அரிதான வாஸ்து தகவல்கள் ......

அரிதான வாஸ்து தகவல்கள் ......

இன்றைய காலத்தில்  நிறைய மனைகள் விற்பனைக்கு வருகிறது சிலர் அதை பெற்று வீடு எழுப்புகிறார்கள் சிலர் அதை சில காலம் கழித்து விற்பனை செய்கிறார்கள் ,
சிலர் விற்பனை செய்ய முடியாமலும் ,சிலர் வீடு எழுப்ப முடியாமலும் அரை குறையாக விட்டு விடுகின்றனர்,
மனையை வாங்கும் பொழுது நன்றாக கவனித்து வாங்காமல்  நம்முடைய பொருளையும் ,பணத்தையும் இழந்து நாம் சிரமப்பட கூடாது என்று சில தகவல்களை நூல்களில் பதித்து உள்ளார்கள் முன்னோர்கள்
அவைகளின் சில தொகுப்பு மட்டும் இந்த பதிப்பு .....

முதலில் அடிப்படை தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் ...
மத்ஸ்ய புராணம் வாஸ்துவை பற்றி விவரிக்கிறது ,வாஸ்து என்பது ஒரு ஆண் தெய்வத்தின் பெயர் ஆகும்.

சிறு புராணம் எளிமையாக ...

சிவபெருமான் அந்தகாசுரனுடன் போர் புரிந்து வெற்றி அடைந்தார் .அப்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன.அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது.
அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது.
அப்போதும் அந்த பூதத்துக்கு பசி தீரவில்லை. அதனால், அந்த பூதம் சிவனை நோக்கி தபஸ் செய்ய ஆரம்பித்தது.
தபஸ்ஸை மெச்சிய சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்றார் வழக்கம்போல். அதற்க்கு இந்த பூமி முழுவதையும் நான் எனது கண்காணிப்பின் வைத்து இருக்கவேண்டும் என்று கேட்டது.அழிக்கும் சக்தியும் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது .
இதை கவனித்த பிரம்மா மற்றும் தேவர்கள்
  அனைவரும் சேர்ந்து அந்த பூதத்தை குப்புற தள்ளிவிட்டனர். குப்புற விழுந்தவுடன், அனைவரும் அந்த பூதத்தின் மேலே உட்கார்ந்துகொண்டு அதை எழுந்திருக்கவிடாமல் செய்தனர்.
அந்த பூதம் எனக்கு பசிக்கிறது என்றது.
அதற்க்கு பிரும்மா சொன்னார்.
பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்வத ஹோமத்தில் கொடுக்கும் பொருட்டகளை நீ உண்டுகொள்.
மேலும், பூமியில் வீடு கட்டுபவர்கள்,உனக்கு ஹோமம் செய்வார்கள், வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாபிட்டுக்கொள் என்றனர்.
பிரும்மாவும் மற்றவர்களும்   அவனுக்கு வாஸ்து புருஷன் என பெயரிட்டனர்.
இதை போல
மனிதனின் கால் அடியை வைத்து தான் அன்று மனை கணிதம் சொல்ல பட்டது ,
இதை இன்று கிராமத்தில் ஒரு 10 அடி துரத்தில் கோவில் உள்ளது என்பார்கள் ,
(காலத்தால் மாறிய பல விவரத்தில் இதுவும் ஒன்று )
 அடி என்றால் அளவு கொண்ட கணிதம் என்று நினைத்து மாற்றி எழுதினார்கள்
 ,உண்மையில் மனிதனின் வயது தான் அது என்று புரிந்து கொள்ள வில்லை ,
இதை வைத்து 11 அடியில்  கட்டினால் சுபம் ,
      12 -அடியில்  கட்டினால் அசுபம் ,16 --அடியில்  கட்டினால் செல்வம் என்று பல வயது கணக்கு விவரம்களை சொன்னார்கள்.அதாவது இவனுடைய 10வது  வயதில் இந்த  மனையில் வீடு கட்டினால் என்று
பொருள் .
இன்று இதை அறியாத மற்றவர்கள் வாஸ்து படி நீளம் ,அகலம் , உயரம் என்று தவறாக புரிந்து உள்ளார்கள் .

இப்படி அடிப்படையில் சரியாக புரிந்து கொள்ளாமல் இன்று இந்த நூல் வைத்து ஒரு மனையில் சிறப்பாக ஒரு கட்டிடம் எழுப்பபடுவது இல்லை .
மேலும்
ஒரு மனையை தேர்வு செய்ய முற்படும் பொழுதே அதில் உள்ள மண்ணை வைத்து அதாவது வாசனையை  வைத்து இதில் வீடு கட்டலாம் கூடாது என்று சொல்ல முடியும் என்று நூல்கள் சொல்கிறது .

இத்தனை துல்லியமாக நம்மால் கவனிக்க முடியாது சில விவரம்களை நாம் தெரிந்து வைத்து கொள்ளலாம் .

1.மனையின் எதிரில் ஒற்றை பனைமரம் ,கிணறு ,ஆலமரம் எருக்கன் செடி,இல்லாமல் இருக்க வேண்டும் .

2.கோவில் கோபுரத்தின் நிழல் ,அல்லது ஸ்தூபியின் நிழலோ மனை மீது விழ கூடாது .

3.மனையில் பாம்பு புற்று ,ஆமையின் ஓடு, உடும்பின் சடலம் இருக்க கூடாது .

4.பெருமாள் கோவிலின் பின்புறம் ,சிவன் /கணபதி கோவில் முன் புறம் வீடு கட்ட கூடாது .

5.  ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

6.மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்க கூடாது ..

7. கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும் .

8.பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டு உள்ள வார சூன்யம் என்ற நாட்களில் மனை
முகுர்த்தம் செய்ய கூடாது ...

9.சூரியனின் காலற்ற நட்சரத்தில் ,செவ்வாயின் தலையற்ற நட்சரத்தில் ,குருவின் உடலற்ற நட்சரத்தில்,---  மனை முகுர்த்தம் செய்தால் வீடு கைமாறி ,அல்லது நின்று போகும் ..

10.அஸ்வினி ,ரோகினி ,ஹஸ்தம் ,அனுஷம் ,திருவோணம் ,உத்திரட்டாதி ,பூசம் ,ரேவதி ,சதயம் நட்சரத்தில் செய்ய உத்தமம் என்று நூல்கள் சொல்கிறது ....

அடுத்த பதிவில் வீட்டில் அமைக்க வேண்டிய மேன்மைதரும் பொருட்கள் பற்றி ....