள் மிக அவசியம்.

அக்னிக்கு அர்பணிக்கும் பொருட்கள் சாம்பல் ஆவது மட்டுமே நம் கண்களுக்கு தெரியும். மாறாக அதன் பலன் இறைவனை அடைவது சூட்சம ரகசியம். அது உறிய முறையில் காலத்தே நம்மை வந்து அடையும்.

மகா கணபதி ஹோமம் ……………….தடையின்றி செயல்கள் நடைபெவும், லெட்சுமிகடாச்சம் பெறவும்.

சந்தான கணபதி ஹோமம் …………………நீண்ட நாட்களாக குழந்தையில்லா தம்பதியர் அமர்ந்து செய்திட புத்திர பாக்கியம் கிட்டும்.

வித்யா கணபதி ஹோமம் …………………..கல்விக்காக

மோகன கணபதி ஹோமம் …………….. திருமணத்திற்காக

ஸ்வர்ண கணபதி ஹோமம் ………….வியாபார லாபத்திற்காக

நவகிரக ஹோமம் …….நவகிரகங்களினால் நன்மை ஏற்பட

லெட்சுமி குபேர மகாலட்சுமி ஹோமம். ………. ஏழையும் செல்வந்தனாவான்

துர்க்கா ஹோமம் ………….எதிரிகளின் தொல்லை அகல,

சுதர்சன ஹோமம் …………………….கடன் தொல்லை நீங்க,பில்லி சூன்யம் ஏவந்கள் அகல

ஆயுஷ் ஹோமம் ………ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

மிருத்துந்தய ஹோமம்-ஆயுள்விருத்தி மற்றும் நோய் நிவாரணம்.

தன்வந்திரி ஹோமம்—–நோய் நிவாரணம்

ஸ்வயம்வரா ஹோமம்-திருமணதடை அகல,விரைவில் கைகூட

சந்தான கோபால கிருஷ்ணஹோமம்..-குழைந்தை பேறு கிடைக்க

மேதா தட்ஷிணாமூர்த்தி ஹோமம்—மேற்கல்வி.தெளிந்த சிந்தனை,

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!

ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் தீர்த்தமாடுவதின் பலன் !!!


பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

ஓம் என்றால் என்ன?

ஓம் என்றால் என்ன?



    ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது.இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும்.

    மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும் பெயர்கள் எல்லாம் வேதத்திலிருந்து எடுத்தே இடப்பட்டன.அதாவது அந்த பெயர்கள் அவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதன் தன்மையை வெளிப்படுத்துமாறு சூடப்பட்டன.ஆனால் மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் சில சமயம் அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுண்டு.உதாரணமாக, வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாமல் கோழையாக இருப்பான்.  அதே போல் இலட்சுமி என்ற பெயர் கொண்டவள் பிச்சைக்காரியாக இருப்பாள்.சரஸ்வதி என்ற பெயர் வைத்துக் கொண்டு படிப்பறிவில்லாதவளாக இருப்பாள்.  ஆனால் இறைவனின் ஓம் என்ற நாமமும் அதன் முடிவற்ற பொருளும் அந்த ஒப்பற்ற ஓர் இறைவனுக்கே முழுமுதலாய் பொருந்தியிருக்கிறது.

    மனிதன் பிறக்கும் போது நாமம் இன்றி பிறக்கிறான்.பிறந்த சில நாட்கள் கழித்து அவனுக்கு, பெயர் சூட்டும் விழா எடுத்து பெயர் இடப்படுகிறான்.பின்பு அவன் பெற்றோர், உறவினர் மற்றும் இந்த சமூகத்தார் அவனை அந்த பெயரால் அழைக்கின்றனர். மேலும் அவன் பெற்றோர் இட்ட பெயரைத் தவிர உறவுமுறை பெயர்களாலும் அவன் அழைக்கப்படுகிறான்.எடுத்துக்காட்டாக, அவனுக்கு திருமணம் ஆகியதும் கணவன் என்ற நாமமும், குழந்தை பிறந்தவுடன் அப்பா என்ற நாமமும், தன்னுடைய தாய் தந்தைக்கு மகன் என்ற நாமமும், தந்தையின் தந்தைக்கு பேரன் என்ற நாமமும், இவனுடைய மகனின்/மகளின்குழந்தைக்கு தாத்தா என்ற நாமமும் உறவுமுறைகளால் ஏற்படுகின்றன.இது தவிர, சில குணங்களையோ, குற்றங்களையோ குறிக்க சில பட்டப் பெயர்களும் அவனுக்கு சமுதாயத்தால் வாய்க்கின்றன.உதாரணத்திற்கு இராமனையும், ஹனுமானையும், கிருஷ்ணனையும் நாம் பல பெயர்களால் அழைக்கிறோம்.காரணம் அவர்களின் பலம், வீரம், தீரம், சூர பராக்கிரம செயல்களைப் பாராட்டி.  அதே போல் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி, ஆப: என்று பல பெயர்களால் அழைக்கிறோம்.  மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல.  மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே  வெளி வந்தன.  ஓம் இறைவனின் மிக முக்கியமான,தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!

   ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது.வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க "ஓம்" என்ற பிரணவ நாமத்தை உச்சரிக்க சொல்லியிருக்கிறது.வால்மீகி மூல  இராமாயணத்தில் இராமன்பிரான்காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்க நாமோ வெறும் இராம நாமம் சொல்வது இராமபிரான்செய்ததற்கு எதிராக செய்வதாகும்.

   முன்பு எல்லா ரிஷி,முனிகளும் ஓம், அத என்று சொல்லிதான் நூல்களை ஆரம்பித்தனர். பௌராணிகர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தை அழைக்கும் போதும் "ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ" என்று தான் ஆரம்பிக்கின்றனர். மேலும் தந்த்ர நூல்களும் "ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்" என்றே தொடங்குகின்றன.மேலும் பௌராணிகர்கள் ஓங்கார யந்திரம் கூட செய்கிறார்கள். ஆனால் நாமோ இன்று “ஹரி ஓம்” என்றுசொல்லிஇறைவனின் முக்கிய முதல் நாமத்தை பின்னுக்குத் தள்ளி ‘ஹரி’ என்று முதலில் சொல்கிறோம்.  இனிமேலாவது நாம் “ஓம் ஹரி”அல்லது “ஓம்” என்று உச்சரிக்கத் தொடங்குவோமாக.  இனி ஓங்காரத்தைப் பற்றி மற்ற நூல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.

    அதர்வம் 14-3-6: ''ஓங்காரம் இசைக்கவும், உபாசிக்கவும், பற்றக்கூடியதும், இலயிக்கக் கூடியதும் என கூறுகிறது." பக்தி செய்ய எல்லாவற்றையும் விட அழகிய சாதனம் ஓங்காரமாகும்.

    கோபத பிராஹ்மணத்தில் கூறப்படுகிறது - "ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:" அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும் என்று. மேலும் "அம்ருதம் வை ப்ரணவ:" என்கிறது கோபதம்.  அதாவது ஓம் அது அம்ருதம் - அமுதமாகும் என்று.

    சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார்:- ஓங்கா£ரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது என்று புகழ்கிறார்.

     யோக தர்சனத்தில் "தஸ்ய வாசக ப்ரணவ:" என்று கூறப்பட்டுள்ளது.  அதாவது அவனுடைய நாமம் பிரணவம் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

  முண்டகோபனிஷத் கூறுகிறது:- ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தாலேயே நடக்கிறது என்று.

    கடோபனிஷத்:- எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ,அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.

    தைத்திரிய உபநிஷத்:-"ஓம் இதி ப்ரஹ்ம", "ஓம் இதி இதம் ஸர்வம்" அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்றஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம் என்று சிறப்பிக்கிறது.

    அக்னி புராணம்:- ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன் என்கிறது.

சுபாவமான ஒலி (தன் இயல்பான ஒலி):-

    பிறந்த குழந்தை தன் மழலை மொழியில் அ, உ, ம, ஓம், ஓம் என்கிறது.அழுவதும் கூட அப்படியே தான்.அந்த குழந்தை எழுப்பும் ஓசையை சற்று உற்று கவனித்தால் விளங்கும்.
 வயதான பல்லிழந்தவர் கூட "ஓமை" நன்றாக சொல்ல முடியும்.  பிறந்த குழந்தை பருவம் முதல் ஒன்றிரண்டு வயது வரை இராமன், கிருஷ்ணன் என்று சொல்ல வராது.ஆனால் ஓம் என்று சொல்ல நன்றாக வரும்.அதே போல் பல் விழுந்த முதியவருக்கும் ஓம் என்று நன்றாக சொல்ல வரும்.இராம் என்று சொல்ல சொன்னால் லாம் என்று வார்த்தை குழறி வரும்.காரணம் ஓம் ஓர் இயல்பான இயற்கையான ஒலி.

ஒரு விவாதம்:-

    ஒரு சமயம் ஓர் ஆர்யசமாஜ பண்டிதருக்கும் ஓரு மௌல்விக்கும் விவாதம் நடந்தது.அதாவது இறைவனின் முக்கிய நாமம் எது என்பதில்.பண்டிதர் சொன்னார், ஓம் என்பதே இறைவனின் முக்கிய நாமம் என்று.  ஆனால் மௌல்வியோ அல்லாஹ் தான் இறைவனின் முக்கிய நாமம் என்று வாதாடினார்.(இங்கு நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், ஈஸ்வரன் பெயர் அல்லாஹ் அல்ல, ‘ஈஸ்வர் அல்லா தேரே நாம்’ என்று கூறுவது பிழையானது).  மேலும் அதை நிரூபிக்க முடியுமா? என்று கேட்டார்.பண்டிதர் அவர்கள் உடனே இரண்டு காட்டமான சோடாவை வாங்கி வரச் செய்து, முதல் சோடாவை மௌல்வியிடம் குடிக்க கொடுத்தார்.  மௌல்வி குடித்து முடித்ததும் “ஓவ்” என்று ஏப்பம் விட்டார்.ஏன் “ஓவ்” என்று ஏப்பம் விட்டீர்கள்?அல்லாஹ் என்று உச்சரிக்க வேண்டியது தானே என்று பண்டிதர் வினவினார்.உடனே மௌல்வி அல்லாஹ் என்று கூட சொல்வேனே என்று பதிலுரைத்தார்.  பண்டிதர் மீண்டும் இரண்டாவது பாட்டில் சோடாவை உடைத்து மௌல்வியிடம் குடிக்க கொடுத்தார்.  குடித்ததும் மௌல்விக்கு மிக வேகமாக ஏப்பம் வந்தது.அவரால் அல்லாஹ் என்று சொல்ல முடியவில்லை. மேலும் பண்டிதர், அல்லாஹ் என்று உம்மால் சொல்ல இயலவில்லை, ஓங்காரத்தின் மாற்றமான ஒலியே தங்களுக்கு ஏப்பமாக வெளிப்பட்டது என்று விளக்க மௌல்வி ஒத்துக் கொண்டார்.ஆமாம் பண்டிதரே, அல்லாஹ் என்று சொல்ல வரவில்லை என்று.அப்பொழுது பண்டிதர் சொன்னார் - அல்லாஹ் இயல்பான ஒலி அல்ல.ஓம் மட்டுமே இயல்பான ஒலி, எளிமையான இனிமையான ஒலி, நாம் அறிந்தும் நம்மை அறியாமலும் வரக்கூடிய ஒலி.

சிறியதினினும் சிறியது, பெரியதினும் பெரியது:-

    இறைவன் நுண்மையினும் நுண்மையானவன்.சிறியதினும் சிறியதாய் பெரியதினும் பெரியதாய் உள்ளவன்.அவனின் நாமமான ஓம்என்றஒலி அளவில் மூன்றுமாத்திரை தான்.மற்ற நாமங்களோ மாத்திரை அளவில் பெரியது.  ஆயினும் ஓங்காரத்தின் அர்த்த விளக்கமோ விளக்க முடியாதது, முடிவற்றது, பெரியதினும் பெரியது.அந்த மூன்றுமாத்திரை என்பதின் மகத்துவம் அளவற்றது.பின்வருவன மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று மாத்திரைகளின் தத்துவங்களாக விளக்கப்படுகின்றன.

1. ஈஸ்வரன், ஜீவன், இயற்கை
2. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன்
3. பூ:,புவ:, ஸ்வ:
4. சத்வம், ரஜம், தமம்
5. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்
6. மாதா, பிதா, குழந்தை
7. எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான்
8. நிமித்த காரணம், உபாதான காரணம், சாதாரண காரணம்
9. ஆண், பெண், அலி
10. சூரிய கலை, சந்திர கலை,சுழுமுனை
11. சூரியன், சந்திரன், நக்ஷத்திரம்என இவ்வாறாக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஓம் விளக்கம்:-

    அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது.இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து.மேலும் ‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும்.இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும்.முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது.அதனால் நாம் நிலைப் பெற்றோம்.

இலக்கண விளக்கம்:-

    ஓம் என்ற சொல் ஆண் பாலும் அல்ல, பெண் பாலும் அல்ல, அலியும் அல்ல. ஒருமை ஒலியே. இதற்கு இருமையோ பன்மையோ கிடையாது.வேற்றுமை உருபுகளும் அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ளஉருபுகளும் இதற்கு கிடையாது.இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.    மேலும் ஓம் 'அவ்' என்ற தாதுவில் - வேர்ச்சொல்லிலிருந்து உண்டாகிறது.  'அவ்' என்றால் இந்த உலகம் மற்றும் உயிர்களின் இரட்சகன் - பாதுகாவலன் என்று பொருள். மேலும் இது "அவ்யயம்" ஆகும். அதாவது மாறுதலற்றது, சாசுவதமானது. இலக்கணத்தில் எண், பால், இடத்தால் மாறுபாடு அடையாத சொல்.(வினை உரிச்சொல், இடைச்சொல், விளிச்சொல் முதலியன).எனவே இறைவன் ஒருவனே என்பது இதன் மூலம் சித்தமாகிறது.


மற்ற மதங்களில் ஓம்:-

    கிறிஸ்துவ மதத்தில் ஓம் என்ற சொல் ஆமென் என்ற ஒலியின் மூலம் உச்சரிக்கப்படுகிறது,  இஸ்லாம் மதத்தில் ஓம் என்ற சொல் ஆமீன் என்ற சொல்லால் உச்சரிக்கப்படுகிறது. புத்த மதத்தில் ஓம் மணி பத்மோஹம் என்று உச்சரிக்கப்படுகிறது.ஜைன மதத்தில் ஓம் நமோ அரிஹந்தாணம் என்று உச்சரிக்கப்படுகிறது.கிரேக்க மொழியில் முதல் எழுத்து ‘அ’என்பதை ஓமேன் என்று உச்சரிக்கப்படுகிறது.  பார்ஸி மத நூலான ஜென்தாவஸ்தாவில் ஓங்காரத்தின் பொருள் ஈஸ்வரன் ஆகும். ஆங்கிலத்தில் ஓம் என்பதை OMNI PRESENT, OMNI POTENT, OMNISCIENTஎன்று சொல்கிறார்கள்.ஓம் என்ற ஓசையோ அதன் பொருளோ இல்லாமல் எந்த மதமும் எந்த மொழியும் இல்லை.

யார் நாமத்தை ஜெபிக்க வேண்டும்?

    ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கப்படுகிறது:- மனிதன் மரணிக்கும் தருவாயில் யாரை ஜெபம் செய்ய வேண்டும்? என்று.  ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார்:- ஓங்காரத்தை ஜெபம் செய்ய வேண்டும் என்று. அவர் தன்னுடைய நாமத்தை ஜெபிக்கும்படி கூறவில்லை.  மேலும் ஹரி ஓம், ராம், ராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீகிருஷ்ண, ஹரே ராம ஹரே கிருஷ்ணா, இராதேசியாம்,சீதாராம், விட்டல விட்டல, கோவிந்தா, கோவிந்தா, சிவா, சிவா, முருகா, முருகா, நாராயணா, நாராயணா, அரோகரா, அரோகரா,என்று நாம ஜெபம் சொல்லுமாறு வேதத்தில் எங்கும் உபதேசிக்கப்படவில்லை. சிலர் “ஓம்” என்று முதலில் சொல்லாமல் மற்ற நாமங்களை முதலில் உச்சரித்து விட்டு பிறகு “ஓம்” என்று சொல்கிறார்கள்.  உதாரணமாக “ஹரி ஓம்” என்பது.  இது சரியல்ல.ஏனெனில் வேதங்களில் முதலில் “ஓம்” என்றே உச்சரிக்கப்படுகிறது.பிறகே இறைவனின் குணங்களை குறிக்கும் மற்ற நாமங்கள் வருகின்றன.

    சீக்கிய மதநூலான குரு கிரந்தஸாஹிப்பில் இறைவனின் 37 நாமங்கள் 15025 முறை வருகின்றன.அவற்றில் 230 முறை ஓம் என்ற பிரணவ மந்திரம் வருகிறது.குரு நானக்கர் சொல்கிறார் - ஓங்காரத்தின் சப்தத்தை ஜெபம் செய்யுங்கள், ஓங்காரம் உன்னுடைய குருமுகமாகும்,ஓங்காரத்தில் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று.

பெண்கள் ஓம் உச்சரிக்கலாமா?

     சிலர் இப்பொழுது ஓம் மந்திரத்தை பெண்கள் சொல்லலாமா என்று கேட்கின்றனர்.கடவுளின் நாமம் ஓம்.  ஓம் வேதத்தில் உள்ளது.  வேத மந்திரங்களை கண்டுணர்ந்து உலகுக்கு உபதேசித்த ரிஷி பெண்மணிகள் பலர் உள்ளனர்.  அவர்களின் சில பெயர்கள் வருமாறு:- ரோமஷா, லோபாமுத்ரா, விஷ்வவாரா, அபாலா, கோஷா, அதிதி, இந்த்ராணி, கோதா, சிரத்தா, யமி, சசி முதலானோர்.

காயத்ரீ மந்திரம் பெண்கள் சொல்லலாமா?

  பெண்கள் காயத்ரீ மந்திரமும் சொல்லலாம்.பயம் கொள்ளத் தேவையில்லை.இதனால் ஒரு பாபமும் இல்லை.புண்ணியமே கிடைக்கும்.கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், கௌஸல்யா மாதா அக்னிஹோத்ரம் செய்தார்.  வேத மந்திரம், காயத்ரீ முதலானவை ஓம் என்று உச்சரித்தே செய்தார்.  சீதா பிராட்டியாரும் சந்த்யா வந்தனம் செய்தார்.இது திரேதா யுகத்தின் விஷயம்.அப்பொழுது பௌராணிகரின் சந்த்யா வந்தனம் இல்லை.ஒரே வைதிக சந்த்யா வந்தனம் மட்டுமே இருந்தது.  ஆனால் இன்றோ சில சுயநலம் மற்றும் கபட நெஞ்சமுடைய பண்டிதர்கள் - வித்வான்கள், தங்களுடைய அறியாமையினால் இந்த விதமான பயங்களை உற்பத்தி செய்து விட்டனர்.அதாவது பெண்கள் வேத மந்திரம், காயத்ரீ, ஓம் போன்றவற்றை சொன்னால் அவர்களுக்கு எல்லாவிதமான கெடுதல் உண்டாகும் என்று.எவ்வளவு சிறுபிள்ளைத் தனமானது.கடவுள் ஆண்களுக்கு மட்டும் உரியவரா என்ன?  பெண்களுக்கு கிடையாதா?இறைவனோ எல்லோருக்கும் உரியவன்.இறைவனின் ஞானமும் எல்லோருக்கும் உரியது.  வேத சம்பந்தமான அனைத்து கர்மகாண்ட சடங்குகளை பெண்கள் தாராளமாகச் செய்யலாம்.  ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் இறைவன் வாய் முதலிய பஞ்ச ஞானேந்திரியங்களை அளித்துள்ளான் எனில் கடவுளின் முழுமுதல் நாமமான ஓங்காரத்தை உச்சரிப்பதில் ஏன் அவர்களுக்கு நாம் (பௌராணிகர்கள்) வஞ்சனை செய்ய வேண்டும்?பௌராணிகர்கள் தடைச்சுவர் போன்று குறுக்கே நின்று தடைகளை விதித்து பெண் குலத்திடம் ஏன் அற்பமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்?தூய்மையயை காரணம் காட்டி இறைவன் நாமம் சொல்வதை தடை செய்ய வேண்டாமே!  குளிக்காமல் ஓம் சொன்னால் மிகப் பெரிய பாபமா வந்து சேரும்?  வெறும் உடலை நீரால் குளித்து சுத்தம் செய்துவிட்டால் மாத்திரம் போதுமா?மனத்தூய்மை வேண்டாமா?

    வேதத்தில் காலை எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன.உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும், தூங்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. இவை எல்லா மந்திரங்களும் ஓம் சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன், அவன் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எப்பொழுதும் உள்ளவன் ஆனதால் அவனை தியானிப்பதிலும், அவன் நாமத்தை பொருளுடன் அறிந்து உச்சரிப்பதிலும், அவனை எப்பொழுதும் நினைப்பதிலும் என்றும் நன்மையே உண்டாகும்.

ஓம் கொடி பற்றிய சிறு விளக்கம்:-


   ஓம் கொடி வேத காலங்களில் ரிஷி முனிகள், பரமாத்மாவின் இப்பிரம்மாண்ட உலகத்தை கோள வடிவமாகவும் வரைந்து அதன் மத்தியில் கடவுளின் உண்மையான பெயரான ஓம் என்பதை எழுதினர்.அந்த கோள வடிவத்தை சுற்றிலும் பிரகாசம் தருகின்ற சூரிய கதிர்களை வரைந்தனர்.
   மேலும் இந்த கொடியை செந்நிறமான துணியில் வரைந்தனர்.இந்த காவி நிறம் அதிகாலையில் சூரிய உதயத்தின் நிறமாகவும் அக்னியின் ஒரு நிறமாகவும் உள்ளது.ஏனெனில் பரமாத்மாவுக்கு அக்னி என்ற ஒரு பெயரும் உள்ளது.  சூரியனும் ஒரு அக்னி கோளமே.  மேலும் இந்த காவி நிறம் தவத்தின் தியாகத்தின் சின்னமாகும்.  வைதிகப் பண்பாட்டின் ஆதாரம் போகத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.  யோகத்தை அடிப்படையாகக் கொண்டது.  இது கடவுளின் யோகம், தவம், தியாகம் போன்ற குணங்களின் ஆதாரமாக உள்ளது.மனிதன் வாழ்க்கையின் முதல் பகுதியான 25 வயது வரை பிரம்மசரிய ஆஸ்ரமத்தின் (மறை மாணவ பருவம்) மூலம் தவமும், தியாகமும் கடைப்பிடிக்கிறான்.  அடுத்த கட்டமான 25 முதல் 50 வயது வரை இல்லற வாழ்க்கையில், கணவன் மனைவிக்காகவும், மனைவி கணவனுக்காகவும் மேலும் இருவரும் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் தவமும் தியாகமும் செய்கின்றனர்.அடுத்ததாக வானப்ரஸ்தம் மற்றும் சந்நியாசிரமம் (துறவறம்) பற்றி சொல்ல வேண்டியதில்லை.இல்லறத்தில் 25 ஆண்டுகள் லௌகிக சுகம் அனுபவிக்கிறார்கள் என்றாலும் மனிதனின் குறைந்த பட்சமான 100 ஆண்டு ஆயுளில் 75 ஆண்டு வரை தவத்திற்கும் தியாகத்திற்குமாகவே வைதிகப் பண்பாடு அவர்களை ஒழுங்குபடுத்தியுள்ளது.இல்லறத்தார் தனக்குரியவற்றை அனுபவிப்பதும் அளவோடுதான்.இவைகளின் குறியீடாகவே ஓம் கொடி உள்ளது.ஒரு பத்திரிக்கையில் வந்த விஷயம் யாதெனில் ஆப்பிரிக்காவில் ஹஜ் யாத்திரை செல்வோர் தன்னுடன் ஓம் கொடியை எடுத்து செல்வதாக கூறப்பட்டுள்ளது.

    கொடியின் அளவு:-  3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்டதாகவும், நடுவில் கதிர்களுடன் கூடிய வட்டமும், அதன் நடுவில் ஓம் என்ற எழுத்தும் எழுதப்பட வேண்டும்.  இவ்விதமாக ஓம் கொடி தயாரிக்க வேண்டும்.இந்த ஓம் கொடி ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, சம்பிரதாயம் முதலிய அனைத்திற்கும் அப்பாற்பட்டது.மனித நேயத்தின் பெருமையை - தியாகத்தை உணர்த்துகிறது.  எப்படி இறைவனின் நிஜ பெயரான ஓம் ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, சம்பிரதாயம் முதலிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதோ அதுபோல் தான் இந்த ஓம் என்ற கொடியும்.

 ஓம் கொடியின் மீது வழக்கு:-

     இந்த கொடியானது ஒரு குறிப்பிட்ட சம்பிரதாயத்திற்கு உரியது என்று தௌலதா என்பவர் ஒரு வழக்கை பஞ்சாப் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதியானவர் இந்த ஓம் கொடி ஒரு குறிப்பிட்ட  சம்பிரதாயத்திற்கு உரியதன்று என்று தீர்ப்பு கூறினார்.  எனவே திரு தௌலதா என்பவர் சுப்ரீம் கோர்ட் சென்றார்.  அங்கும் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த ஓம் கொடியானது சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்டது என்று தீர்ப்பு வழங்கினர்.

ஓம் சில துளிகள்:-

1. குழந்தை பிறந்தவுடன் குழந்தையின் நாக்கில் தேனால் “ஓம்”என்று ஜாதகர்ம சடங்கில் செய்வதுண்டு.
2. கோபத பிராஹ்மணம்:-"ஆப்ல்ரு வ்யாபௌ", "அவ ரக்ஷணே" என்ற வேர்ச்சொற்களிலிருந்து ஓம் என்ற பொருள் சித்தமாகிறது..ஓங்காரம் எங்கும் நிறைந்த
அனைத்தையும் காக்கும் பரம்பொருள்.
3. மனுஸ்ம்ருதி:- அகாரமும் உகாரமும் மகாரமும் சேர்ந்ததே கணபதியாகிய ஓங்காரம்என அழைக்கிறது.  அதாவது ஓம்சொல்வதாலேயேகடவுளின்தியானம்நடைபெறுகிறது.
4.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், போஸ்டனில் உள்ள டேகானேமருத்துவமனையில் மூளை மற்றும் உடல் சம்பந்தமான மருத்துவத் ஸ்தாபனத்தின் நிறுவனருமான டாக்டர் பேன்ஸன் சொல்கிறார்:-
     "பிரார்த்தனையும் "ஓம்" என்ற சொல்லின் ஓசையும் எயிட்ஸ் மற்றும் இரத்தசோகைபோன்ற நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய சாதனமாக இருக்கிறது"என்று.
 5. சதபதம் பிராஹ்மணம்:-
  கேள்வி: விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் உள்ளவைகள் எங்கிருந்து வந்தன?எல்லாஉயிர்களும் எதனிலிருந்துபரிணமிக்கின்றன-உருவாகின்றன? எதிலிருந்து வாழ்வைப் பெறுகின்றன?
பதில்: அது ஓம்.
    The manifestating word of God is AUM.
6. யஹுதிகளின் அதாவது யூதர்களின் கடவுளின் பெயர் ஜிஹோவா.  அவர் தம்முடைய தூதரான மூஸாவிடம் சொன்னார்:- தன்னுடைய நிஜ பெயர் - "That I am" (ஓம்) என்று.

வேதமோ, “ஓம் க்ரதோ ஸ்மர”, “ஓம் ப்ரதிஷ்ட”, “ஓம் கம் பிரம்ம”- அதாவது “ஓங்காரத்தை நினை; ஓங்காரத்தை ஆத்மாவில் நிலை நிறுத்து; அந்த ஓங்காரமே எங்கும் நிறைந்த பிரம்மம்” என்று ஓங்காரத்தைப் போற்றிப் புகழ்கிறது.

ஓம் சாந்தி:!ஓம் சாந்தி:!!ஓம் சாந்தி:!!!

தானங்களால் ஏற்படும் பலன்கள் !!!

தானங்களால் ஏற்படும் பலன்கள் !!!



மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ளது உணவு அதன்பொருட்டு பிறர்க்கு தானம் செய்தலும் அதன் பலன்களும் தானத்தில் சிறந்தது அன்னதானம். அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப்போகாது. பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை ஆனால் ஒருவன் வேண்டுமென்று கேட்டவாயால் போதுமென்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும்போது மட்டுமே தானம் செய்த குறுகிய நேரத்திலேயே பலனை தெரியப்படுத்துவது அன்னதானம்.

சக மனிதனின் பசியை போக்குபவன் கடவுளின் தயவைப்பூரணமாகப்பெறும் தகுதியை பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின்மீது பாய்ந்து கொள்ளும் தருனத்தில் உணவிட்டு காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெய்யில் வறுத்தாது – வறுமை தீண்டாது – இறையருள் எப்பொழுதும் துணை நின்று மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும் – வள்ளலார்

1. மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்
2. பூமி தானம் – இகபரசுகங்கள்
3. வஸ்த்ர தானம் (துணி) – சகல ரோக நிவர்த்தி
4. கோ தானம் (பசுமாடு) – பித்ருசாப நிவர்த்தி
5. திலதானம் (எள்ளு) – பாப விமோசனம்
6. குல தானம் (வெல்லம்) – குல அபிவிருத்தி – துக்கநிவர்த்தி
7. நெய் தானம் – வீடுபேறு அடையலாம்-தேவதா அனுக்ரஹம்
8. வெள்ளி தானம் – பித்ருகள் ஆசிகிடைக்கும்
9. தேன் தானம் – சுகம்தரும் இனியகுரல்
10. சொர்ண தானம் (தங்கம்) – கோடிபுண்ணியம் உண்டாகும்
11. தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்
12. கம்பளி (போர்வை) தானம் – துர்சொப்ன துர்சகுன பயநிவர்த்தி
13. பழவகைகள் தானம் – புத்ரபவுத்ர அபிவிருத்தி
14. பால் தானம் – சௌபாக்கியம்
15. சந்தனக்கட்டை தானம் – புகழ்
16. அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.

நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?

ஓம் நமோ நாராயணாய
நம் பிரச்சினைகளை தீர்த்துகொள்வது எப்படி..?



தினமும் காலையில் கடவுளிடம் உரையாடுங்கள்..ஒரு தீபம் ஏற்றி வைத்து உங்கள் இஷ்ட தெய்வமோ,குருவோ அவர்களிடம் பேசுங்கள். உங்கள் ஆசைகளை சொல்லுங்கள் நீங்கள் இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை சொல்லி அதற்கு பக்க துணையாக இருக்கும்படி வேண்டுகோள் வையுங்கள். உங்கள் இலக்கு எது என தீர்மானித்து,அதைநோக்கிசெல்லதைரியம்,தன்னம்பிக்கை,முயற்சி,உழைப்பு எப்போதும் குறையாமல் பார்த்துக்கொள்வேன் என உறுதிமொழி எடுங்கள்
அதன் பின் உங்கள் அன்றாட வேலைகளை செய்யுங்கள்..பிரபஞ்ச சக்தி உங்கள் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி தரும்..இது பலரது அனுபவ நம்பிக்கை...முயற்சி செய்யுங்கள் நீங்கள் நினைத்தது நிறைவேறும்..கேட்டது கிடைக்கும்!!!

"ஸ்ரீமன் நாராயணா உன் திருவடிகளே சரணம் "

12 இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை

12 இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை

🌻   27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது.  ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன.  அவை 12  வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :



👆   மேஷம்
✋   ரிஷபம்
✌   மிதுனம்
✊   கடகம்
💪   சிம்மம்
👋   கன்னி
👍   துலாம்
👇   விருச்சிகம்
☝   தனுசு
👌   மகரம்
👏   கும்பம்
👊   மீனம்

🔎ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

👆  மேஷம் :

1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)

🎯  மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்

✋  ரிஷபம் :

1.  கருணை  (Mercy)
2.  இரக்கம் (Compassion)
3.  காரணம் அறிதல் (Consideration)
4.  அக்கறையுடன்  (Mindfulness)
5.  பெருந்தன்மை (Endurance)
6.  பண்புடைமை (Piety)
7.  அஹிம்சை  (Non violence)
8.  துணையாக  (Subsidiarity)
9.  சகிப்புத்தன்மை (Tolerance)

🎯  ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்

✌  மிதுனம் :

1.  ஆர்வம் (Curiosity)
2.  வளைந்து கொடுத்தல்  (Flexibility)
3.  நகைச்சுவை (Humor)
4.  படைப்பிக்கும் கலை  (Inventiveness)
5.  வழிமுறை  (Logic)
6.  எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7.  காரணம்  (Reason)
8.  தந்திரமாக  (Tactfulness)
9.  புரிந்து கொள்ளுதல்  (Understanding)

🎯  மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

✊  கடகம் :

1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3.  அறம் (Charity)
4.  உதவுகின்ற  (Helpfulness)
5.  தயாராக  இருப்பது  (Readiness)
6.  ஞாபகம் வைத்தல்  (Remembrance)
7.  தொண்டு செய்தல்  (Service)
8.  ஞாபகசக்தி  (Tenacity)
9.  மன்னித்தல்  (Forgiveness)

🎯  கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.

💪 சிம்மம் :

1.  வாக்குறுதி  (Commitment)
2.  ஒத்துழைப்பு  (Cooperativeness)
3.  சுதந்திரம்  (Freedom)
4.  ஒருங்கிணைத்தல்  (Integrity)
5.  பொறுப்பு (Responsibility)
6.  ஒற்றுமை  (Unity)
7.  தயாள குணம் (Generosity)
8.  இனிமை  (Kindness)
9.  பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)

🎯  சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.

👋 கன்னி :

1.  சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
2.  அருள் (Charisma)
3.  தனித்திருத்தல்  (Detachment)
4.  சுதந்திரமான நிலை (Independent)
5.  தனிநபர் உரிமை (Individualism)
6.  தூய்மை  (Purity)
7.  உண்மையாக  (Sincerity)
8.  ஸ்திரத்தன்மை  (Stability)
9.  நல்ஒழுக்கம்  (Virtue ethics)

🎯  கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.

👍 துலாம் :

1.  சமநிலை காத்தல் (Balance)
2.  பாரபட்சமின்மை (Candor)
3.  மனஉணர்வு (Conscientiousness)
4.  உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
5.  நியாயம் (Fairness)
6.  நடுநிலையாக  (Impartiality)
7.  நீதி (Justice)
8.  நன்னெறி  (Morality)
9.  நேர்மை  (Honesty)

🎯  துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.

👇  விருச்சிகம் :

1.  கவனமாக இருத்தல்(Attention)
2.  விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3.  எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4.  சீரிய யோசனை (Consideration)
5.  பகுத்தரிதல்  (Discernment)
6.  உள் உணர்வு  (Intuition)
7.  சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
8.  கண்காணிப்பு  (Vigilence)
9.  அறிவுநுட்பம் (Wisdom)

🎯  விருச்சகராசி மண்டலமானது நிணநீர்  மண்டலத்தின் ஆதாரமாகும்.

☝  தனுசு :

1.  லட்சியம்  (Ambition)
2.  திடமான நோக்கம்  (Determination)
3.  உழைப்பை நேசிப்பது  (Diligence)
4.  நம்பிக்கையுடன்  (Faithfulness)
5.  விடாமுயற்சி  (Persistence)
6.  சாத்தியமாகின்ற  (Potential)
7.  நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
8.  உறுதி (Confidence)
9.  ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)

🎯  தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.

👌 மகரம்:

1.  கண்ணியம்  (Diginity)
2.  சாந்த குணம் (Gentleness)
3.  அடக்கம்  (Moderation)
4.  அமைதி (Peacefulness)
5.  சாதுவான  (Meekness)
6.  மீளும் தன்மை  (Resilience)
7.  மௌனம் (Silence)
8.  பொறுமை (Patience)
9.  செழுமை  (Wealth)

🎯  மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👏  கும்பம் :

1.  சுய அதிகாரம் (Autonomy)
2.  திருப்தி (Contentment)
3.  மரியாதை (Honor)
4.  மதிப்புமிக்க  (Respectfulness)
5.  கட்டுப்படுத்துதல்  (Restraint)
6.  பொது கட்டுப்பாடு  (Solidarity)
7.  புலனடக்கம்  (Chasity)
8.  தற்சார்பு  (Self Reliance)
9.  சுயமரியாதை  (Self-Respect)

🎯  கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.

👊 மீனம் :

1.  உருவாக்கும் கலை (Creativity)
2.  சார்ந்திருத்தல்  (Dependability)
3.  முன்னறிவு  (Foresight)
4.  நற்குணம் (Goodness)
5.  சந்தோஷம்  (Happiness)
6.  ஞானம் (Knowledge)
7.  நேர்மறை சிந்தனை  (Optimism)
8.  முன்யோசனை  (Prudence)
9.  விருந்தோம்பல் (Hospitality)

🎯  மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.

"பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்

"பிள்ளையார்" பிடித்து வைப்பதன் பலன்கள்


1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்
2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்
3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும்.
விவசாயம் செழிக்கும்
4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்
5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின்தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்
6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும்.
செல்வம் உயரச் செய்வார்
7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.
8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.
10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.
12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.
13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்
14 கல் விநாயகர்- வெற்றி தருவார்
15 புற்றுமண் விநாயகர்- வியாபாரத்தை பெருக வைப்பார்
16 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்