27 நட்சத்திர பைரவர்

27 நட்சத்திர பைரவர்களையும்,அவர்கள் அருளும் ஆலயங்களின் பட்டியலையும் இங்கே பார்க்கலாம்:

1.அசுபதி/அஸ்வினி=ஞான பைரவர்=பேரூர்
2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்
3.கார்த்திகை=அண்ணாமலை பைரவர்
4.ரோகிணி=பிரம்ம சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்
5.மிருகசீரிடம்=க்ஷேத்ர பாலர்=க்ஷேத்ரபாலபுரம்
6.திருவாதிரை=வடுக பைரவர்=வடுகூர்
7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி
8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சியம்
9.ஆயில்யம்=பாதாள பைரவர்=காளஹஸ்தி
10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்
11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்
12.உத்திரம்=ஜடாமண்டல பைரவர்=சேரன்மகாதேவி
13.அஸ்தம்=யோகாசன பைரவர்=திருப்பத்தூர்
14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி
15.சுவாதி=ஜடாமுனி பைரவர்=பொற்பனைக் கோட்டை
16.விசாகம்=கோட்டை பைரவர்=திருமயம்
17.அனுஷம்=சொர்ண பைரவர்=சிதம்பரம்
18.கேட்டை=கதாயுத பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட்டி,திருவாடுதுறை
19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி
20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒழுகமங்கலம்
21.உத்திராடம்=முத்தலைவேல் வடுகர்=கரூர்
22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர்=வயிரவன் பட்டி
23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர்காழி,ஆறகழூர்(அஷ்டபைரவ பலிபீடம்)
24.சதயம்=சர்ப்ப பைரவர்=சங்கரன்கோவில்
25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக்கராயன்பேட்டை,தஞ்சை
26.உத்திரட்டாதி=வெண்கலஓசை பைரவர்=சேஞ்ஞலூர்
27.ரேவதி=சம்ஹார பைரவர்=தாத்தையங்கார் பேட்டை
குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு தாராளமாகச் செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டு அபிஷேகம் செய்து வழிபாடும் செய்யலாம்.காலத்தை இயக்குபவராக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.நமது அனைத்து வித தோஷங்கள் நீங்கிட!!!இந்த ரகசியத்தினை நமக்கு அருளிய நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்களுக்கு கோடி நன்றிகள்!!!
ஸ்ரீகால பைரவருக்குரிய அபிஷேகப் பொருட்கள்:
அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளி மாலை,பால்,விபூதி,மஞ்சள் பொடி,அரிசிப்பொடி என்ற மாப்பொடி,நல்லெண்ணெய்,வில்வம் இவைகளுடன் நைவேத்தியமாக ஒரு கிலோ வரையிலான டயமண்டு கல்கண்டு,வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட தயிர்ச்சாதம்,வீட்டிலேயே சமைக்கப்பட்ட மிளகுவடை போன்றவைகள்;
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ

காலபைரவர் அஷ்டகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை இயற்றியவர் ஆதிசங்கரர் ஆவார். இந்தகாலபைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்யும் முறையை ஏற்கனவே ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதிவில் காசி காலபைரவர் கயிறு பற்றி பார்ப்போம். இதற்கு தேவையான பொருள் ஒரு கறுப்பு கயிறு(அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமே. காலபைரவர் கயிறு தயாரிக்கும் நாள்தேய்பிறை அஷ்டமி (அ) தேய்பிறை சஷ்டி (அ) பௌர்ணமி (அ) செவ்வாய் கிழமை (அ) ஞாயிற்றுக்கிழமைராகுகால வேளை இவற்றில் எதுவாக இருந்தாலும் நலம்.
முதலில் கீழ்க்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை 8 முறை காலபைரவர் சந்நிதியில் பாராயணம் செய்யும் போதுஅவரது காலடியில் நாம் தயாரிக்க வேண்டிய கறுப்பு கயிற்றை வைக்கவும். 8 முறை பாராயணம் செய்த பின்புஅந்த கறுப்பு கயிற்றை வீட்டிற்கு எடுத்து வந்து காலபைரவரை மனதில் நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் முன்பாக 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அவ்வாறு பாராயணம் செய்யும் போது 8 பாடல்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் கறுப்பு கயிற்றில் ஒரு முடிச்சுவீதம் 8 முடிச்சுகள் போடவும். பின்பு 9 வது பாடலை பாராயணம் செய்து அந்த கயிற்றை யாருக்கு தேவையோஅவர்களுக்கு கட்டவும். இந்த காலபைரவர் கயிறு செய்யும் போது யாருடனும் பேசக்கூடாது. ஒரு தடவையில்எத்தனை கயிறுகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அது அவரவர் தேவையை பொறுத்து மாறுபடும்.
இவ்வாறு செய்யப்படும் கயிறு சக்தி மிக்கது. பைரவரின் அருளை தரக்கூடியது. எந்த துன்பத்திலிருந்தும்காக்கக்கூடியது. இந்த கயிற்றை செய்பவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் நிரந்தரமாக அசைவம்சாப்பிடுவதை நிறுத்தவும். அவ்வாறு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு தான் கயிறு தயாரிக்கும்வேலையில் இறங்கவும். இல்லையேல் நாய் வந்து கடிக்கும்.
இந்த கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :
1. பயம் போக்கும்
2. தைரியம் தரும்
3. கர்மவினைகளை அழிக்கும்
4. விபத்துக்களிலிருந்து காக்கும்
5. ஏவல், பில்லி, சூனியம், செய்வினை போக்கும்
6. நோய்களையும், தோஷங்களையும் போக்கும்
7. தீய கனவுகளை ஒழிக்கும்
8. கடன்களை தீர்க்கும்
9. பைரவர் அருளை பெருக்கும்.
காலபைரவர் அஷ்டகம் வேண்டுபவர்கள் இந்த இணைப்பினை பின் தொடரவும்.
எங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது. வேறு எதுவும்தேவையில்லை. வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளிபூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட்டு காலபைரவர் கயிற்றினை தயாரிக்கலாம்.
மனப்பாடம் செய்து பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும். எனவே முதலில் அஷ்டகத்தை மனப்பாடம் செய்து விட்டு பின்பு கயிறு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது மிக்க நன்று.
தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் க்லீம் காலபைரவாய நமஹ